May 30, 2013

ஆவி

அமைதி இல்லாத ஆவி ஒன்று என்னை சுற்றித் திரிவதை நானே உணர்கிறேன். என் அறையில் நான் மட்டும் இருப்பதாக நானே எண்ணி இருந்தேன் . ஆனால் எனக்கு தெரியாமலே என்னையே கட்டி அனைத்தபடி இருக்கிறது இந்த ஆவி. இதற்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை.
காலை வேலையில் என்னை தட்டி எழுப்பியது, நான் மீண்டும் உறங்கினேன், மீண்டும் மீண்டும் தட்டி எழுப்பியது வேலைக்கு போ என. பதறியடித்தபடி எழுந்து பார்த்தால் Alarm -ஆக துடித்துக் கொண்டு இருக்கிறது நான் பதறியதை பார்த்து..
முகத்தை தடவியபடி கண்களை நன்கு திறந்து,திறந்தேன் குளியல் அறையை, எனக்கு முன்னரே யாரோ ஒருவர் குளித்தது போல ஒரு உணர்வு அவ்வளவு வெப்பமாக இருந்தது அந்த அறை. பின் நின்று யோரோ ஒருவர் பார்ப்பது போல ஒரு மன ஓட்டம். ஏன் இப்படி எனக்கு மட்டும்.
தூக்க கலக்கத்தோடு என் மனதின் ஓரம் சிறு கலக்கம் தான்.
உடையை உடுத்தியபடி உற்றுப் பார்த்தேன் கண்ணாடியை என்னை தவிர யாரும் தெரியவில்லை .
உடையை சரிசெய்து, அறையை உற்று நோக்கினேன் அப்போதும் ஏதும் தெரியவில்லை என் கண்களுக்கு.
நடந்து சென்றேன் நானே என்னை பின் தொடர்வது போல, பின் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே,
ரயிலுக்காக காத்திருக்கும் வேலையில் எனக்காக யாரோ காத்திருப்பது போல் ஒரு உணர்வு..
அந்த 2 நிமிட ரயில் பயணத்தில் நான் விழாமல் இருக்க அந்த கம்பியின் வழியாக என்னை இறுக்க பிடித்திருந்தது ஆவி அதை நிச்சயமாக உணர்ந்து என் மனது..
ஒரு விதத்தில் இது ஒரு நண்பனாக தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் எழுதிய கவிதைகளை நான் இல்லாத நேரம் படித்துப் பார்க்கிறது..நல்ல கவிதையின் வரிகள் இருக்கும் பக்கத்தை திறந்தே வைத்து எனக்கும் அடையாளம் காட்டுகிறது.
நானும் ஒரு நாள் ஆவியாக மாறும் ஒரு மனிதன் தான். அப்போதவது அதன் பெயரை எனக்கு அறிமுகப் படுத்தட்டும்..
-Sun Muga-
30-05-2013 02.19 AM

விழி(தை)

என் விழி தான்
உன் காதலின் விதை,

அதில் முளைத்த
கிளைகள் தான்
உன் அன்பு,
உன் பாசம்,
உன் நேசம்..

இந்த விதையால்
மட்டும் தான்
தன் காதல் விதையவே
பூவாக பூக்க
வைக்க முடியும்..

வேர்வை சிந்தி எனக்காக
இரவு பொழுதை
கழித்து. .

காலை வேலையில்
புன்னகையை உரமாக
உண்டு.. உயிர் வாழ்கிறது.

உன்னதமான படைப்பு
உணர்ச்சி கொண்ட துடிப்பு,
உதிரமாக நினைவுகள்
என பல,

நித்தம் ஒரு நேரம்
என இல்லாமல்,
நித்தமும் நிலை குலைய
வைக்கிறது உன் காதல்..

-Sun Muga-
30-05-2013 01.20 AM

பூவின் தற்கொலை

வார்த்தைகளும் வாடிக்
கிடக்கிறது -என்
காதல் பூவே,

நொடி பொழுதில்
உன் உயிரை
துறக்க எண்ணினாய்,

வா(ழ)டப் பிடிக்காத
பூ தன் வேரை
தானே அறுத்து
தன் தலையை
துண்டிக்க எண்ணுவது 
போல,

உன் வாசமும், என்
மீதான நேசமும்
உண்மை.

