வார்த்தைகளோடும்
அதன்
படிமங்களோடும்
நான்
உறவு கொள்ளும் போது
கவிதை பிறக்கிறது
அதன்
முடிவில்
என்னுள் இருக்கும்
நான்
இறந்த போதும்
கவிதை வாழ்கிறது
மறுஜென்மம்
எடுத்து
அதை நான்
மீண்டும்
வாசிக்கும்போது
என்னை
அது
வாழ வைக்கிறது..
-SunMuga-
22-08-2015 11.54 PM
No comments:
Post a Comment