March 22, 2015

2015 கவிதைகள் 521 to 530

என் ஆழ்ந்த
உறக்கத்தின் இடையே
உன்னை அழைக்கிறேன்
கனவினில்
உறவாட
உரையாட
உறங்கும் என்னை
உறங்கிய என்னை
உன்னை கொண்டே
உறங்க வைக்கிறேன்
என் காதலியே!        521

அதிக சுகம்
தராத இக் கனவை
நான் நிராகரிக்கிறேன்
மீண்டும்
உறங்கி உறங்கி
உன் முத்தத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
என் படுக்கையறையில்... 522

பாதி உறக்கத்தில்
என்னை கட்டிப் பிடித்துக்
கொள்கிறாய்
மீதி உறக்கத்தில்
நான் உன்னை
கட்டிப் பிடித்துக்
கொள்கிறேன் காலை வரை..  523

பாதையை
தேடி ஓடும்
ஓர் நதியினைப் போல
உன் பாதம்
தேடி ஓடுகிறது
என் கனவு...      524

அதிகாலையில்
கொஞ்சிப் பேசும்
உன் கொலுசின் ஒலியில்
நானும்
கெஞ்சிக் கேட்பேன்
இன்னும்
ஓர் முத்தம்
நீ குளிப்பதற்கு முன்னால்... 525

நம் காதல்
குடையை
மடக்கி விடுகிறாய்
இரவின் முத்த மழையில்...  526

சிட்டுக்குருவியை விட
வேகமாய் பறந்து
விடுகிறாய் வெட்கத்தில்
சின்னதாய்
என் கன்னத்தில்
ஒர் முத்தமிட்டு...        527

உன் கண்களை
எதிர் பார்த்து
காத்திருக்கிறது
என் " காதல் கவிதை"   528

இக் கண்கள்
உன் கண்களை
தேடுகிறது,

இவ்விதழ்
உன் இதழை
நாடுகிறது,

இவ்வுடல்
உன் உடலோடு
உறவாடுகிறது

இருந்தும்
இக் கண்களின்
வழியே
வழிகிறது
இக் கண்ணீர் துளி
உன் பிரிவில்...        529

இக் கண்களின்
வழியே
கனவில் நான்
உன்னை துரத்துகிறேன்
காதலின் இடத்தை
நீ அடைந்ததும்
திமிராய் என்னைப்
பார்த்து சிரிக்கிறாய்
நான் இப்போது
வெட்கப்பட்டு உன்
அருகே அமர்கிறேன்,

கனவில் நான்
கண்ட
கண்களை கொண்டே
உன் காதலை
எனக்கு அளிக்கிறாய்
மிக அமைதியாய்
மிக அமைதியான
இந்த இடத்தில்
ஆடம்பர முத்தம்
ஆரம்பிக்கப்பட்டது உன்னால்... 530

2015 கவிதைகள் 511 to 520

நாகம்
தெரியும் என் கனவில்
மோகம் தரும்
உன் நகக் கீறல்களின்
முடிவில் நானும்
என் கண் மூடுகிறேன்
உன் இதழை மூடியபடி...    511

உன்னைப்
பார்த்ததும்
என் விழியில்
காதல் புறாவை
பறக்க விடுகிறேன்
நீயோ
உன் சிரிப்பினில்
சமாதான புறாவாக
உன் முத்தத்தை அல்லவா
பறக்கச் செய்கிறாய்..       512

வான வேடிக்கை நிறைந்த
ஊர்த் திருவிழாவை
விட்டு விட்டு
நம் வீட்டின்
உள் அறையில்
என்னோடு உரையாடல்
வழியே உறவாட
என் அழைப்பிற்காக
காத்திருக்கிறாய்,
நானும் அழைத்தேன்,
அலரும் ஒலிப் பெருக்கிகளின்
ஒலியை மீறி
நீ பேசும்
வார்த்தைகளில்
ஓர் அன்பு மிகுந்த
மெளனம்,
மெளனத்தின் இடையே
சிறு முத்தம்,
இது போதும்
திருவிழாவை நான்
இங்கிருந்து கொண்டாட...     513

ஊர்/வட்டாரம்
சுற்றும் தெய்வத்தை
பார்த்து நானும்
சிரித்தேன்
என்னில் வட்டமிடும்
உன் முத்தத்தை நினைத்து,
பச்சை வண்ண
பட்டு-செலுத்தி
தேங்காய் உடைத்து
முறையாக நானும்
வேண்டிக் கொண்டேன்
உன் முதல் முத்தம்
மீண்டும் வேண்டுமென..   514

