May 17, 2015

2015 கவிதைகள் 751 to 760

ஒற்றை
இரவு போதும்
வானின் நிலவையும்
இருளின் நட்சத்திரத்தையும்
நாம் இருவரும்
சேர்ந்து ரசிக்க.....      751

எல்லைகள் அற்ற
இந்த காதல் உலகத்தில்
நீயும்
நானுமாய்
சேர்ந்து வசித்துக் கொள்ள
ஒரு வீடும்
ஒரு காலமும்
இல்லையென்பதே
உண்மை!!      752

சங்கீத குரலில்
என்னை நீ
நெருங்கும் போது
என் சகல
சங்கதிகளையும்
வெளியேற்றி விடுகிறாய்!   753

மகிழ்வாய்
நான் துயில
என் குயிலின் ஓசை
ஒலிக்க வேண்டும்
அதிகாலையிலும்....       754

மனம் அனுமதித்தால்
காலம் சம்மதிப்பதில்லை
காலம் சம்மதித்தால்
மனம் அனுமதிப்பதில்லை...  755

அலங்கரித்து
நான் நின்றால் கூட
அமைதி காக்கிறாய்
எத்தகைய பொறுமை உனக்கு?
போதும்
உன் பொறுமையோடு
களைத்து விடு
என் அலங்காரத்தையும்...  756

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் இன்னும்
நீ இளமையாகவே
இருக்கப் போகிறாய்
என் கவிதையின் வழி....   757

சில நேரம்
மெளனத்தாலே
என்னை
நீ உடைத்து விடுகிறாய்...   758

கொடிய இருளும்
அகன்ற அகல் விளக்கும்
வழுகும் எண்ணையும் அற்ற
தீபம்- உன் கண்கள்....     759

காலத்தை
வீணடிப்பதில்
எந்தவொரு பொருளும் இல்லை
இருந்தும் வீணடிக்கிறோம்
காலத்தோடு காதலையும்...  760

No comments:

Post a Comment