December 31, 2014

அம்மு

அன்புள்ள அம்முவிற்கு,
என்னை விட என் எழுத்துகளை அதிகம் ரசித்தவளும்,வாசித்தவளும் நீயாக மட்டுமே இருக்க முடியும். இருள் சூழ்ந்த வானத்தில் எவ்வாறு நிலா அழகாக தெரிகிறதோ அவ்வாறே உன்னைப் பற்றியும் உன் காதலை பற்றியும் எழுதும்போது என் எழுத்துகளும் அழகாக தெரிகிறது.

ஏனோ என்னுள் தனிமை வாட்டும் போது என்னை மீறி என்னால் எழுதப்படும் வார்த்தைகள் உன்னை ஒரு சில நேரம் வாட்டும் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் அதையும் நீ வாசித்து விட்டு சிறு புன்னகையிலே உன் கருத்துகள் மொத்ததையும் உதிர்த்து விடுவது தான் என் எழுத்தின் பலம்.

இந்த வருடம் முடியும் தருணம் இது. என்னால் முடிந்த வரை நம் காதலை பற்றி எழுதி இருக்கிறேன். ஆனாலும் இது குறைவு என்று எனக்கும் தெரியும் என்னை மன்னித்து விடு.

உந்தன் காதலை நினைக்கும்போது என்னுள் சந்தோசம் ஒரு பெரும் கடலாக  இருக்கிறது, ஆனால் அவளோடு ஆன என் காதலை நினைக்கும் போது ஏனோ கண்ணீர் என் வாழ்க்கையை அடி கோடிட்டு காட்டுகிறது.

வாழ தகுதியற்று நிற்கும் தருணத்தில் என் மீதான உன் காதல் தான் என்னை வாழச் சொல்கிறது.


நான் எழுதும் கவிதை 
முத்தங்களாக நீ
சொன்ன வார்த்தைகள்,
என் கவிதையின் 
வார்த்தைகள் முத்தங்களிடையே 
நீ செய்யும் சின்ன சின்ன
குறும்புகள்,
என் வார்த்தையின் அர்த்தங்கள்
பகலை இரவாக மாற்றும் 
ஓர் அற்புத போர்வை,
போர்வைக்குள் கவிதையாக 
உன் முத்தங்கள்...


-SunMuga-
31-12-2014

December 29, 2014

Phoenix

கண்ணாடி கடைகளை  
பார்த்த படி நடந்தாலும் 
என்னுள் உன் காதலே 
கடக்கிறது ஒவ்வொரு 
அடியிலும்...
******

கார்கள் ஓய்வு எடுக்க 
தனி அறைகள் இருக்கிறது
அன்பே! நம் காதல்
ஓயாமல் வேலை செய்ய ஒரு
அறையும் இல்லை என்பதே 
என் வருத்தம்...
******

கலைநயம் மிகுந்த பொருட்கள் 
ஏராளம் வண்ண வண்ண 
மின் விளக்குகளுடன்,
அன்பே! நான் ரசித்தது 
என்னவோ உன் கண்களை 
மட்டும் தான்...
******

படிகளை கூட பார்க்காமல் 
தடுமாறுவதை போல
என் கை விரல் தீண்டி
என் கண்களை பார்க்கிறாய்,
ஏறும்போதும் இறங்கும்போதும் escalator-ல்
******

அவ்வப்போது திரையில் 
குவியும் இருளுக்காகவே 
நானும் நீயும் போய் இருக்கலாம் 
பிசாசு படத்திற்கு..
******
நகைக் கடையில்
தேடிய நகை இல்லை என்று 
கோபமாய் நீ வெளியே 
வந்த பிறகு தான் நீ
சொன்னாய் - மகனுக்கு
"குஞ்சுமனி"தேடுவதாய்...
******

சொட்டு சொட்டாக மழை நீர்
சொட்டிய கண்ணாடியை 
பார்த்த போது புன்னகை 
பூத்தது உன் முகத்தில் 
எனக்கு மட்டும் தானே தெரியும்
அது உன் வேர்வையை 
ஞாபக படுத்துவதாய்..
******

நீண்ட நேரம் உன்
இதழ்களை சுவைப்பது 
போல தான்
பெரிய சைஸ் கப்-பில் 
உன்னோடு 
காபி பருகுவதும்..

இது ஒரு கனவு

இருள் சூழ்ந்த அறையுல்
கற்சிலையின் கைகளாக 
பாம்புகளின் வால்கள்..