என்னிடமும் உன்னிடமும்
இருப்பது வெறும்
காதல் என்ற 
வண்ணம்...

பல நுண்ணுயிர்கள்
வாழ - நீ வாழ,

நிலை குலைந்துப் போன
கனவு என,

நிறம் மாறிப் போன கனவும்
கனவு தான்,

நினைவுகளால் நினைத்து
நிம்மதி இல்லாமல்
நீயும் என்னை காதலிக்கிறாய்..

உன் காதலின் அர்த்தம்
இந்த மண்ணுக்கு
மட்டும் புரிந்த புதிர். .

புதை குழியில் புதைந்தாலும்
இந்த மண் தான்
உன்னை அனைத்துக்
கொள்ளும் நீ கலங்காதே!!

கனநேரம் ஆனாலும்
கனமான காதல்
உன் காதல்,

என்னால் தூக்கி
சுமக்க முடியாத
அளவிற்க்கு
கனத்துப் போய்விட்டது 
அது...


-Sun Muga-
30-05-2013 00.47 AM

May 26, 2013

உதயம்

உதிராமல் என்னுள்
உதயம் ஆனாய்..

என் உலகம் நீ என்று ஆனாய்..

எந்நிலையில் உன்னை
கண்டேன்?

அந்நிலையில் என்னை
கண்டேன்..

இந்நிலையில் என்னை
காணோம்.

பரித்த அன்பை பதறமால்
பாதுகாக்கிறாய்..

வெந்நீரில் வெந்தாலும்
உதிராது உன் காதல்...

வெறுத்த காலமும் உண்டு
நீ என்னோடு இல்லாத
காலத்தை...

வெற்று காகிதம்
நிரம்புகிறது
உன் நினைவால்..
என் வேதனையை
குறைக்க...

ஏன் என்று கேட்க்கிறாய்
மெளனம்..
அதற்க்கு பதிலும்
காலத்தின் மெளனமே...

-§un Muga-
26-05-2013 21.45 PM

Subbu Raman

போதும் என்று நீ போகிறாய்
போதாது எங்களுக்கு
உன் உதவி...

சினம் நீ கொண்டாலும்
அது உன் வேலையின்
விசுவாசத்தை தான்
காட்டுகிறது எனக்கு..

அதை எத்தனை பேர்
உணர்ந்து இருப்பார்கள்
என்று எனக்கு தெரியாது..

எத்தனை என்னில் அடங்க
முன்னேற்றம் உன் தயவால்..

தடுமாற்றம் இல்லாத ஒரு
நேர்முக மனிதனை
உன்னில் தான்
நான் கண்டேன்..

நீயும் நல்ல மனிதன்
தான் உன்னை பற்றி
முழுதும் அறிந்த மனிதனுக்கு,

நாளைய பற்றிய சிந்தனை
உனக்கு மட்டும்
உயர்ந்து இருக்கிறது,

உன்மீது என் நேசமும்
வளர்ந்து கொண்டே தான்
இருக்கிறது..

அச்சமில்லை உன்னோடு
பேசுவதற்கு கூச்சம்
தான் குடியிருக்கிறது..

உன் அறிவை எண்ணி எண்ணி ..

எத்தனை காலம் என்று
விடிய விடிய நீ
கணக்கு போட
தேவையில்லை, என்
உயிர் உள்ள வரை
உன்னை நினைத்து
கொண்டே தான் இருப்பேன்...

உழைப்பையே உன்
உதிரமாக கொண்டு
நீ ஒடுகிறாய்..

அதற்க்கும் கொஞ்சம் ஒய்வு
தேவை தான் புரிகிறது..

புண்ணியம் பல நான் புரிந்து
இருக்க வேண்டுமோ
உன் அருகே வேலை
செய்ய....

வேரின் உயிர் போக மரத்தின் கண்ணீரில் உருவான காகிதமும் கண்ணீரால் நிரம்புகிறது...

உன் பிரிவை எண்ணி ...

-§un Muga-
28-05-2013 21.25 PM

May 23, 2013

முத்தத்தின் முகவரி

முதல் வரி உன்
இதழை பற்றி ...

வேர் இல்லாமல்
இந்த பூ மட்டும்
எப்படி பூத்திருக்கிறது,
தினமும் அதிலும்
வாடாமல்...

