November 24, 2013

அழகே!!

நீயும் நானும் பேசிக்
கொள்ள விஷயங்கள்
அதிகம் இருக்கிறது,
அதில் விஷேசம் ஏதும்
இருக்காது என்று
நம் இருவருக்கும்
தெரியும்.
தெரியாமல் இல்லை,
தெரியவும் இல்லை,
ஏன் இந்த குறும்பு
என்று.
உன் கேள்வியே மிகப்
பெரிய கேள்விக்குறி
எனக்கு.
இருந்தும் ஆராய
வேண்டும் உனக்காக,
உன்னோடு பேசிப்
பழக வேண்டும்,
எப்படி பேசுவது
என்பதை.
விடைகள் ஆயிரம்
அறிய வேண்டும்,
அதிலும் வித்தியாசம்
அதிகம் வேண்டும்.
அந்தி மாலையில்
உன்னோடு ஒரு
அன்ன நடை
வேண்டும்..
என் அழகே!!
-Sun Muga-
24-11-2013 22.28 PM

No comments:

Post a Comment