******
பெரும் மழையாக,
பெரும் ஆறாக,
பெரும் கடலாக,
பெரும் அருவியாக,
அனைத்து கனவிலும் 
நீர் சுரக்கிறது...

******
திருவிழா இரவு
ஆட்களுக்கு தெரியாமல் 
என் பார்வையை 
தொடர்ந்தவளின் உருவம்
அறியவில்லை,
புற்றின் வெளியே
தன் தலையை நீட்டி
தன் வாய்களை திறந்து 
தன் பசியை போக்கி கொள்கிறது 
என்னோடு இருந்தவள்
ஊற்றிய பாலின் வழியே...
******

நீண்ட நிலப்பரப்பு 
நீண்ட ஓர் அலக்கலிப்பு 
நானும் என் அக்காவும் 
அலைகிறோம் யாரும் 
துரத்தாத போதும்...
******

சொந்த ஊரின் கோவில் அது
திருவிழா இரவு,
தெருக்கள் தோறும் 
மின்னி மின்னும் மின்சார 
விளக்குகள்,
யாருமற்ற சாலையை அடையும்போது 
அழுத்தமாக,
மிக சத்தமாக அழும்
பெண்ணின் குரல்,
ஒரு பெண் அல்ல
ஓராயிரம் பெண்ணின் 
குரல்கள்..
******

நிஜத்தில் கூட
என் அப்பாவின் கைகளை 
பற்றிக் கொண்டு நடப்பதில்லை,
முதல் முறை நடந்தேன்
மிக நீளமான பள்ளி சுவரை 
பார்த்த படி
யாரோ ஒருவரைப் பற்றி 
இருவரும்
பேசிக்கொண்டு நேற்றிரவு..
******

குடிசை வீடு 
விளக்கும் இல்லை,
அத்தைக்கு அறிவுறை 
கூறுகிறாள் அம்மா...
******

தென்னம் தோப்பு கிணற்றில்
தலை இல்லாத பெண் 
எப்படி உள்ளே வந்தது 
என்று தெரியாத படி
ஆம்புலன்ஸ்,
அலறிய படி ஓடி வந்த
விதவை கிளவியின் 
கால்களை தடுக்கிறது 
வயல் வரப்புகள்,
அவள் கையை பற்றி 
அவளை தூக்கும் போது 
நான் பார்த்தேன்
அவள் கைகள் முழுதும் 
ரத்தம்...
******

வறண்ட நிலத்தில் 
திடீரென 
வானத்தில் இருந்து மட்டும் 
அல்ல இன்னும் எத்தனையோ 
வழிகளில் வழிகிறது 
தண்ணீர்,
கண்ணாடி அறையில் 
பைத்தியமாய் அலையும் 
வேசிப் பெண் குடுவையை 
எடுத்து தானே தன் வயிறை 
கிழித்துக் கொள்கிறாள்,
வெளியே நான் நிற்கும் 
இடத்தை தவிர அனைத்து
இடமும் தண்ணீரால் 
நிரம்பி இருக்கிறது,
பெண்களை பிடிக்காத கயவன் 
போல ஒருவன் தண்ணீரில் 
ஓடும் படகில் ஒரு
பெண்ணின் பிறப்புறுப்பில் 
தன் கையை விட்டு 
கொன்று வீசுகிறான்,
எங்கோ இழுத்து செல்லும்
படகு காட்டின் செடி கொடிகள் 
மீது சீறி பாய்ந்து மலையில் 
படியில் இறங்கும் போது தான்
நான் பார்த்தேன் கோவிந்தன் 
சாமியின் உருவமாக நாங்கள் 
என்னும் விளக்கு தூணை..
******

இருள் சூழ்ந்த குகை,
பாறையின் மீது வடியும் 
தண்ணீர்,
தண்ணீரின் மீது மிதக்கும் 
பாம்புகள்,
அரை நிர்வாணமாய்
பாறையின் மீது அமர்ந்து 
இருக்கும் என் அண்ணன்..
******

December 23, 2014

புத்தாண்டு

இந்த ஆண்டின்
இறுதி கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

அடுத்த ஆண்டின்
முதல் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

உனக்கும் எனக்குமான
வாழ்க்கையில் எனக்கு
மிஞ்சி இருக்கும்
ஒர் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

மானமற்ற என் வாழ்க்கையில்
இன்னும் என் உயிர் இருக்கிறது உன்னிடம் மன்னிப்பு கேட்க...

உயிரே! என்று உன்னை
அழைத்தற்காக மன்னிப்பு கேட்கிறேன்..