உன் இதழை
பார்த்தே,
நான் வாடி போனேன்
வாடி என் பெண்ணே,
கண்ணால் ஒரு
முத்தம் தர..

நித்தம் ஒரு முத்தம்
போதும்,
நிரந்தரமான வாழ்க்கையில்
நிம்மதி கூட...

நீண்ட இரவும்,
சுருண்ட பகலும்
உன் முத்தத்திற்கே
சொந்தம்...

பந்தம் ஒன்று உறுவாக
முத்ததில் பந்தாட
வா என் கண்ணே!!!

காத்திருக்கிறேன் பூத்திருக்கும்
உன் இதழை கவ்வ...

என்னை காத்திருக்க விட
மாட்டாய் என்று
தெரியும் -இருந்தும்
காத்திருக்கிறேன்
உன் முத்தத்தின்
சுவை அதிகரிக்க. .

நேசத்தின் பலன்
உன் முத்தம்..

நேசித்தலின் பலம்
உன் முத்தம்..

என் வாசத்தின் உயிர்
உன் முத்தம்..

ஏற்ற தாழ்வு உன்
நெஞ்சில் முத்தமிடும்
போது வட்டமிடும்
அழகு, அழகு தான்...

நிறைவு பெறும் போதும்
தொடங்குகிறது
உன் முத்தம்...

-Sun Muga-
23-05-2013 23.51 PM

நீயும் நிலவும்

நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?
என்னவளை போல,

என்னை கண்ட நாட்களில்
வளர்கிறாய்,

என்னை காணாத நாட்களில்
தேய்கிறாய்,

நீயும் ஒரு நிலவு
என்று அறிந்தேன்
பெண்ணே..

முத்தமிட நான் 
எத்தனிக்கும் போது...

நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?

உன்னையே சுற்றி
எத்தனை ஆண்
நட்சத்திரம்..

நானும் ஒரு ஓரமாக
தான் ரசிக்கிறேன்
நீ என்னை ஒர
கண்ணால் ரசிக்கும்
போது...

நீயும் நிலவு தானோ?
பெண்ணே..

இந்த சூரியனையே
உன்னுள் மூடிக்
கொள்கிறாயே?

நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?

நித்தம் இல்லை,
ஆனாலும் ஒரு அமைதி,
உன் பிறப்பிடம் அறியாது,
எனக்கு தெரியும்
உன் இருப்பிடம் ...

பெண்னே நீயும் நிலவு
தானோ?

காணாமல் போனாலும்
நித்தம் வளர்கிறாய்,
என் இதயத்தில்...

என்னை பொறுத்தவரை
நீயும் நிலவும் ஒன்று...

-Sun Muga-
23-05-2013 23.35 PM

May 22, 2013

முத்தம்


முத்தம் என்றால் நம்
முதல் முத்தம் தான்
நினைவுக்கு வருகிறது..


நடுங்கிய கைகளோடு
நெருங்கிய இதழ்...


இருள் இல்லை,
ஒரு சேர
இமை மூடி வர
வைத்தோம் அந்த
இருளை,
உளறிய உதடோடு
உரசிய உடலால்
எங்கு போனோம்
என்று நமக்கு 
தெரியவில்லை,
யாரோ ஒருவரின்
வருகையால்
வந்த அமர்ந்த
அறைகளில் 
அலைந்து திரிந்த
அந்த மூச்சுக்
காற்றின் ஈரம்
இன்னும் ஈரமாக
கண்களில்...
அழியாத ஓவியம்
அந்த நிழலில்
ஒரு சேர நாம்
நின்று வரைந்தது
வண்ணங்கள் இல்லை,
கண்கள் இல்லாதவர்கள் 
போல் தான்
நாமே ஊகித்து 
இது தான் முத்தம்
என்று முத்தமிட்டுக் 
கொண்டோம்..
இது உனக்காக நான் என்றோ
எழுதியது..
உன் இடையை தொட்ட
என் இதழ்களும் மெய்
மறந்தது எங்கே
இருக்கிறோம் என்று.
உன் இதழ் பட்டவுடன் 
தான் உணர்ந்தது
ஓ!! இங்கே தான்
இருக்கிறமோ என்று.


நம் பேச்சுக்கு இடை
இடையே முத்தமிட்டுக்
கொண்டது போல்
ஒரு கணவு.