அலங்கரித்து இருக்கும்
அன்னை-மாரியை
தரிசிக்க வருவதைப் போல
என்னை நானே
அலங்கரித்து
உன்னை தரிசிக்க
வருகிறேன்
என் காதல் கடவுளே!      515

கோவிலில்
சிவப்பு, வெள்ளை
பூக்களை தேர்ந்தெடுப்போர்
மத்தியில்
நான் எப்பொழுதும்
தேர்ந்தெடுப்பது
உன் "காதல் பூவை"
மட்டும் தான் என் காதலே!!   516

மல்லிகை மாலைக்கு
நடுவில்
அன்னை-மாரியின்
முகம்,
என் இதயத்தின்
நடுவில்
உன் முகம் - முகா!
நான் அன்னையை
வணங்கும் போது கூட...      517

தீபங்கள்
ஏற்றும் இடத்தில்
அன்று
நான் உன்னை
எதிர்பார்க்கவில்லை,
இருந்தும்
அன்று
எதிர்பார்த்தேன்
தீப ஒளியில்
எதிர்பாராத
உன் முத்தத்தை.....         518

பொது தரிசனம்
சிறப்பு தரிசனம்
என்ற இக் கோவிலில்
காதல் தரிசனம்
என்ற இன்னொரு
பாதையை
எனக்கு மட்டுமே
நீ வைத்து இருக்கிறாய்..  519

கோவில் வாசலில்
நான் வாங்கும்
மல்லிகை பூ
கோவில் கருவறையில்
வீற்றிருக்கும்
அன்னை-மாரிக்கு
மட்டும் அல்ல
என் காதல்
கருவறையில்
அமர்ந்திருக்கும்
என் காதலுக்கும்....     520 

March 21, 2015

Something

Something have in everything
Everything have something
But I have nothing in the world

March 20, 2015

இன்மை

இறந்த என்னை நினைத்து எத்தனை முறை நான் அழுது கொண்டாலும் இன்னும் என் இதயம் துடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்தி வேளைகளில் இன்னும் அதிகமாக.

கண்ணில் தொடங்கி,
கண்ணில் பேசி,
கண்ணீராய் கரைந்து
என் உடல் கரைகிறது
உன் மீதான ப்ரியத்தால்

எத்தனையோ முறை இரவில் நெல் அவிக்கும் போது என்னால் எரியூட்டப்பட்ட தென்னம் மட்டைகள், இப்போது இந்த இரவில் எரிகிறது என் கண்களில். மீண்டும் அணைகிறது கண்ணீரில்.

காரணங்கள் கூறி,
இக் காதலை
இக் கடலில்
இக் கரையில்

நீ கரைத்து இருக்கலாம்.

இருந்தாலும் பரவாயில்லை.

நானே உணர்வேன்

என் நிலமையை
உன் நிலமையை
என் நிதியின்மையை
என் மதியின்மையை
என் அழகின்மையை
நான்
உன் மதமின்மையை
இன்னும் என்னுள்
இருக்கும் அத்தனை
இன்மையையும்...

-SunMuga-
20-03-2015 22.46 PM

March 19, 2015

2015 கவிதைகள் 501 to 510

நீண்டகால இடைவெளிக்கு
பின்
நாம் சந்திக்கும் போது
எப்படியேனும்
நீ என் கண்களை
தான் காண போகிறாய்
இருந்தும்
அலங்கரித்து கொள்கிறேன்
என் கன்னங்களை
நீ முத்தமிட.......                       501

சில கணங்களில்
முத்தத்தின் 
அர்த்தம் அறிந்தே
சிரிக்கிறது
உன் நைட்டியின்
கருப்புப் பூக்கள்....             502

வார்த்தைகளின் வழியே
பிறக்கும்
கவிதையில்
ஏனோ
கண்ணீரோடு
உன் காதலே பதிகிறது..   503

என் முகத்தின்
சிரிப்பிற்கும்
என் சிந்தனையின்
சிறப்பிற்கும்
உன் பொறுப்பு
மிகுந்த முத்தமே
காரணம்..                504

காதலின்
அழுகையினையும் மீறி
உன் காதலே
என்னை இன்னும்
வாழவும் சொல்கிறது
வாழவும் செய்கிறது...     505