என் உலகம்! நீ என்று
நினைத்தற்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

உன்னுடனான என் கனவிற்கு
மன்னிப்பு கேட்கிறேன்..

கனவிலும் உனக்காக
நான் வடித்த கண்ணீருக்காக
மன்னிப்பு கேட்கிறேன்..

நிலவாக உன்னை நினைத்து
அதில் இரவாக என்னை
இணைத்து நான் வடித்த
கவிதைக்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

கவிதையில் வாழும்
என் காதலுக்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

காதலுள் வாழும்
என் பிரியத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

பிரியத்தில் வாழும்
என் சுகத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

சுகமாக நான் நினைக்கும்
என் மரணத்தின் முன்
உன்னிடம்
நான் கேட்க நினைக்கிறேன்
ஓர் அர்த்தமற்ற மன்னிப்பு..

-SunMuga-
24-12-2014 00.08 AM

December 16, 2014

இரவு பேய்

இருள் சூழும் போது
நீ வந்து விடுகிறாய்,
நீ வந்தால் தான்
எனக்கு எப்போதும்
இரவு வருகிறது..
இருட்டில் உன்னில்
முதல் எது முடிவு எது
என்று என்னால் யூகிக்க முடியவில்லை..
தூக்கம் இல்லாமல்
முழித்து இருக்கும் எனக்கு
எப்போதும் துக்கதோடு
வரும் நீ தான் ஆறுதல்..
துக்கம் நிறைந்த உன்
கண்களை இரவாக
நானும் பார்க்கிறேன்,
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் துக்கமாகவே தெரிவது
தான் எனக்கு துயரம்..
நான் உன்னோடு பேசினால்
அது பகல்,
நீ என்னோடு பேசினால்
அது இரவு,
என்று நானே
பிரித்துக் கொண்டேன்..
இரவை உடையாக உடுத்தி
வரும் உன்னை
ஒரு முறை கூட உரசி
பார்த்தது இல்லை - ஏன்?
கண்களை திறந்து பார்த்தால்
இவ்வுலகம் ஓர் இருட்டு,
கண்களை மூடி பார்த்தால்
இருட்டுனுல் நீ ஓர் உலகம்..
நிலவை பார்த்து நீ சிரித்தாய்!
ஏன் என்று நான் கேட்டேன்
இதோ உன் விளக்கம்;
இருள் படர்ந்த என் உலகில்
எட்டி பார்த்தது அந்த நிலா;
ஆனால் நீயோ!
இருள் படர்ந்த என் இரவில்
எட்டி குதித்த ஓர் நிலா...
இரவே உன் துக்கத்தில்
பிறந்த ஒரு துளி தான்
இந்த கடல் என்றாலும்
அவை உன்னைப்போல இல்லை,
தன் துக்கங்களை
அடக்க முடியாமல் அலையாய்
அலைந்து கொண்டு இருக்கிறது,
அதன் சலசலப்பு இன்னும்
எழும்பிக் கொண்டே இருக்கிறது..
-SunMuga-
19-12-2014 12.00 AM

December 15, 2014

தம்பியின் காதல்

ஒரு நிமிடம் தாயாக மாறி,
தடுமாறி யாருக்கு
யார் அறிவுறை கூறுவது?
என்று யோசித்து -
நடப்பவை நடக்கும் என்ற
முதிர்ச்சியோடு முதல்
முதலில் தம்பியின் கண்களை
பார்க்க தவிர்த்தேன்..
அனைத்தும் அடங்கிய இரவு
சட்டென்று பெரியவன் ஆன
உணர்வு எழுந்ததும்-
எழுந்தும் எழ மறுக்கும்
கண்ணீர் - காரணம்
தம்பியின் காதல்..
காதல் ஊற்று நீர்,
கொப்பளிப்பதோ உணர்ச்சிகள்,
உணர்ச்சிகள் பெருக பெருக
ஊற்று நீரும் பெருகுவதை
போல, வாழ்வும், வாழ்வதற்கான வளமும் பெருக நித்தம்
உழைக்க வேண்டும்..
உழைப்பு உன்னிடம் அதிகம்
இருக்கிறது..
என்னுள் இருக்கும்
காதலை பற்றி எனக்கே
தெரியாத போது உனக்கு
காதலை பற்றி கூற எனக்கு
எந்தவொரு அடிப்படை
தகுதியும் இல்லை என்றே
நினைத்தேன் அவ்விரவில்..
ஆதி முதல் அனைத்தையும்
அம்மாவிடம் நீ சொல்லி
விட்ட பிறகு தான் பெரு மூச்சு
நான் விட்டேன்..
-SunMuga-
15-12-2014 01.30 AM

