உன் கை விரலுக்குள்ளும்
இத்தனை காதலா?
என்னை விடாமல்
பிடிக்கும் போது கூட.... 801
உன்னிலிருந்து
என் பார்வைகள்
இடம் மாறும்
போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கண்களை தான்
பார்க்கிறது.... 802
காமம் நிறைந்த
இரவுக் கோப்பையை
பருகி பருகி
காதலாய் மாற்றி
உன்னில் தழுவ விடுகிறேன்
என் இதழின் வழி.... 803
அந்நிகழ்வு
நிகழும் போது
வேண்டிக் கொள்கிறேன்
காதல் கடவுளிடம்
அந்நிகழ்வில்
துளி அளவும்
காமம் கலந்து விட கூடாதென்று.. 804
இவ்விருட்டில்
என் இதயத்தின் ஓசை
தனியாய் கேட்கிறது
உன் காதலையும்
உன் ப்ரியத்தையும்
இழந்து நான் தவிக்கும் போது.. 805
காத்திருக்கிறேன்
அன்பே!!
கவிதைக்காக அல்ல
உன் காதலுக்காகவும்
உன் காதல் முத்ததிற்காகவும்... 806
மெளனத்தோடு
நீ சிரித்தால்
இந்நேரம்
நானும் சிரித்துக் கொள்வேன்
மெளனத்தோடே!
நம்
முன் நேர மெளனங்களை
நினைத்து.... 807
அடுத்த கவிதை
என்ன எழுதுவது என்று
உன் இதயத்திடமே
கேட்டுக் கொண்டு இருக்கிறேன்
இறுக்கமாக
என் கண்களை மூடிய படி.. 808
காய வைத்த
வெந்நீர் தீரும் அளவிற்கு
உன்னை வேர்வையிலே
குளிக்க வைப்பேன்.... 809
அப்பொழுது
இரவு முழுவதும்
உன்னை நினைத்தேன்
இப்பொழுது
இரவாகவே
உன்னை நினைக்கிறேன்... 810
No comments:
Post a Comment