May 17, 2015

2015 கவிதைகள் 721 to 730

என்னுள் நிறையும்
கண்ணீரை
வெந்நீராய் காய்ச்சி
உன் இதயத்தின்
வலிகளுக்கு
ஒத்தனம் கொடுக்க வேண்டும்... 721

உணர்வால்
உடைந்த காதல்
காதலின் உணர்வால்
என் உயிரே!
என் உயிர்
உன்னைத் தேடுகிறது...   722

உலகத்தின்
மெளன ஓசைகள்
அனைத்தும்
என் முன்னும்
என் இதயத்தின் முன்னும்
கேட்கிறது
உன் முத்தத்தின் வழியே!!    723

என் மனம்
ஒன்றை மட்டுமே விரும்புகிறது
உன்னோடு
தனி அறையில் அமரும் போது
அது மெளனம் மட்டுமே!!   724

காசு கொடுத்து
கருப்பட்டியை
நானும் வாங்கி வந்தேன்
உன் கடிகாரத்தின்
நேரங் கா(கூ)ட்டி
என்னை அழைத்தாய்
கருப்பட்டியின்
வாசம் தீர்ந்த போதும்
சமையலறைப் பெட்டியில்
நானும் பத்திரப் படுத்தினேன்
கருப்பட்டியை....        725

சட்டென்று
வேகம் பிடித்து
எரியும்
தீக்கதிர் போல
என்னுள்ளும் எரிகிறது
உன் காதல் தீ....        726

உன்னோடு
உறங்கிக் கழிக்க
வேண்டிய நாட்களையெல்லாம்
நினைத்து
இப்போது உறங்காமல்
கிடக்கிறேன் என் உயிரே!!  727

சிலுவைகளை
தாங்கி பிடிக்கும்
கட்டிடம் போல
உன் சில்மிஷ
காதல் வரிகளை
ஏந்தி பிடிக்கிறது
இக் காகிதம்...            728

சின்ன சின்ன
அலைகளின் ஊடே
பயணிக்கிறது
உன் காதல்
என் கண்களின் வழியே!!  729

இசைகளை
இசைக்கவிட்ட படியே
உன் காதலின்
திசைகளில் நடக்க
ஆரம்பிக்கிறேன்
உன் நடையின் சாயலை
தனித்துவமாய்
நானும் ரசித்தப் படி...      730

No comments:

Post a Comment