இது இரவு
என்பதற்கு
அங்கீகாரம்
உன் முத்தம்
மட்டுமே எனக்கு...      506

இந்த அந்தி
நேர மழையினில்
கூட தொடரும்
ஓர் நிசப்தம்
உன் மெளன முத்தம்
நீ இல்லாது
நான் ரசிக்கும் போது கூட..  507

அன்பே!
என் காதல்
உலகம் ஒரு நாளும்
உன் முத்தம்
இல்லாமல்
சுழல விரும்பவில்லை
இந்த உலகில்...           508

இதோ
வளர்ந்து நிற்கிறது
உன் காதல்
அந்த வானம் வரை
உன்னை வாரி
அனைத்துக் கொள்ள
ஏங்கித் தவிக்கிறது
இந்த வண்ணமற்ற
என் கண்கள்...         509

உனக்காக
நான் எழுதிக் கொண்டு
இருக்கிறேன் அன்பே!
இந்த தாலாட்டு பாடலை
நீ உறங்குவதற்கு அல்ல
உறங்காமல் என்னை
நீ அனைப்பதற்கு...     510

March 15, 2015

2015 கவிதைகள் 491 to 500

இரவுக்காகவும்
என் இதழுக்காகவும்
நீ எப்பொழுதும்
காத்திருப்பது இல்லை
நீ தொடங்கிவிடுகிறாய்
உன் முதல் முத்தத்தை....    491

இரவு
ஓர் அதிசயம்
ஆக்கப்படுகிறது
உன் இதழால்....         492

பல நாட்கள் கடந்தும்
உன் நாக்கின் ருசி
என் காதலின்  பசியை
கூட்டத் தான் செய்கிறது.. 493

அறிமுகமான காதல்
ஆரம்பிக்கப் பட்ட முத்தம்
அறிமுகமாக
ஆரம்பிக்கப் பட்ட
ஓர் ஊடல் இப்பொழுது..  494

பிறந்த
நெருப்பிற்கு
காதல் என்று
பெயரிட்டு
முத்தத்தை உணவாக
ஊட்டும்
ஒர் அழகிய தாய் "நீ"     495

எரியும் விறகின்
நிழலில்
நாமும் உறங்கிக்
கொள்ளலாமா?       496

நம் வீட்டில்
காகிதங்களை
அடுக்கி
படுக்கையறை எழுப்புகிறேன்
உன்னால்
எப்போது வேண்டுமானாலும்
கவிதை எழுதப்படலாம்
என்பதால்....         497

நீ விரும்புமாறு
நான் எப்போதும்
எழுதுகிறேன்
ஓர் கவிதையை
ஓர் முத்தமாக....     498

எப்படி
நானும் விலக்கிக்
கொள்வேன் அன்பே!
உன் முத்தத்தின்
ஒலியில் இருந்து
என் செவியை!!   499

எப்பொழுதும்
நாம் சேர்ந்து
உண்ணும் உணவு
"முத்தம்"
காதல் வேளையில்
கனவின் அறையில்....  500

2015 கவிதைகள் 481 to 490

அடம் பிடித்துக்
கொள்கிறாய்
அடை மழையின்
முடிவில்
என் அணைப்புக்கு
நடுவில்
மீண்டும் ஒர்
மழை வேண்டுமென...   481

சிறகை நாடும்
இறகைப் போல
உன் இதழை
தேடும்
என் இதயம்...        482

வெளிச்சங்கள்
வெளியேறாமல்
வெப்பங்கள்
அதிகமாகமல்
இன்னும்
அதிகமாய்
எரிகிறது
நம் "காதல் தீ"     483

முந்தைய
நிமிடத்தில்  இருந்து
பிந்தைய
நிமிடம் இன்னும்
ஆழமாகிறது
ரகசிய முத்தத்தால்...  484

இமைகளை
திறந்து மூடி
மீண்டும்
இமைகளை
திறந்து
நீ மூடினால்
ஏனோ
காதல்
இதழ்களை
மூடிக் கொள்கிறது..     485

வேகமற்ற
இரவில்
மோகத்தோடு
இதழ் தழுவும் போது
மெதுவாய் ஓர்
கனவு
நதியில் நீ
நிர்வாணமாய் நான்
முழ்கி எழுந்ததும்
கலைந்தது
நீ
கனவோடு
என்னை கட்டி அணைத்தபடி
விடிந்தது இரவு...   486

