நித்திரை கனவும்
உன் காதலை
சுமக்கும்
சுகமென
உன் முகம் தேடி
ராத்திரையை கடக்கும்... 421
ராகமாக
என்னைத் தேடும்
கவிதை
நீ
ராத்திரியில்... 422
மழையில்
குளித்த தாமரை நீ
அதில் வழிந்தோடிய
நீர் நான்... 423
நீர் நிரம்பிய
குளமும்
நிலை கொள்ள மறுக்கிறது
நிதானமாக
உன் பாதம் பட்ட பிறகு.. 424
கோபுரங்களை போல
தான் உன் காதல்
கொட்டும் மழையினில்
கொளுத்தும் வெயிலினில்
இன்னும் வளர்ந்து
கொண்டு இருக்கிறது... 425
எல்லையற்ற அன்பு
உன் மீது நான் கொண்டும்
எல்லை மீறும்
யோசனைகள் துளி
அளவும் இல்லை
ஏன் என்றால்
என் மீதான
உன் எல்லையற்ற
ஓர் அன்பால்.. 426
மரணம் தாண்டும்
என் கவிதைகள்
உன்னோடு
கை கோர்த்து இருப்பதால்.. 427
உன் சிரிப்போடு
வெட்கம் கலந்தால்
நான் என்
தூக்கமும் கலைவேன்... 428
உடைகளிட்டு
நீ உரசும் போது
உடையும் வெட்கத்தில்
உடையும் ஓர் முத்தம்... 429
கலை மிகுந்த
சிலை போல நீ
சிலையான பின்னும்
என்னை செதுக்க
சொல்லும் சிலையும் நீ
இதழின் வழி.... 430
No comments:
Post a Comment