December 14, 2014

தாய்

ஆணோ! பெண்ணோ!!
தன் மார்பில் அனைத்துக்
கொள்ளும் தாய்க்கு தான்
தெரியும் குழந்தையின் பசி
எப்போது அடங்கும் என..
உறவை நினைத்து
உண்ண மறந்த தாயும்
அழுகிறாள் - சப்பி சப்பி
ஏமாற்றம் அடையும்
குழந்தையை நினைத்து..
யாருமே பிடிக்கவில்லை என்று
யாருமற்ற வாசல் படியின்
சுவரை பிடித்து அழுகிறது
என் வீட்டு குழந்தை...
-SunMuga-
14-12-2014 22.15 PM

December 13, 2014

முதல் பரிசு

என் சிரிப்பினில் பிறக்கிறது 
உன் காதலும், காமமும்.

--------------------------------------------------------------------
காமம் கீச்சப்பட்ட இரவின் பின்
அதிகாலை பிறக்கிறது
சிறு குழந்தையாக.
--------------------------------------------------------------------

கோடிட்ட இடங்களை 
நிரப்புவது போல தான்
உன் கண்கள் காட்டிய 
இடங்களை நிரப்புகிறேன் 
என் இதழால்...
--------------------------------------------------------------------

உன் இமை அசைத்தால் 
உன் இதழுக்கு தான்
முதல் பரிசு...
--------------------------------------------------------------------

பக்கத்து அறை மெதுவாக 
திறந்தாலும் மிக
நுணுக்கமாக கேட்கிறது 
கடன் வாங்கிய பிறகு..
--------------------------------------------------------------------

பாய்ந்து வந்த பாம்பு
கண்ணுக்குள் கொத்திய 
பிறகு கலைந்தது அந்த கனவு.
--------------------------------------------------------------------

குடிசையும் வானமாகியது 
குண்டு பல்பில் 
நட்சத்திரம் மிளிரும் போது..
--------------------------------------------------------------------

-SunMuga-
14-12-2014 22.00 PM

December 11, 2014

ஊதிய உயர்வு

இப்போதும் எங்கள் மீது திணிக்கப் பட்டு இருக்கும் அந்த வேலையில் தான் நாங்கள் மூழ்கி கிடந்தோம். திடீரென உங்கள் சிரித்த முக அழைப்பு எங்களுக்கு மிக சலிப்பூட்யது தான், இருந்தாலும்கூட நாங்கள் மிகுந்த மன  யோசனையோடு தான் உங்கள் அறையை மிக நிதானத்துடன் மெதுவாக அடைந்தோம். எங்களை அறையின் உள்ளே வரவேற்று சென்ற வருடம் பதிவு செய்யப்பட்ட அதே ரெக்கார்டர் வாய்ஸை( சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் நமது நிர்வாகத்தின் நிதி நிலமை சற்று மிக மோசமான நிலையில் இருந்தாலும்கூட, உங்களின் மிக திறமையான உழைப்பை மதிப்பில் கொண்டு, நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வு உங்களுக்கு கொடுக்கப் படுகிறது) கசிய தொடங்கியது எந்தவொரு விதத்திலும் எங்கள் மனதை பாதிக்கவில்லை.

ஏனென்றால்;

"அண்ணே!அன்புக்கு அன்னை தெரசா;
ஆஹா!!
அறிவுக்கு அப்துல் கலாம்
ஓஹோ!!
அடக்கத்துல நெல்சன் மண்டேலா!!
அடடாடா!!
நம்ம போஸ் பாண்டி அண்ணன் கொடுத்த ஐந்நூற!
ஆமா!!
அஞ்சு லட்சமா! நினச்சுகின்னு!!
ஆமா!
நம்ம அல்லி நகரத்து அடியை தான் கொஞ்சம் காட்டுவமா?

நாங்கலாம் இந்த குருப்போட பரம்பரை உறுப்பினர் என்ற வகையில் தான்.

