30-11-2013 22.34 PM
November 30, 2013
நான் தேடும் புத்தகம்
30-11-2013 22.34 PM
மோகனா தியேட்டர்
30-11-2013 19.01 PM
ஊர்வலம்
கோதண்ட ராமர் கோவில் தெருவில் கிளம்பி, காந்தி கலைமன்றம் மற்றும் காந்தி சிலை ரவுண்டானா வழியாக பஞ்சு மார்கெட்டில் முடிவடைந்த ஊர்வலம். ஏன் இந்த ஊர்வலம் என்று அவனுக்கு தெரியவில்லை. தெரியும் அளவுக்கு விவரமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் கையில் ஏதோ வாசகம் எழுதிய பலகையை ஏந்தி போனதாக இன்றும் நினைவில் இருக்கிறது. பஞ்சு மார்கெட் அடைந்ததும் அவன் நின்ற இடத்தில் இருந்து தூரமாக ஒரு மனிதன் நேரு சிலை அருகில் யார் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஒரு வேலை A A Subburaja வாக கூட இருக்கலாம். அவர் பேசுவதை அவன் கேட்கவில்லை, பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இறுதியாக அவர் புறாக்களை வானில் பறக்க விட்டார். அப்பொழுது அவன் நான் என்று இவ்வாறு சுதந்திரமாக பறக்க முடியும் என்று எண்ணிய படி வானில் பறந்த புறாவை தேடி தேடிப் பார்த்தான்.
30-11-2013 12.31 PM
November 29, 2013
சோதனை
அய்யகோ!!!
என் இறைவா!!
என் மனம் அறிந்து
இத்தகைய சோதனையோ!!
இளம் பெண்ணை
என் கண் முன்னே
வாட்டி வதைக்கிறாய்!!
அதுவும் என்னால்...
இன்று என் நிலை
அறிந்தே இப்படி
சூழ்நிலையை
அமைக்கிறாயோ!!!
இதில் உனக்கு
என்ன பயன், பலன்.
என்ன நினைக்கிறாய்
என்று நிச்சயமாக
தெரியவில்லை என்
இறைவா!!
இரவுப் பொழுது
இன்னல் பல
இடைவிடாது என்னை
துரத்தி அடிக்க
என்னால் நிச்சயம் முடியவில்லை
இறைவா !!
30-11-2013 00.03 AM
தொடர் கதை
அவள் அவனுக்கான ஒரு தனி உலகம். அவள் மென்மையானவள். அழகானவள். அறிவுள்ளவள். அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஆனால் அவளுக்கு அது தெரியாது. அவனால் இது வரை சொல்லக் கூடிய தைரியம் இல்லை. அதை விட அவனுக்கு சொல்லுவதற்க்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
29-11-2013 22.35 PM
November 28, 2013
மடிக்கணினி
நீ இத்தனை நாள் இவ்வளவு
அழகாக தெரியவில்லையே!!
இன்று மட்டும் எப்படி
இவ்வளவு அழகு!!!
ஒரு ஆணை கண்டு
இன்னொரு ஆண்
பொறாமை படும் உணர்வு!!
ஒரு கன்னி பெண்
Control இல்லாமல்
எத்தனை முறை
உன்னை
தொட்டு தொட்டுப்
பார்க்கிறாள்.
அவ்வளவு மென்மையா நீ!!
மெய் மறந்து நீ
உணர்வதை
எப்பொழுது உணர்வாளோ
இந்த கன்னி பெண்!!
28-11-2013 20.09 PM
November 26, 2013
Love Story
"Hi my dear angel. Today you are so beautiful. I want to tell you one thing, which one is I trying to tell you last four days. May be I will get good and deep sleep after finishing this letter. This is not a normal letter. It helps to improve or increase our love. Love is so beautiful. Now only I feel it and like it. Just you can also try to feel it. At same time I do not want to compel you. If you feel the love just give me one kiss through this letter and in lips in later. Bye!! My dear..."
27-11-2013 00.03 AM
November 25, 2013
Normal Man
Always he looks like a separate man both happy and sad moods. He saw the very big dangerous situation in his life history. He dropped more valuable tears from his eyes in home. I feel all those thinks from here only. At this age he got so much of painful incident. We pray God it’s not repeat in his life again. I don't know why it’s happened but we know he will get all the happy in future.
25-11-2013 22.28 PM
November 24, 2013
அழகே!!