இப்போது நினைவில் கனவுக்கு
இருவரும் முத்தம்மிட்டுக் கொண்டே இருக்கிறோம்..



-Sun Muga-
22-08-2013 22.36 PM

May 19, 2013

திருமண மேடை

என் நாட் குறிப்பில்
நானே இல்லாமல் இருப்பேன்..

அனைவரின் இடையில்
இருப்பேன்...

கண்ணீரை உள் வாங்கியபடி..

என் இதயத்தை கையில்
வைத்துக்கொண்டு,

எட்டி எட்டி பார்ப்பேன்
நீ அமர்ந்திருக்கும்
மேடையை...

எட்டாத தூரத்தில் நீ
இருப்பது போல்...

கட்டியது தாலி தானே..

ஏன் என் கனவுக்கும்
காதலுக்கும் வேலி
போல இருக்கிறது...

கனவே இனி கனவு
இல்லையோ,
கவலை தானோ?

அட்சதை தூவ மனமில்லாமல்
என் காதலை தூக்கி
எறிந்துவிடுவனோ?

காயத்தோடு உன் முன்னே
அமர்ந்துருப்பனோ?

நண்பர்கள் என்னை பார்த்து
ஏலனம் செய்வார்களோ?

சோகத்தை மறைத்து
சிரித்தபடி புகைப்படம்
எடுத்துகொள்வனோ?

வண்ண அலங்காரம்
வண்ணமில்லாமல்
தோன்றகூடுமோ?

என்ன எண்ணி என்ன
பயன்- இனி எப்படி
நாட்களை கடத்துவது
என்ற  ஒரே  ஒரு பயம் தான்..

வாழ்வது கடினம்
ஆம் நான் மட்டும்
வாழ்வது என்பது
மிக கடினம்...

காயத்தை மறைக்க
ஒரு புது காயத்தை
உருவாக்குமோ இந்த
காலம்...

எது வாழ்க்கையின்
நியதி...

வாழ தகுதி இல்லாத
இந்த கனத்தில்
மனம் முழுதும்
ஒரே கனம்..

மணம் தான் உனக்கு..
ஏன் எனக்கு மட்டும்
என் காதலுக்கு
தகனம் போல்
தெரிகிறது ...

உயிரே என்று உன்னை
கடைசியாக அலைத்து
கொள்ள கூட தயார்
இல்லை..

ஏன் என்றால் என் உயிரே
உன் முன் தீயாக எறியும்
அந்த அக்னி பீடத்தில்...

திருமண பரிசாக
என்ன தருவது?

தினம் உன்னை பற்றி
நான் எழுதிய
கவிதை புத்தகத்தையா?

இல்லை,

என் காதல் பூவைஒரு
கவரில் அடைத்து
பொக்கையாக தரவா?

இல்லை,

கடைசியாக நீ கொடுத்த
சந்தோஷத்தை தரவா?

என்ன வேண்டும் இப்போதவது
என்னிடம் கேட்டு
வாங்கிகொள்....

-Sun Muga-
19-05-2013 23.02 PM

பெண்ணே!!!

இந்த உலகில் நான் பிறந்ததும் என் இறப்பை நோக்கி என் பயணம் தொடங்கிவிட்டது என்று நான் அறிய இத்தனை காலம் ஆகிவிட்டது. ஆனாலும் இனியும் தாமதிக்காமல் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என என் காலத்தை கழிக்கிறேன். என்ன செய்வது என்று தான் இந்நாள் வரை தெரியவில்லை. நமக்கு தெரிந்த ஒரே வேலை இப்போதைக்கு கவிதை எழுதுவது மட்டும் தான்.

ஆனால் கவிதை எழுத தொடங்கியவுடன் உன்னை பற்றியே எழுத்துக்கள் அமைகின்றன.

இது நான் உன் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறதா? இல்லை நீ என் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறதா?என்று கூட எனக்கு தெரியவில்லை.

இறுதியாக நான் எடுத்த முடிவு தான் நம் இறப்பிற்க்குள் ஒரு கவிதையாவது உன்னை பற்றி எழுத வேண்டும் என்று.

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், என் காதலை பற்றியோ - உன் காதலை பற்றியோ..

காத்திருக்கிறது காகிதம்,
என்னை போல்,
உன்னை போல்,
கவிதை அமைய...