எத்தனை முறை
கொடுத்துக் கொண்டாலும்
எடுத்துக் கொண்டாலும்
முத்தம்
இன்னும்
முத்தமாகவே இருக்கிறது
என் மொத்த
வாழ்க்கையும் உருக்குகிறது.. 487

அதிக முத்தங்களை
பெற்றுக் கொண்ட
அவ்விரவு
இரவை மீறிய
இன்னொரு இரவு...    488

தொலைத் தூரத்தில்
இருக்கும்
இரவின் முன்
உன்
இதயத் தொடுதல்
எத்தனை அழகு!
என்
இதயம் தொட்டுக்
கேட்கிறது
உன் காதல்
இரவு வேண்டுமா? என்று..  489

இரவிலிருந்து
இமை மூடி
இன்னொரு இரவை
மீட்டெடுப்பதை போல தான்
உன் இதழிலிருந்து
என் இதழை மூடி
மீட்டெடுக்கிறேன்
இன்னும்
ஓர் முத்தத்தை....       490

2015 கவிதைகள் 471 to 480

கூர்மையாய்
பார்க்கிறேன்
கொழுந்து விட்டு
எரியும் அந் நெருப்பை
உன்னை நெருங்கிய
அந்தக் கனல்
மிகுந்த கணங்களை
நினைத்தப் படி...            471

நெருக்கத்திற்கு முன்
எரிந்த காதல் தீ
நெருக்கத்தின் பின்
குளிர்ந்தது...              472

ஏன் குளிர்கிறது
அன்பே
இந்த "காதல் தீ"....   473

காரணமாய் தான்
ஏற்றி வைத்தாய்
மெழுகுவர்த்தியை
என் இதழை மட்டுமே
நீ மேய்வதற்கு..          474

குளித்து முடித்த
கையோடு
குளிர் காய்கிறாய்
என் இதழ் தீயில்...    475

உன்னையும்
உன் கண்ணையும்
பார்த்த உடனே
பற்றி விடுகிறது
ஒர் காதல்
கலந்த "காமத் தீ"       476

காம வெளிச்சத்தை
காதலால்
குறைத்துக் கொள்
முத்தத்தால்
நிரப்பிக் கொள்
இந்த
இரவு அறையில்...       477

வேண்டாத
இடங்களில் கூட
முத்தமிட
வேண்டுகிறாய்
வேண்டுமென்றே
நானும் இடுகிறேன்
வேண்டாத
இடங்களில் கூட....      478

வழிந்தோடும்
என்
முத்தங்களை
ஓர் இடத்தில்
நிறுத்தி வைக்கிறேன்
மகிழ்ச்சியோடு
நீ
ருசிப்பதற்கும்
ரசிப்பதற்கும்.....          479

நீ இடும்
முத்தத்தை
கணக்கீட்டு கொள்கிறேன்
என் மறு
முத்தத்தின் வழியே..    480

2015 கவிதைகள் 461 to 470

உம்மியிட்டு
தீயை பரப்பியவன்
உன்
உம்மாக்களையிட்டு
இவ்விரவை நிரப்புகிறேன்..   461

சுடும்
என் இதழ்கள்
போதும்
உன் சுண்டு விரல்
அதை குளிர்விக்க..        462

இருட்டை மீறி
வெளியேறும்
வெண்புகை இரவில்
உன் இதழோடு
என் இதழை
மாற்றி வெளியேறும்
நம் புன்னகை....            463

தீயிலிருந்து
உடையும்
தீப்பொறி போல
உன்
தீண்டலில் இருந்து
உடைகிறது
ஒர் முத்தம்...           464

தென்னம் மட்டையில்
தேங்கிப் போன
நெருப்பின்
ஒளியில்
உன் கண்ணம் பட்ட
என் இதழ்களை
தொட்டுப் பார்க்கிறேன்...   465

அள்ளி வீசிய
உம்மிகளை
உற்றுப் பார்க்கிறேன்
நான் உன்னில்
கரைந்ததை போல
அது
நெருப்பில் கரைகிறது...   466

அடுப்பில்
சேர்ந்து போன
உம்மியை
கிளறிவிட்டு எரிப்பதை போல
உன் நினைவுகளை
உன் முத்தத்தால்
கிளறிவிட்டு
எரிக்கிறேன்...     467

மழைவிட்ட
அவ்விரவில்
விறகுகள் சேர்த்து
எரிக்கப்பட்ட போது
தீயின் கத கதப்பில்
வெளியேறிய வேர்வைகளை
துடைத்து விட
உன் விரல்
இல்லாதது தான்
என்னை அழ வைத்தது
விடியலை தாண்டியும்..   468