கொள்ள விஷயங்கள்
அதிகம் இருக்கிறது,
அதில் விஷேசம் ஏதும்
இருக்காது என்று
நம் இருவருக்கும்
தெரியும்.
தெரியாமல் இல்லை,
தெரியவும் இல்லை,
ஏன் இந்த குறும்பு
என்று.
உன் கேள்வியே மிகப்
பெரிய கேள்விக்குறி
எனக்கு.
இருந்தும் ஆராய
வேண்டும் உனக்காக,
உன்னோடு பேசிப்
பழக வேண்டும்,
எப்படி பேசுவது
என்பதை.
விடைகள் ஆயிரம்
அறிய வேண்டும்,
அதிலும் வித்தியாசம்
அதிகம் வேண்டும்.
அந்தி மாலையில்
உன்னோடு ஒரு
அன்ன நடை
வேண்டும்..
என் அழகே!!
24-11-2013 22.28 PM
பெளர்ணமி
கூட மோகம் கொண்டதோ?
உன் மீது,
வெள்ளை முகம் கொண்ட
நிலாவே!
நித்தம் நீ இருந்தாலும்
இன்று போல் என்றுமே
நீ அழகில்லை போல,
உடல் சிலுசிலுர்க்க
இந்த இதமான குளிரில்
உன்னைப் பார்த்துக்
கொண்டே இருக்க
வேண்டும் போல
தோன்றுகிறது...
உன்னை அடைய
ஒரு இறக்கை
கேட்கிறேன் அந்த இறைவனிடம்...
24-11-2013 21.53 PM
Light House
24-11-2013 18.46 PM
லெமன் சாதம்
24-11-2013 17 46 PM
November 23, 2013
காதலை சொல்லிவிடவா?
24.11.2013 00.00 AM
கல்லறை
23-11-2013 23.17 PM
November 20, 2013
Office பேய்கள்
இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. கிட்டத்தட்ட ஒரு MNC கம்பெனி மாதிரியான ஒன்னுன்னு நினைவில் வைத்துக்கொள்ளலாம். எப்பவும் போல ரெம்ப எதாற்தமா தான் ஆபிஸ் வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. திடீரென்று பார்த்தா ஒரே பேய்கள் அட்டகாசம். காலைல வந்து ஆபிஸ்-ல பார்த்த பேப்பர் எல்லாம் கீழ கிடக்கும். கம்ப்யூட்டர் எல்லாம் ஆன் ஆகி இருக்கும். டேபிள்- ல இங்க் கொட்டி இருக்கும். அப்படி இப்படின்னு டெய்லி நடந்து கிட்டு இருந்தது.
இப்படியே போக போக ஆபிஸ் -ல எல்லாரும் Complaint பண்ண ஆரம்பிச்சாங்க... இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு ஒரு மீட்டிங். அப்பதான் ஒரு ஆளு கிண்டலா பேசாமா அந்த பேய்களையும் வேலைக்கு வச்சுகிட்டா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ன்னு சொல்லி சிரிச்சாரு...
MD கொஞ்சம் யோசனைக்கு பின்னாடி, உடனே அந்த பேய்கள் எல்லாம் கூப்பிட சொன்னாரு. இதோ பாருங்க இது நாங்க தொழில் பன்ற இடம் இங்க வந்து இவ்ளோ அட்டகாசம் பன்னா நாங்க என்ன பன்ன முடியும். வேனும்மானா உங்களுக்கும் இங்க வேலை போட்டுக் கொடுக்கிறேன். அதுக்கு ஏத்த சம்பளமும் கொடுக்கிறேன். ஆனா இந்த மாறி தொல்லையெல்லாம் பன்னக் கூடாது. அப்படின்னு சொன்ன உடனே அந்த பேய்களும் வேலைக்கு ஜாயின் பன்ன ஓகே சொல்லிருச்சு. அந்த நிமிடமே Appointment letter ரெடி... ஜில் ஜில், ஜகன்மோகினி , ராட்சசி, விடாது கருப்பு அப்படின்ற பெயர்களில்.. சொன்ன மாதிரி எல்லாரும் வேலைக்கு ஜாயின் பண்ணி ஒழுங்காக வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. அப்படியே ஒரு மாதம் முடிந்தது. So முதல் மாத சம்பளம். இந்த பேய்கள் எல்லாம் முதல் மாத சம்பளத்தில் ஒரு பார்ட்டி ஒன்னு ஏற்பாடு பன்னாங்க.. அப்ப தான் ஒருத்தன் வந்து MD காதுல ஏதோ சொன்னான்.
