August 27, 2015

2015 கவிதைகள் 1191 to 1200

தூறலிடும்
இரவெல்லாம்
தூக்கம் பாதியாக
ஏக்கம் மீதியாக கழிகிறது
ஒரு துளியும்
மனதை
குளிர்விக்காத போது...     1191

கண்ணீர் விடுவதற்கு
என் மீது உள்ள
வெறுப்பும் காரணம்
விடாமல் இருப்பதற்கு
உன் மீதான
காதலும் காரணம்..     1192

அந்தரங்கமான இரவுகள்
எல்லாம்
அழகாய் ஒளியூட்டும்
நம்
இரவு பாதைகளுக்கு....    1193

நிலவில் தோன்றிய
வெளிச்சம்
இவ்வுலகை காட்டும்
நிலவாய்
இவ் உயிரை காட்டும்
வெளிச்சம் நீ...          1194

பகலின்றி
இவ்வுலகம் போனால்
இரவில்
உனக்கொரு முத்தம்
ஏன்
இரவுக்கே முத்தம்!!    1195

காமத்தின்
கயல்விழி அழகு
கண்களை மூடி
இவ்விரவையும்
இவ்வுடலையும்
ரசிக்கும் போது...     1196

மண்ணில் வளர்ந்து
இப்பெண்ணில்
வாசம் வீசும்
இப்பூவை
நானும் கையேந்தி
பரித்தேன்
பாவையின் வெட்கத்தில்
சுரக்கும் தேனை
என்
கைவிரல்களில்
தாங்கி பிடித்த படி...      1197

படுக்கை விரிப்பில்
சிதறிக் கிடக்கும்
கனவுகளை எல்லாம்
எனக்காகவும்
நான்
உயிர் வாழ்வதற்காகவும்
அள்ளி சேர்த்து
கனவு காண்கிறேன்
இரவை கடப்பதற்கும்
இறப்பை நெருங்குவதற்கும்..   1198

இரவை கடக்க
உன் இதழ் வேண்டும்
அதிலும்
அழுத்தமாக
ஒர் முத்தம் வேண்டும்..    1199

மூச்சுக் காற்றில்
பெருகும்
கடலலை
உன் முத்தம்
முடிவுறா
இரவின் முதல்
யுத்தம் உன்னோடு
குருதியாய்
வேர்வை வடிய
வெற்றி
நம் இதழ்களுக்கு மட்டும்..   1200

No comments:

Post a Comment