மகளோடு
விளையாடும்
என் மகளோடு
நான் மடி சாய வேண்டும்
என் மகனைப் போல
ஓர் மகனாக
இதை
வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்
அந்தி நேர
மழையிடம்......          469

கொட்டும் மழையில்
உம்மியை மூடி
பாதுகாப்பதைப் போல தான்
கொளுத்தும்
வெயிலில்
என் இதழை மூடிக் கொள்கிறேன்
உனக்கு சுடமால் இருக்க...  470

March 12, 2015

தெரியாத ஒன்று

எத்தனை மணி நேரம்
உன்னோடு உறவாடி
இருப்பேன்
மிஞ்சிப் போனால்
ஒன்று அல்லது இரண்டு
நாட்கள்
என்னையும் மீறி
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்றை
இழந்து கொண்ட
தருணங்களில் அதுவும் ஒன்று
எப்படியேனும்
உன்னிடம் சொல்லி விட
நினைத்து
தவித்து
இறுதியில் தப்பாய்
போன காலம் அது
பெற்றோரை பற்றி
எதுவுமே நினைவில்
இல்லை
இருந்திருந்தால் நான்
இந்த முடிவை
ஏன் எடுத்திருப்பேன்
தவறு தான்
மன தடுமாற்றத்தில்
மனம் தவித்து
போனதில் எடுத்த முடிவு அது
வேலைக்கு சென்ற
இடத்தில்
வேலைகளை மீறி
எங்கு பார்த்தாலும்
உன் முகம்
என் தவறுகளின்
ஒரு ஞாபகம்
உன் ஞாபகத்தில்
இருந்து
நான் தப்பித்துக் கொள்ள
வேறு இடம்
தேடி தான் இங்கு
வந்தேன்
என்று என்னை தவிர
வேறு யாருக்குமே
தெரியாத ஒன்று....

March 11, 2015

மறுத்தல்

மறுக்கப்பட்ட பின்
எந்தவொரு வேதனையும்
இல்லை என்றே
நினைக்கிறேன்

இருந்தும் இருக்கிறேன்
இரவின் வேதனையோடு

இன்று இரவு
தான் தெரிகிறது
இரவு என்பது
உலகத்தில் உள்ள
அனைவருக்கும் பொதுவானது
இல்லை என்று
நான் உறங்காத போது...

உடை

சில நேரங்களில்
நான் உடுத்தும்
உடையே உரக்க
சொல்லிவிடுகிறது
நான் ஒரு ஏழை என்று..

தெரு

ஊரின்
உன் அத்தனை
நினைவுகளையும்
சுலபமாக கடந்து
தப்பித்து வந்துவிட்டதாய்
நினைத்துக் கொண்டு
இருந்தேன்
உன் பெயரிடப்பட்ட
இந்த தெருவுக்குள்
நுழையும் வரை...

வெறுமை

வெறுமை
நிறைந்து இருக்கிறது
இந்த அலுவலக அறையில்
முகப் பதிவில்
முகம் காட்டும் போது
அவரவர் அவரவர்
வேலைகளை
செய்யும் போது கூட
நிதானமாக காற்றில்
பறக்கும் காகிதத்தை
பார்க்கும் போது கூட
நகல் மிஷினில்
நகல் எடுக்கும் போது கூட
இண்டர்நெட்டில் நடிகையின்
படம் பார்க்கும் போது கூட
ஒருவர் பற்றி
இன்னொருவர்
குறை கூறும் போது கூட
அலைப்பேசியின்
மறுமுனை ஆளின்
குரலை கேட்கும் போது கூட
சுவை மிகுந்த
தேநீர் பருகும் போது கூட
பணி முடிந்து
முகப் பதிவில்
முகம் பதிந்து
வீடு திரும்பும் போதும் கூட
கூடவே வருகிறது
வெறுமை வீட்டினில் கூட...

தன்னை அறிதல்

என்னைப் பற்றி
நான் அறிந்து
கொள்ள நீ
ஒரு காரணமாய்
இருக்கலாம்
காரணம் அற்ற
இவ்வாழ்க்கையில்
நான் அறிந்த
கொண்ட ஒரு
விசயம்
நான் எப்படியேனும்
இறந்து விடுவேன் என்று
இறப்பதற்கு எதற்கு
நீ வேண்டும் என்று
இப்போது யோசிக்கிறேன்
நீ வாழ பிறந்து
இருக்கிறாய் இவ்வுலகத்தில்
உனக்கென ஓர்
இடமும் உயிரும்
இல்லாமல் போய் விடுமா என்ன
நான் இவ்வுலகில்
இல்லாத போதும்...