உடனே MD ரெம்ப கோபமாக, பேய்களோட டீம் லீடரை கூப்பிட்டு, இரண்டு Workers இரண்டு நாளா காணும். எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னாரு. லீடர் உடனே நிச்சயம் நாங்க இல்ல. நாங்க இப்போது எல்லாம் ரெம்ப மாறிட்டோம். அப்படி சொல்லிட்டு தன்னோடு கூட்டத்தை தனியா கூப்பிட அவங்களுக்கு உள்ள ஒரு சின்ன மீட்டிங். ஆரம்பத்திலேயே லீடர், யார் இத செய்தது. எனக்கு நல்ல தெரியும் நம்ம கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் தான் இத செஞ்சு இருக்கனும். உடனே ஒரு பேய் நான் தான் நேத்து நைட் ரெம்ப பசி அதான் ரெண்டு பேர சாப்பிட்டேன், அப்படின்னு ரெம்ப பயத்தோடு சொல்லுச்சு. உடனே லீடர், அடே!! எத்தனை முறை சொல்லிருக்கிறேன். எப்பவுமே வேலை பார்க்கிறவுங்க மேல கை வைக்ககூடாதுன்னு. இதுக்கு முன்னாடி எத்தனை மேனேஜர் நம்ம அடிச்சு சாப்பிட்டுருக்கிறோம். எவனாது தேடுனானா? இப்ப பாரு விஷயம் ரெம்ப பெருசா இருக்கு. சரி சரி இனிமேல் இப்படில்லாம் செய்யாதே அப்படின்னு சொல்லி மீட்டீங் முடிச்சு வைத்தது.
November 17, 2013
First Love
இருந்து பார்த்தாலும்
அழகு தான்,
அதுபோல,
முன்னும் பின்னுமாக
அழகான பெயர்
அவளைப் போன்றே!!!
கண்ணீரை கண்டேன்,
அவள் இதழை விட்டு
பிரியும் தருணத்தில்...
நொடியை கூட
எண்ணி விடலாம்,
ஆனால் அவள் இமை
இசைக்கும் வார்த்தையை
மட்டும் கணக்கிட முடியாது..
உடையை கூட
உடுத்திக் கொள்ள
கூச்சப் படுகிறாள்,
எங்கே கட்டி அனைத்து
விடுமோ என்று,
அது என் மேனியைப்
போல் கருமை
என்பதால்...
என்று என்னால்
வர்ணிக்க முடியவில்லை,
ஏன் என்றால்,
என்றோ ஒரு
நாள் பிரிந்து விடும்
என்பதால்...
என் முதல் காதல் கடிதம்.
என்ன எழுதுவது
என்று தெரியாமல்,
இன்றும் தெரியவில்லை,
என்ன எழுதினேன் என்று!!
நிறைந்தது,
மனதில் நினைவுகள்
மலர்கிறது,
நினைவுகளை திரும்பி
பார்க்கும் போது தான்
கண்ணீர் அலையாக
வருகிறது.
அவள் தங்கப் பாதங்களை
தழுவ வேண்டும் என்று
பலமுறை படையெடுத்து
தோற்றுப்போய் திரும்புகிறது
அவள் கரையில்
நிற்கும்போது..
அர்த்தம் தேடினேன்,
அது "நீ" மட்டுமாக
பிரதிபலிக்கிறது.
ஆக மட்டுமே இருக்கிறது
இன்று வரை..
சூரியனை விரல் பிடித்து
அழைத்து வந்தேன்
விடியல்காக...
வருகிறேன் கல்லூரிக்கு
என் பெற்றோரை
ஏமாற்றிவிட்டு..
சிரிக்கிறேன் நான்..
நீ திரும்பிய இடம் எல்லாம்
என்றோ ஒரு நாள்
நீ என்னை
திரும்பி பார்பாய் என்று..
பார்க்கிறேன் உன்
பாதச் சுவடை விட என்
பாதச் சுவடு அதிகமாக
தெரிகிறது உனக்காக
காத்திருந்தால் என்னவோ!
உருகினவோ
உனக்காக காத்திருந்த
வேளையில் Ice கடையில்..
விழுந்ததால் நானும்
தடுமாறினேன் காதலில்
அந்நொடி முதல்..
ஆயுள் தண்டனை
கைதியாக அலைகிறது
மனது உன்னை
காதலித்த குற்றத்திற்காக ...
