பசியிலிருந்து
தப்பித்துக் கொள்ள
ஒரு வழியும்
இல்லை
என்ற யோசனையின்
முடிவில்
இன்னொரு வழியை
கண்டு பிடித்தேன்
பசியைப் பற்றிய
ஒரு கவிதை
வாசிப்பது என்று...
நானும்
வாசிக்க ஆரம்பித்தேன்
பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்
என்ற மியூசியம் கவிதையை..
-SunMuga-
23-08-2015 18.28 PM
No comments:
Post a Comment