கடும் புயல்

கடும் புயல்
கண்ட பயம்
என் வாழ்க்கையின்
மீது எனக்கு
இருக்கத் தான்
செய்கிறது
ஏதோ ஒன்று
என்னை துரத்தும் போதும்
ஏதோ ஒன்றை
நான் துரத்தும் போதும்
ஒரு போதும்
என்னை நான்
சகித்து கொள்ள
முடியவில்லை
சாவை தேடும்
ஒரு இழவின் வாத்திகன் போல
ஏதோ ஒன்றை தேடிக்
கொண்டு இருக்கிறேன்..

விலைமகள்

விலைமகள்
ஜாடையில் சொல்கிறாள்
நீ அழகு என்று
ஜாடையில் நானும்
சொன்னேன்
கலைமகள்
காத்திருக்கிறாள் என்று...

தூய்மை

கண்களில் இருந்த
கண்ணீரை
நான் வடிப்பது
இல்லை
உன் நினைவால்
இதயத்தில் கசியும்
தூய்மையான ரத்தத்தால்..

விட்டெறிந்த கல்

கோபத்தில்
கல் விட்டெறிந்தேன்
என் காதல் மீது
அது மீண்டும்
என்னையே வந்தடைந்து
கண்ணீரை தந்தது
ஒருதலை காதல்
என்பதால்...

2015 கவிதைகள் 451 to 460

மெளமான மழையில்
மெளமான உன் முத்தம்
மெளனம் நிறைந்த
இவ்விரவில்
மெளனமாய் நான்
ரசிக்கிறேன்
ருசிக்கிறேன்
புசிக்கிறேன்...           451

இரவின் மெளன
மொழியுடன்
உன்னோடு பேசிக்
கொண்டு இருக்கிறேன்
மிகவும் மெளனமாக....    452

மெளனம் நிறைந்த
இவ் அறையில்
என் தனிமையின்
மரண ஓலம்
ஓசைகள் இன்றி
நீ பேசும் போது கூட...       453

என் தனிமையை
நீக்கிக் கொள்ள
எவ்வழியும் இல்லை
என்று தான்
நினைத்துக் கொண்டு
இருந்தேன்
உன் இதழால்
நீ முத்தமிடும் வரை...       454

அறையில் இருக்கும்
அத்தனை ஜன்னலையும்
இறுக சாத்திவிட்டு
இறுக்கமாக நீ
அனைத்த அந்நொடி
என் அத்தனை
சந்தோச ஜன்னலையும்
திறக்கிறது...                 455

உன் கால்
விரலின் ரேகை கூட
பதிந்து
புதைந்து
கிடப்பது எத்தனை
பாக்கியம்
என் இதழில்...             456

தூக்கம்
கலையாத கண்களில்
ஏனோ
இரவின் ஏக்கங்களே
நிறைந்துள்ளது..        457

விலகிய வெளிச்சம்
நெருங்கிய முத்தம்
அது தான்
இரவின் சித்தம்...       458

ஏன் நினைத்தாய்
என்னை
இப்போது பார்
என் இதழ் சுடுகிறது
வா!
கனவிலாவது வந்து
குளிர்வித்துப் போ!!       459

நீர் போன
பாதைகள்
ஆறுகளாக மாறும்
நீ போன
பாதைகள்
என்
காதலாக மாறும்...         460

2015 கவிதைகள் 441 to 450

இன்னும்
பெயரிடப் படாத
அந்த முத்தத்தின்
வழியே பிறக்கிறது
"காதல்"என்று
பெயரிடப்பட்ட
காதல்.....                    441

அடம்பிடித்து நீ
தரும்
அந்தி மழை முத்தம்
ஆருயிராய்
ஆனந்தம் தரும்
அன்மையில் நீ
தந்த முத்தம் போல...      442

இருள் நிறைந்த இரவு
இன்பமாக
உன் முத்தம்
இன்னும் ஒர்
உயிர் பிறக்கும்
காதலாக....           443

முத்தமிட்டு நீ
திரும்பும் போது
நானும் முத்தமிடுகிறேன்
நீ திரும்பிய
வழியை கடந்து...        444

