August 23, 2015

2015 கவிதைகள் 1161 to 1170

வெள்ளை
சேலைக்குள்
வீற்றிருக்கும்
செந்தாமரை மலரே!
உன் நிறம்
காண காத்திருக்கிறேன்
கண்களால் அல்ல
காதலால்
என் உயிரே!!       1161

இரவே!
ஏன் இன்னும்
காத்திருக்கிறாய்
வெண் நிற
நிலவாய்
என்னவளை
எனக்கு காட்ட!
வெண் நிற
நட்சத்திரமாய்
என்னவளின்
முத்தங்களை கூட்ட!!      1162

அங்கும்
இங்குமாய்
அலைந்து திரியும்
என் இரவின்
கனவுகளில்
உன் கண் கண்டு
வியந்து நிற்கிறேன்
இது கனவா!
நினவா என்று!!       1163

வண்ணங்கள் தான்
ஆடை
வண்ணமிகு பட்டாம்பூச்சிக்கு
உனக்கு
உன் காதலோ!
என் காதலியே!!      1164

உன் இடை
என்பது
இயற்கை போல
எப்போதும் மெளனமாக
இருக்கிறது
என்னையும் மெளனம்
காக்க வைக்கிறது...    1165

எப்படி
உன்னைப் பார்ப்பேன்
என்ற
என் கேள்விகளுக்கு
கண்களை மூடித் தான்
என்று
கண் சிமிட்டி பதில்
சொல்லுகிறது
உன் உணர்வின் நிழல்...  1166

இந்த இரவின்
கண்ணீர்
எதைத் தேடி
செல்லுகிறது!
உன் காதலால்
என் காமத்தை மீறி...   1167

என் எதிரே
நீ நிற்கும் போது
பேச முடிவதில்லை
உன்னோடு
நான்
பேசிக் கொள்ளும் போது
எதிரே
நீ நிற்பதில்லை....    1168

நீ
பார்த்த பிறகு
கண்ணாடியும்
அழகாக மாறிவிடுகிறது
நம் வீட்டில்.....         1169

உன்னை
நான் ரசிப்பதும்
உன்னோடு
நான் ரசிப்பதும்
ரகசியமாய்
இருக்கட்டும்
இன்னும்
இன்னும்
அதனுள்
ரகசியமாய்....   1170

No comments:

Post a Comment