அன்று தான் ரசித்தேன்
மழைக்காக நீ
ஒதுங்கிய சிறு நொடி
என் கண்கள் பட்ட
சந்தோஷத்தில்..
நமக்கு மட்டுமே தெரியும்
உன்னை மட்டும்
படித்து பாஸ் ஆனேன்
DMOP
கவிதை எழுதினேன்
தேர்வின் போது..
விட்டு எழுதுகிறேன்
என் கவிதையைப் பற்றி
கவிதை,
எங்கே "மை" க்கு
பற்றாக்குறை ஆகிவிடும்
என்பதால்..
வந்த கால்கள்
இன்று பின்னோக்கியே
செல்கிறது உன்
சந்தோஷத்திற்காக..
உன்னோடு இல்லை
என்றாலும் வாழ்ந்த வாழ்க்கை
உன்னோடு மட்டுமே!!
இருப்பதால்
என்னோடு என் "உயிர்"
இருக்கிறது..
திகைத்தது
உன் அழகை கண்டு,
உன் வீட்டுத் தெருமுனையில்
அந்நொடி என்னையும்
அறியாமல்
உன் செங்கருங் கூந்தல்
வாசனையை சுவாசித்து
விட்டேன்,
என்னை மன்னித்து விடு
என் கருவிழி உன்
நெஞ்சை வருடி
இருந்தால் என்னை
மன்னித்து விடு..
துளிகளுக்கும் விடை
கொடுக்கிறேன்
என்னவள் என்னோடு தான்
இருக்கிறாள் என்று!!
வழியும் போதெல்லாம்
விழி வழி உன்
இதழ்களை கவ்விக்
கொள்கிறேன்..
வலியும் வெட்கப்பட்டு
ஓடி விடுகிறது...
நான் உறங்குகிறேன்
கரு விழியாக
என்னுள் நீ
இருப்பதால்..
பிணிக்கும்(நோய்க்கும்)
என்னை பிடிக்கவில்லையாம்
உன்னை நினைத்து
நினைத்து சிரித்துக்
கொண்டே இருப்பதால்..
ஒவியம் "நீ"
உடையோடு இருப்பதால்
உன் உடையின் ஒரு
நூலாக பிறந்து இருந்தால்
கூட சற்று அதிகமாக
நேசித்து இருப்பாய்..
முகத்தை கான
சூரியனாக காத்திருக்கிறேன்
ஆனால் "நீ" என் விழியின்
ஒளி மீது தான்
நடந்து செல்கிறாய்! தினமும்
2010
November 15, 2013
இதயம் 2 இதயம்
நான் எழுதிய வரிகள் ;
இருப்பது பெண்ணே!
ஒரு காகிதம்
நான்
சிந்தித்த கவிதைகள்
அனைத்தும் அதில்
பிரதிபலிக்கப்பட்டுள்ளது..
தடவிப் பார்த்தபோதே
இத்தனை மோகம்
என்றால்?
இன்னும் உன்னுள்
எத்தனை?????
15-11-2013 23.50 PM
November 11, 2013
பிரியமானவளே
பார்த்து பல
நாட்கள் ஆகிவிட்டது,
உன் புன்னகையை
ஏந்தியும் பல நாட்கள்
ஆகிவிட்டது.
பெண்ணே!!
நீ வாழும்
உலகம் எதுவென்று
எனக்கு மட்டும்தான்
புரியும்.
17-11-2013 21.00 PM
November 10, 2013
உளி
இளம் வயதை ஒட்டிய ஒரு மனிதன். கல் உடைக்கும் தொழில். காலை முதல் இரவு தூங்கும் வரை கல் உடைப்பது மட்டுமே மிக சிறப்பான வேலை. உளியின் சத்தம் மட்டுமே இவன் காதுகளுக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு முறை கூட இவன் வெளி உலகத்தின் வாசனையை நுகர்ந்தது இல்லை. இவன் அறிந்த விஷயங்கள் இது தான். உளி, கல், உடைக்கும் சத்தம். தினம் தினம் ஒரு வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.
ஒரு நாள் இரவு தூங்க போகும் முன் படுத்துக்கொண்டே யோசித்தான். நாம் ஏன் இப்படி ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் என்று. ஆழ்ந்த யோசனையிலே தூங்கி எழுந்தான் அதிகாலை பொழுதில். வழக்கத்திற்கு மாறாக காலை எழுந்து தெருப் பக்கம் போனான்.
