உன்னைப் பற்றியும்
உன் நினைவைப் பற்றியும்
ஆராயும்போது
என்னுள் எப்பொழுதும்
ஆட்கொள்கிறது
உன் ஆழமான அன்பின்
முத்தங்கள்... 821
இனி நீ தரும்
முத்தங்கள் தான்
என் வாழ்வில்
நான் வாழ்வதற்கான
சந்தர்பங்களை தருகிறது... 822
நம்
இருவரால்
ஒத்துக்கொண்ட காதலை ஏன்
காலம் ஒருபோதும்
ஒத்துக்கொள்வதில்லை.... 823
நீ என் முத்தங்களை
ஏற்றுக்கொள்
அதன் வழியே
நம் காதலின் ஏங்கங்களை
தீர்த்துக் கொள்... 824
உன் அழகில்
ஒவ்வொரு நாளும்
கூட்டி விடுகிறாய்
முத்தத்தின் அலகை... 825
உன் முத்தம் என்ற
கவிதைக்காக
காத்திருக்கிறது
காகிதமாய் என்
இதழ்கள்.... 826
உன் கை விரல் என்ன
காந்தள் மலரோ
என் கன்னங்களை
பற்றிக் கொள்ளும் போது... 827
அல்லி மலர் போல
இரவில் மலர்ந்து
காலையில் என்னுள்
குவியும் காதல் நீ!! 828
ஒற்றை இதழை கொண்ட
குவளை மலர் நீ!! 829
உன் புன்னகை
ஒரு மலர் என்றால்
உன் இடை தேன் சுரக்கும்
ஓர் மலர்க்குழு... 830
No comments:
Post a Comment