May 29, 2015

2015 கவிதைகள் 851 to 860

நான் கட்டிய பூவில்
என் காதல் வைத்தேன்
நீ பூட்டிய வெட்கத்தை
உடைக்கும் படியான
வாசத்தை சேர்த்தேன்..   851

இரவின் வாசம்
கூட்டிய பூக்கள் எல்லாம்
பகலின் நேசம் கூட்டுகிறது.. 852

இவ்விரவை
உன்னோடு நடந்து
நான் கழிக்க வேண்டும்...  853

கனவில் உன்னை
நினைக்கும் போதே
இத்தனை கிறக்கம்
என்றால் நினைவில்??   854

நீ செல்லும் இடமெல்லாம்
என் முத்தத்தை
நட்டு வைப்பேன்
அது
உன் முகத்தில்
புன்னகையாக மலர.... 855

உன் காதல் அருவியில்
ஒரு சிறு துளி தான்
என் முத்தமும்
நான் மொத்தமும்...   856

இரவு தீரும் வரை
மெளனமாய்
உன்னோடு பேசிக் கொண்டு
இருக்கிறேன்
மெளனத்தில் தான்
எத்தனை வார்த்தைகளை
உதிர்க்கிறது உன் கண்கள்..  857

மரணம் வேண்டும்
உன்னை மனனம்
செய்யும் ஆற்றல்
என்னிலே குறையும் போது.. 858

சூரியனே
வா!
பனித்துளியாய்
நான் உன்னில் கரைய!!   859

காகிதத்தில்
நான் நிரப்பிய
என் காதலெல்லாம்
என்னை காலமெல்லாம்
நினைக்க வைக்கும்
உன்னை வரும் காலமெல்லாம்
காண நினைக்கும்...   860

No comments:

Post a Comment