அதிகாலை பொழுது அழகான பெண்கள் கோலமிட்ட படி வாசலை அழங்கரிக்க, அப்பாவி சிறுவன் ஒருவன் பால் பாக்கெட்டை ஒவ்வோரு வீட்டின் முன் போட்ட படி இவனை கடந்து சென்றான். பூக்களை பறித்த படி என்னப்பா இந்நேரம் என்ற படி இவனிடம் ஒரு பெரியவர் கேட்க பதிலே கூறாமல் புன்னகை புரிந்தான். யாருமே கண்டு கொள்ளாத ஒரு உலகத்தை இவன் கண்டு கொண்டதாக ஒரு நினைப்பு அப்பொழுது அவன் மனதில் ஊறியது.
மெல்ல நடந்து போய் ஒரு கோயில் வாசலை உற்றுப் பார்த்தப்படி அமர்ந்தான். ஒரு திடம் மிக்க மனிதர் கோவிலை வணங்கிய படி, வாயில் ஏதோ முணுமுணுத்தப் படி வணங்கிக் கொண்டு இருந்தார். இவனுக்கு அந்நேரத்தில் தோன்றியது அவர் என்ன முணுமுணுக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே. உளியின் சத்தம் மட்டும் கேட்டவனுக்கு இப்போது தான் கோயில் வாசலில் பக்தி பாடல்கள் கேட்கிறது. புரியும் படியாக அவனுக்கு இல்லை என்றாலும் மிகவும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
ரசிக்கும் விதமான எத்தனை நிகழ்வுகள் நம் அருகிலேயே உள்ளது. அதை அனைத்தும் நாம் ஏன் இத்தனை நாள் தவர விட்டோம் என்று எண்ணியபடி
மறுபடியும் தன் வீட்டிற்கு வந்து உளியால் கற்களை உடைக்க ஆரம்பித்தான். ஆனால் இன்று அவன் உடைக்கும் போது தானும் அந்த நகரத்து வாசிகளுடன் கலந்து விட்டதாகவே எண்ணினான்.
இந்த உலகில் எண்ணற்ற விஷயங்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது ஆனால் அதை ரசிக்கும் மனிதர்கள் தான் குறைவு.
-Sun Muga-
11-11-2013 00.18 AM
உன்னைப்போல்
என்ன என்னவோ புத்தகம்
நான் வாசித்தாலும்
எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்,
உன்னைப்
போல ஒரு முறை கூட
என்னால் எழுத முடியவில்லை,
எதாற்த்தமான வரிகளை
தாங்கி இருக்கும்
உன் கவிதைகள்
என்றுமே தமிழின்
ஒரு விதைகள்.
அறிய வகை எழுத்துக்களை
நீ அறிந்து இருப்பது
எனக்கு ஒரு அதிசயம்.
உனக்குள் நல்ல
கவிதைத் தன்மை
இருக்கிறது அதைவிட
அதில் நல்ல கலைத் தன்மை
தனியாக தெரிகின்றது.
வெகு தொலைவில்
நான் இருந்தாலும்
உன் கவிதை வரி
மிக நெருக்கத்தில்
இருக்கச் செய்கிறது.
நீ எழுத வேண்டும்...
எழுத முற்பட வேண்டும்...
ரசிப்பதற்கு ஆட்கள் இல்லை
என்றாலும்கூட.....
என் சக தோழி சுந்தரிக்கு
சமர்ப்பணம்.
-Sun Muga-
10-11-2013 23.33 PM
திவாகர்
அப்படி ஒன்றும்
பழக்கம் இல்லை,
ஆனால் இன்று தான்
நீ இந்த உலகத்தில்
மானுடனாக இல்லை
என்ற விஷயம் அறிந்தேன்.
பிடித்தற்க்கான
காரணம் என்று
பார்த்தால் ஒரு
மனித தன்மையோடு
பேசும் ஒரு மனிதன்
அவ்வளவுதான்.
நீ ஒரு MGR ரசிகன்.
பேசினாய் நீ,
எதாற்த்தம் நிறைந்த
ஒரு இதயம்
உனக்கு.
உனக்கும் ஒரு
இடம் இருக்கிறது.
இதயக்கனி தான்.
தன் உயிரை
இழந்த ஒரு
சாதாரண மனிதன்
திவாகர் - அரக்கோணம்
10-11-2013 22.13 PM
மேகம்
மெல்ல மெல்ல நான்
நடந்து மேகத்தில்
நுழைய ஆசை.