இது தான் நிஜம். நீ ஒரு கவிதை என்று சொன்னால் அது பொய்.

ஆம், நீ ஒரு கவிதை ஆறு.

இந்த கவிதை ஆறும் என்றோ
ஒருநாள் இல்லை,
இன்றும் இந்த அன்புக்
கடலில் கலந்து கொண்டே
தான் இருக்கிறது.

அலையாக உன் நினைவுகளும்
தாவித் தாவி தான் செல்கிறது,
கரை சேரும் நாளை எண்ணி.

தனிமையில் என்னோடு
தள்ளாடுகிறாய் என் அன்பை
சமாளிக்க முடியாமல்.

நான் என்ன செய்வேன் ,
நான் உனக்காக படைக்கப்
பட்டவன் என்று உணர்ந்துவிட்டாதால்..

-Sun Muga-
25-05-2013 22.58 PM

விநாயகம்

அதிகம் தெரியாத மனிதன்.
இந்த மண்ணில் இல்லை.
ஏனோ ஒரு சோகம்

ஏன் இவன் மீது அப்படி
ஒரு பாசம் அந்த இறைவனுக்கு,
அவனோடு பழகியவருக்கு கூட
இல்லாத அன்பு...

மிக சுறுசுறுப்பானவன்
என்பதால் சுத்தமாக
இல்லாமல் போய்விட்டான்
போல...

உன் உயிர் இல்லை
என்றாலும் உன்
உணர்வு என்னையே
சுற்றி சரண் அடைகிறது..

விபத்து - யார் காரணம்
விடியும் போதே..
உன் உயிரை எடுக்கவா
அந்த விடியல்
விடிந்தது..

செயல் இழந்த பாகம்
உன் பாவ கணக்கின்
கூட்டல் கழித்தல் போல..

உணர்வே இல்லாத உறுப்பு
உறுகொலைய வைத்தது..

நெறுப்புக்கு இறையாகும்
போது  நீ
கண் திறந்து
பார்த்தாய் ஒவ்வொரு
மனிதனையும் அந்த
மாயானத்தில்...

மாயானத்தில் நான்
ஒரு மனிதனாக
கூட இல்லை..

ஒரு துளியும் வடிந்தாக
கூட நினைவும் இல்லை..
மனதில் இது ஒரு
இறக்கமா?
இல்லை இறுக்கமா?

நீ படுத்திருந்த ஆஸ்பத்திரியை
காணும் போது,
அது ஆஸ்பத்திரியே இல்லை
உன் நினைவின்
ஒரு கூடாரம்...

உன் உபசரிப்பின்
ஒரு கூடாரம்...

உன் நினைவோடு வாழும்
ஒரு சாதாரண மனிதன்
நான்...

(இவர் என்னோடு பணியாற்றிய
மனிதர்)
Sun Muga
19-05-2013 01.57 AM

May 17, 2013

கருவறை

ஆண் மகன் நான்.

எனக்கும் கருவறை
கொடுத்தது உன் கருவிழி..

ஊடல் இல்லை,
தேடலால் உருவான
கரு இது..

வளர்கிறது, ஆம் வளர்கிறது,
இதயம் வீங்க,

ஒவ்வொரு நாளும் உன்
நினைவை உண்டு...

ஒவ்வொரு நாளும் உன்
விழியை உண்டு...

ஒவ்வொரு நாளும் உன்
அன்பை உண்டு...

என் கருவறைக்கும்
காவல் இருப்பது
உன் காதல்...

எட்டி உதைக்கும் பிள்ளை
உன்னை தேடியே...

கட்டி அனைத்த
கரம் தேடியே..

முட்டி மோதிய
நெஞ்சம் தேடியே...

கோர்த்து கொண்ட
இதழ் தேடியே...

சேர்த்துக் கொண்ட
நினைவை தேடியே...

ஆனாலும் வளர்கிறது
இந்த கருவறை...

உன் கை விரல் பட்டால்
சுக பிரசவம்...

இல்லை என்றால்
சிசேரியன் தான்..

வலி உயிரை கொல்லும்
தடம் என்னை கொல்லும்

நரம்பால் திரித்து உடம்பால்
வெறுத்து உயிரே போய்விடலாம்
போல நொடி போகும்...