இரவு நேர
இதயம் இயல்பாகவே
கேட்கிறது ஒர்
இயல்பான முத்தம்
உன்னிடம்
உன்னிடமிருந்து.......         445

உன் வீட்டில்
தடம் ஏதும் இல்லை
தடங்கள் இல்லா
உன் மென்
இதழ் முத்தத்தின்
நினைவுகளை தவிர...      446

நம் வாழ்க்கையின்
அனைத்து முத்தங்களை
வாங்கிய அந்த
வீட்டின் அறை
இன்னும்
சந்தோச தோணியில்
சிரித்துக் கொண்டு தான்
இருக்கிறது நம்மை தவிர..  447

விடுமுறை நாளில்
உலகம் சுற்றுவதாய்
நினைத்து
உன் இதழை சுற்றுகிறேன்.. 448

இரவின் நன்றிக்கு
பதில் அதே
இரவை உனக்கு
நன்றியாக
அளிக்கும் வரம்
மட்டும் வேண்டும்....       449

என் இந்நிமிட
தனிமையை சிதைக்க
உன் முத்தத்தின்
நினைவுகளே போதும்...    450

March 10, 2015

2015 கவிதைகள் 431 to 440

சீறும் நதிகளை போல
உன் நினைவுகள்
என்னுள் நகர்கிறது
நதியினை மீறி
முத்தமும் வழிகிறது..        431

மரங்களை காக்கும்
வனத்தை போல
வனத்தை மீறும்
அழகை போல
நீ தான்
எப்போதும் எனக்கு....       432

மலர்ந்த காதல்
வளர்கிறது
உலகத்தின் மறுமுனை நோக்கி..    433

யாராலும் வாசிக்கக்கூடிய
என் கவிதை
உன்னால் நேசிக்கப்
படுகிறது என் உயிரே!     434

கன மழை
பெய்யும் இவ்விரவில்
சிறுக சிறுக
உன் முத்தம்
சேர்க்கிறேன்
இரவின்
ஒளியை கடந்து....          435

புன்னகை புரியும்
கடவுளும் நீ
என்னை உன்னுள்
புதைய சொல்லும்
தேவதையும் நீ
உன்னிலிருந்து
மீண்டெலுந்த நான்
நானாக மாறும் போது
நாமாக இருப்பதே
மேல் என்று நினைக்கிறேன்.. 436

எதிலிருந்து மீள்கிறேன்
என்று தெரியவில்லை
இருந்தும் உள் நுழைகிறேன்
உன் காதலில்....          437

கனவுகள் கலந்த
காதலோடு என்
கலைமகளுக்காக
காத்திருக்கிறேன்
கலைமகள்
காத்திருக்கிறாள்
என் காதலுக்காக...       438

கவிதையில்
இருந்து விடுதலை பெற்று
எப்போது உன்னிடம்
தஞ்சம் அடைய
போகிறேன் என் கவிதையே.. 439

மிக அவசரமாய்
உன்னை தேடுகிறது
என் ஆத்மா
அதிகமாய்
உன் ஆழமான
முத்தத்தின் ஆரம்ப
நிலையை நினைத்து....    440

March 8, 2015

2015 கவிதைகள் 421 to 430

நித்திரை கனவும்
உன் காதலை
சுமக்கும்
சுகமென
உன் முகம் தேடி
ராத்திரையை கடக்கும்...    421

ராகமாக
என்னைத் தேடும்
கவிதை
நீ
ராத்திரியில்...   422

மழையில்
குளித்த தாமரை நீ
அதில் வழிந்தோடிய
நீர் நான்...                    423

நீர் நிரம்பிய
குளமும்
நிலை கொள்ள மறுக்கிறது
நிதானமாக
உன் பாதம் பட்ட பிறகு..   424

கோபுரங்களை போல
தான் உன் காதல்
கொட்டும் மழையினில்
கொளுத்தும் வெயிலினில்
இன்னும் வளர்ந்து
கொண்டு இருக்கிறது...   425

எல்லையற்ற அன்பு
உன் மீது நான் கொண்டும்
எல்லை மீறும்
யோசனைகள் துளி
அளவும் இல்லை
ஏன் என்றால்
என் மீதான
உன் எல்லையற்ற
ஓர் அன்பால்..               426