என் மேனியெங்கும்
ஒரு சிலு சிலிர்ப்பு
மேகத்தை கானும் போது.
பார்க்க பார்க்க ஒரு வித
பரவசம், அன்று நான்
நடந்த பாதைகள்
அனைத்தும் என் வசம்.
நேற்று நான் பார்த்த
மேகம் இன்று இல்லை,
ஆனால் இன்று போல்
என்றுமே இல்லை
என்று எண்ணுகிறேன்.
என்றாவது ஒரு நாள்
உன்னிடம் வருவேன்
அதுவரை உன்னை
பார்த்து ரசிக்க
ஆசை பார்வையில்.
-Sun Muga-
10-11-2013 21.58 PM
10-11-2013 கண்ணீர்
இது வந்தடைந்த சுவடும்
இல்லை,
வார்த்தைகள் இல்லை,
வலியும் இல்லை,
வெட்ட வெளி பாதையில்
நடக்க கூட முடியவில்லை,
தலை முழுதும் ஒரே
கணம்.
கண்ணீர் முழுதும்
தேங்கி தலையை
ரனகலப்படுத்துகிறதே
என் இறைவா...
ஆனவை தான்,
அதை துரத்தும் ஆனை
மட்டும் உன்னிடம்.
10-11-2013 00.25 AM
November 9, 2013
மாமன்
அழகான ஒரு ஆனந்த
சிரிப்பு,
இரு குழந்தைகள் இன்னும்
ஒர் சிறப்பு.
பொன் பாதம் மண்ணில்
பட எண்ணம் இல்லாமல்
தன் கையிலே சுமக்கும்
மாமன் இவன்.
மதிய வெயிலும் சூழவில்லை,
மயங்கிய மாலையும் சூழவில்லை,
புகைப்படத்தின் புதினம் அது.
எந்நாளும் தூக்கி சுமக்க
மாமனுக்கும் ஒரு பேராசை.
பேசும் மொழிக் கூட
புன்னகை தான் இருவருக்கும்.
-Sun Muga-
09-11-2013 19.30 PM
November 1, 2013
ரைஸ்மில் (1955)to டியூசன் செண்டர் (2013)
இது தான் இந்த இடத்தின் பெயர் என்று எனக்கே லேட்டாக தான் தெரியும். ஆனால் இப்பொழுது Achiever Coaching Centre என்ற பலகை. இது ஒன்றும் ஒரு எழுத்துக்களால் ஆன ஒரு பலகை மாற்றம் இல்லை. அதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மாற்றம் என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.
தன் விளைநிலங்களை விற்று வித விதமான வீடுகளைகட்டி வாழ்ந்து வரும் மனிதர்களின் குழந்தைகள் தான் இன்று பயில்கின்றனர் இந்த டியூசன் செண்டரில்.
நெல்மூட்டைகள் போய்
புத்தக பை மூட்டைகள்,
நெற்கள் உளறிய களம் போய்
பிள்ளைகள் உலரும் களம்,
தனிமையில் தவிக்கும் தள்ளுவண்டி,
உம்மியை நெருப்பிற்க்கு
இறையாக்கி வென்புகையை
வெளியேற்றிய புகைக்கூடும்
இன்று வெறும் எலும்பு கூடு,
செங்கதிர் வெயிலில் ஆடிய
இடமும் இன்று வெறும்
செங்கற்கள் தான்.
காரணம்
ஒரு காலத்தின் மாற்றம்...
அப்பா,
நீங்கள் பலகை பிடித்த
தோரணை இன்றும்
என்னை தொந்தரவு
செய்கிறது...
தொட்டியில் நெல் அளந்து
போடும் போது நீங்கள்
எண்ணிய எழுத்துக்கள் (1,1, 2,2,3, 3) இன்றும் என் எண்ணங்களில்..
தொட்டியில் நனையும்
நெற்கள் கூட ஒரு பகல் தான்
நனையும் ஆனால் நீங்கள்
ஆயும் முழுதும் நனைந்து
விட்டீர்கள் வேர்வைத் துளியில்..
கொழுத்தும் வெயிலும்
கொட்டும் மழையும்
பார்த்திராத என் அப்பாவை
நான் பார்ப்பது என் அதிஷ்டம்.
பிறவி குணம் மாறாமல்
பிள்ளைகளை வழிநடத்தும்
பேச்சியம்மா ஒரு பொக்கிஷம்.
-Sun Muga-
02-11-2013 11.18 AM