நான் மட்டும் உன் காதலை
இல்லை நம் காதல்
குழந்தையை பார்த்து
கண்ணீர் விடுவேன்..

நான் வளர்த்துக் கொள்வேன்
நானே வளர்த்துக் கொள்வேன்
காதலை...

கண்ணீரை சுரப்பேன்
முலைப்பாலிற்க்கு பதில்..

தட்டிக் கொடுப்பேன்
உன் கை விரல் போல...

தொட்டில் ஆட்டுவேன்
நம் சந்தோஷம் போல...

தாலாட்டு பாடுவேன்
உன் குரலை போல...

குளிக்க ஊத்துவேன்
உன் உரசல் போல...

நானே பார்த்துக் கொள்கிறேன்..

வளர வளர வளரட்டும்
நம் காதல் போல...

-Sun Muga-
17-05-2013 22.41 PM

உன் குரல்


மழலை மொழி
என் தமிழ் மொழி.


நீ தடுமாறும் மொழி
என் காதல் மொழி.


உன் முத்த மொழி
என் இதழ் மொழி.


உன் கைவிரல் மொழி
என் கனவின் மொழி.


உன் கொலுசின் மொழி
என் ஆரம்ப மொழி.


உன் உடையின் மொழி
என் சிலிர்ப்பின் மொழி.


உன் கண்ணின் மொழி
என் கவிதையின் மொழி .


உன் பெண்மை மொழி 
என் ஆண்மை மொழி.


உன் நடையின் மொழி 
என் நடத்தையின் மொழி.


உன் சமையல் மொழி 
என் சாமர்த்தியத்தின் மொழி.


உன் மொழி என்றுமே
எனக்கான மொழி ...



-Sun Muga-
22-08-2013 22.55 PM

May 13, 2013

ஆயத்தம் ஆகு

ஆயத்தம் ஆகு என் காதலியே
என்னை காதலிக்க,
வெகு நாட்கள் என்னை
பார்த்து ரசித்தது போதும்,
ஆயத்தம் ஆகு..

உன் அழகிற்கு குளியல்
வேண்டாம்,
நேரம் ஆகிறது,
வா ஒரு காதல்
கதை சொல்ல,

உன் கண்களுக்கு மை
தீட்ட வேண்டாம்,
நேரம் ஆகிறது
வா ஒரு காதல்
வசனம் பேச..

உன் கைகளுக்கு வளையல்
போட வேண்டாம்,
நேரம் ஆகிறது
வா ஒரு காதல்
பிண்ணனி இசை அமைக்க ..

உன் கை விரலுக்கும்
அழகு கூட்ட தேவையில்லை
நேரம் ஆகிறது
வா ஒரு திரைக்கதை
அமைக்க....

உன் விழிகளை மூடு
நிலவு ஒளிப்பதிவு
செய்யட்டும்..

உன் உதடுகளை
திற அவை ஒலிப்பதிவு
செய்யட்டும்..

ஆயக்கலைகள் கலை
அமைக்கட்டும்..

கொஞ்சும் கொலுசு ஒலி
நடனம் அமைக்கட்டும்..

மிஞ்சும் நம் காதல்
நம்மில் இயக்கட்டும்..

நம் காதலை கனவுகள்
தயாரிக்கட்டும்...

-SunMuga-

13-05-2013 00.35 AM

May 2, 2013

காதல்?

முகமென பார்த்தால் மலராது காதல்,

அகமென நுகர்ந்தால் நுழைவது காதல்,

எது என்று அறியாது காதல்,

பருவம் படராமல் வருவது காதல்,

கண்ணிலே நுழைவது காதல்,

என்னிலே பதிந்தது அந்த காதல்...

இமைபட்டால் இனிமையான காதல்,

இதழ் பட்டால் இதமான காதல்,

அது என்னவள் காதல்...