மரணம் தாண்டும்
என் கவிதைகள்
உன்னோடு
கை கோர்த்து இருப்பதால்.. 427

உன் சிரிப்போடு
வெட்கம் கலந்தால்
நான் என்
தூக்கமும் கலைவேன்...        428

உடைகளிட்டு
நீ உரசும் போது
உடையும் வெட்கத்தில்
உடையும் ஓர் முத்தம்...         429

கலை மிகுந்த
சிலை போல நீ
சிலையான பின்னும்
என்னை செதுக்க
சொல்லும் சிலையும் நீ
இதழின் வழி....                 430

2015 கவிதைகள் 411 to 420

கருமேகம்
நிரம்பிய வானம்
முத்தமாக
ஓர் மழைத்துளி
என் உடலில் விழுகிறது
உடையை மீறி...           411

விம்மியழுத
நிமிடங்களை நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது
அவ்வளவு ஆழமாகவா?
உன்னை காதலித்து விட்டேன்
என்று....                     412

உன் முத்த
இடுக்குகளில்
நானும் இழைப்பாரிக்
கொள்கிறேன்
இந்த உலகத்தின்
ஏதோவொரு மூலையில்
நான் இருப்பதற்கும்
நான் வசிப்பதற்கும்...        413

வடியும் ரத்தம்
காயத்தை உணர்த்தும்
வடியும் கண்ணீர்
உன் காதலை உயர்த்தும்..   414

தனிமையில்
இருந்து தவித்தேன்
இப்போது தனிமையையே
தவிர்க்கிறேன்
உன் நினைவோடு
மட்டும் நான் வாழ..        415

சூழும் வெற்றிடத்தில்
உன் முத்தத்தை
நிரப்பி வைக்கிறேன்
முதல் முறை
முத்தத்தையும்
எதிர் பார்க்கிறேன்..        416

மெல்லிடையை
காட்டும் மேலாடை
நீ உடுத்தும் போது
சொல்லில் ஏதும்
இடையூறு இல்லை
என் கவியில்....         417

அன்பும்
அணைப்பும் பெருகி
அந்தி நேர முத்தம் சொருகி
ஆதி காதலும் பெருகி
துன்பம் கரைந்து
இன்பம் பெருகும்
இவ் வாழ்க்கை
உன்னோடு நித்தம் பெருக
வேண்டும்....          418

புதுப் பூக்கள்
பூக்கும் இந்த
பூந்தோட்டத்தில்
நானும் பறிக்கிறேன்
உன் காதல் பூவை....    419

பாவை முகம்
பார்த்து வளரும்
பூவை பார்த்தால்
காதல் பிறக்கும்
மல்லிகை பூ
என்றால்
காமமும் இனிக்கும்...   420

March 3, 2015

2015 கவிதைகள் 401 to 410

நாளை நீ
புடவை கட்டும்போது
நான் உன்னைக்
கட்டிக் கொள்ள வேண்டும்
உன் காதோடு
புடவை பற்றி
ஒர் கவிதை பாட வேண்டும்..    401

நிகழ்கால நிஜங்களை
நினைக்கும் போதும்
கடக்கும் போதும்
நிம்மதி இல்லை
நீயே என்னோடு
இல்லாத போது
எனக்கென்ன
நிம்மதி ஓர் கேடு!!          402

காலத்தின் மீது
நம்பிக்கை வைத்து
நான் காணுவது
வெறுங் கற்பனைகள்
அல்ல
இக்கண்ணோடு
வடியும் என்
காதலின் எதிர்காலம்..      403

நீ அளிக்க
விரும்பும்
முத்தத்தாலும்
நான் அளித்த
முத்தத்தாலும்
இன்னும் அதிகமாய்
இருக்கிறது
உன் மீதான என் ப்ரியம்..  404

உன் முகத்தை
பார்த்து
பார்த்து
என் முகம்
இப்போது மறந்தது..       405

பெண் என்பது
உடல் சார்ந்தது
நீயோ
என் மனம்
சார்ந்தவள்...          406

முதிர்ச்சியடைந்த
உன் முத்தத்தால்
நானும் சிரிக்கிறேன்
முடிந்து அது
தொடர்ந்த பின்னும்...   407

யாருக்கும்
தென்படாத
உன் காதல்
தேன் போல
இன்னும் இனிக்கிறது
என் இதழில்...         408

முத்தமோ!
கண்ணீரோ!
இரண்டுமே,
நம் உணர்ச்சியின்
உச்சம் என் அன்பே!    409

மெளனம் நிறைந்த
எந்தவொரு
இடத்திலும்
காதலின் மோகமாய்
உன் முத்தம்...              410