இப்போது கூட லெமன் சாதம் சாப்பிட்டு விட்டு தான் வருகிறேன். அப்படி என்ன? அதில் ஒரு சுவை என்றால் ஒன்றும் இல்லை. நான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் போது, என் தாய் எனக்காக தயாரித்து கொடுக்கும் ஒரு சாதாரண உணவு அவ்வளவு தான். அது அவர்களுக்கு மிக எளிதாக சமைக்க கூடிய உணவு என்பதால் பெரும்பாலான நாட்கள் அது தான் உணவு. உண்ணும் போது கூட அதன் சுவை எனக்கு தெரியவில்லை என்றாலும் இன்று உணர்கிறேன் அதன் உண்ணதமான சுவையை. உயிரணு உணர்கிறது என் தாயே நீ கட்டிக் கொடுத்த லெமன் சாதத்தின் உயிரை. இன்று ஒவ்வொரு கடையிலும் நான் மட்டும் தனியாக உண்ணும்போது லெமன் சாதம் தான் சாப்பிடுகிறேன். இதில் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் என் தாய் கொடுத்த அந்த லெமன் சாதத்தின் சுவை இது வரை எந்தவொரு சிற்றுண்டியிலும் நான் கண்டதே இல்லை. ஏன் என்றால் உங்களுக்கு அறிந்த தெரிந்த விஷயம் தான் அது பாசத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை நான் உண்ணும் போது அது என் தாயின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.
-Sun Muga-
24-11-2013 17 46 PM
24-11-2013 17 46 PM
No comments:
Post a Comment