வெற்றியின் போது தோழ் சாய்வது காதல்,

தோல்வியை மறக்க வைப்பது காதல்,

தோற்றத்தை மாற்றி வைப்பதும் காதல்,

தோட்டமாக மனம் மாறுவதும் காதல்,

இன்பம் தருவதும் காதல்,

தூய்மையான கண்ணீர் துளிகள் தருவதும் காதல்,

மனதை தொலைத்து விட்டாலும் காதல் ,

மனம் திருடுபோனாலும் காதல்,

மூளையை செயல் இழக்க செய்வதும் காதல்,

மூளையை வேலை செய்ய வைப்பதும் காதல்,

உன்னதமான அன்பே காதல்,

உண்ணுவதையே உணரமால் வைப்பதும் காதல்,

பிஞ்சுலையும் நெஞ்சிலே வளரும் காதல் வஞ்சம் இல்லா காதல்,

உடல் பஞ்சத்தில் இறந்தாலும் உள்ளத்தில் வாழ்வது உயர்ந்த காதல்,

என்னோடு நீ இருப்பதும் காதல்,

உன் கண்ணோடு நான் வாழ்வதும் காதல்,

-Sun Muga-
02-05-2013 00.36 AM

With You

Today I Live With You,
My Lines are With You,
I Love My Life With You,
My Hands are Hold With You,
My Love Travel Begins With You,
Every Seconds I Breath With You,
My All Sweet Dreams are With You,
I Play With You,
I Pray with you,
Always With You,
And
Always Love You.... My Dear

-Sun Muga-
02-05-2013  00.12 AM

May 1, 2013

உன்னை பற்றி


என் வலியோடு நீ பிறக்க
கண்ணிலே கண்ணீர் ,


இதழ்களில் பொன் சிரிப்பு -என்
பொன்னான இந்த பெண்ணைக் 
காணும் போது..


என் உலகிற்கு வெளிச்சம் 
தந்தது உன்னதமான
உன் பார்வை 
முதல் முதலில் என் மீது
படரும் போது..


பசியோடு நீ அழும் போது
என் வலியையும் மறந்து 
வழிந்தது கண்ணீர் என் மனதில்.


உன்னை அள்ளி அனைத்து என்
மார்பில் அனைத்த நொடி
இன்றும் நகழவில்லையடி..


கொஞ்சும் மழலை மொழி
பேசும் போது என்னையும்
அறியாமல் என் மனம்
பட்ட சந்தோசம் இன்றும்
என் நினைவில்...


பாலை - பாலா என்றும்,
செப்பல்லை - செப்லா என்றும்,
எறும்பை-எம்பு என்றும்,
போனை - கோனா என்று -நீ
உச்சரித்த வார்த்தைகள் தமிழ்
மொழியில் இல்லை
என்றாலும் உன் தாயின்
மொழியில் அழகாக 
பதிந்து விட்டது என்றே
சொல்லவேண்டும்.


நித்தம் நீ பேசிய மழலை
மொழியை அழகாக கோர்த்து
வரிகளால் கவிதை அமைத்து
உனக்கே தர வேண்டும்
என்று அந்நாளில்
ஆசைப்பட்டதுண்டு
என் நெஞ்சம்...


உன் சுனங்கிய வார்த்தைகளை
கேட்கும் போது எனக்கு
சுயநினைவே இல்லை-
உனக்கு உடல்நிலை
சரியில்லாத போது..


உதிரங்கள் கூட உதிரவில்லை
உன் கண்ணில் கட கடவென
உதிர்ந்த உன் கண்ணீரை
கானும் போது என்ன
செய்தேன் என்று எனக்கே
தெரியவில்லையடி...


நீ நடை பழகும் போதெல்லாம்
வருத்தபடவில்லை பயம்
தான் பட்டேன் - இப்போதே
இவ்வளவு அழகு என்றால்
25 வயதில்?


இரவுகள் மெல்ல மெல்ல
நகர்ந்தாலும் உன் புன்னகை
சத்தம் என்னை பகலுக்கே
இழுத்துச்செல்கிறது...


உயிரற்ற பொம்மைக்குகூட
உறக்கம் வந்தது - உன்
மழலை தாலாட்டை
கேட்கும் போது..


பாடல் வரியை கேட்டு
பிழையோடு நீ பாடும் போது
அங்கும் பிறப்பது
ஒரு புதுக்கவிதை தான்
என் உயிரே...


கண்ணை இமைக்காமல்
உன் கண்ணை பார்த்தேன்
இன்று கூட அது தான் என்னை
கட்டிவைத்திருக்கிறது
உன் இமை முடிக்குள்..


எழுதியவை அனைத்தும்
கவிதை ஆகாது
உயிரே உன்னை பற்றி
எழுதும் ஒவ்வொன்றும் 
கவிதை தான்...




-Sun Muga-
01-05-2013 23.59