ஆனாலும் ஒரே ஒரு கேள்வி தான் ஆழ் மனதுக்குள் எழுகிறது. அது என்னவென்றால் நிர்வாகத்தின் நிதி நிலமை என்பது எல்லாருக்கும் சமம் தானே? அப்படி இருக்கும் போது ஒரு பிரிவினருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகவும், இன்னோரு  பிரிவினருக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். குறைத்து கொடுத்தவரிடம் நிதி நிலமையை பற்றி கூவி கூவி பேசும் முன் அதை பற்றி சற்றும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
வேலை செய்வதற்கு ஆட்கள் இருக்கும் பட்சத்தில் புதிய வேலைகள் பிறக்கும் என்ற ஜே பி சாணக்கியாவின் வரிகளுக்கு சற்றும் குறையாத பட்சத்தில் வேலைகளை மட்டும் அள்ளி அள்ளி எங்களை போன்ற மனிதர்களுக்கு கொடுத்து விட்டு ஊதிய உயர்வு என்ற இலையுதிர் காலத்தில் மட்டும் நிர்வாகத்தின் நிதி நிலமை மோசம் என்று எங்கள் அடி வயிற்றில் அல்ல அதற்கும் கீழே மிதிப்பது எந்த விதத்தில் தான் நியாயம்.
-SunMuga-
11-12-2014 23.17 PM

December 10, 2014

அலுவலகம்

ஆதி முதலே எனக்கும் என் மீது திணிக்கப்பட்டு இருக்கும் இவ்வேலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது. யாருக்கு புரியும் நல்ல கவிதையை படிக்க ஏங்கும் என் கண்களின் வலியும், நல்ல கவிதையை எழுத துடிக்கும் என் கை விரலின் வலியும். என்னை சுற்றும் உலகத்தை நான் நிதானமாக தான் கவனிக்கிறேன் என்று எனக்கே தெரிகிறது. உறக்கமற்ற இரவில் உடையும் காதல் எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி பல விதமான  அறிக்கைகள் தெரிவிக்க தான் செய்கிறது. என்ன செய்வது என்று யோசிப்பது தான் மிகத் துயரமாக இருக்கிறது.
அப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்தேன். இப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்கிறேன். இதற்கு மத்தியில் குறைவான சம்பளம் பெறும் உன்னை நான் எப்படி காதலிக்க முடியும் என்று என்னை ஒதுக்கியவளையும் நினைக்கத் தான் செய்கிறேன்.
அவள் என்னை ஒதுக்கியதில் எந்தவொரு தவறும் இல்லை. இது என்னைப் பற்றி நான் எழுதிய வரி;
நித்தம் நிதானமுற்றே
அலைகிறேன் நிறையாத
வயிற்றை சுமந்துகொண்டு..
எழுதி இருப்பது என்னவோ ஒரு வரி தான். ஆனால் அதில் பிரதிபலிப்பது என் இயல்பான வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஒரு வேலை அவளுக்கு புரிந்து இருக்கலாம் அதனால் என்னவோ சேரும் முன்னே பிரிந்து விட்டாள்.
என் வாழ்க்கையின் விதியை எதிர் நோக்கி வீதி எங்கும் அலைகிறேன் விடுமுறை நாட்களில் கூட, வாழ்வதற்கு நான் ஆற்றும் கடமைகளை மறந்து.
-SunMuga-
10-12-2014 03.48

December 8, 2014

காரணம்

என்னைப் பார்த்து
சிலர் சிரிப்பதற்க்கும்
நான் அழுவதற்க்கும்
நானே காரணம்
சில பல நேரங்களில்...

என்ன காரணம்?

காரணமே இதுவரை நீ கூறவில்லை என்றாலும், உந்தன் செய்கைகள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலிரவு

ஆணுக்கும் பெண்ணுக்கும்
எப்பொழுதும் நடப்பது தான்
அப்பொழுதும் நடக்கிறது,
விரிகின்ற காமத்தில்
சுருங்கும் உடையைப் போல,
என் மனம் தான்
இங்கு நொருங்குகிறது,
இனி என் குறி எழுவதற்கு
சாத்தியங்கள் அற்று
போய்விட்டது அவளோடு- ஆன
வேறொருவனின் சிந்தனையில்..

31-08-2014

கிட்டத்தட்ட என் மனதின் ஒரு மாத போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது இன்று. ஏன் இப்படி ஒரு தவிப்பு என் மனதிற்கு என்று எனக்கே தெரியவில்லை. காதலியை காதலன் கான காத்திருக்கும் தருணம் எப்படி பட்டது என்று எனக்கும் தெரியும். ஆனால் எப்படி பார்க்காமல் இருப்பது என்பது தான் இன்றைய தவிப்பு. உண்மையை சொல்லபோனல் ஏதோ ஒரு விரக்தி வாழ்க்கையின் மீது. வாழ கூட தகுதி இல்லை என்ற ஒரு சிந்தனை அவ்வளவு தான்.

December 7, 2014

நான் பார்த்த வரையில்

கை குழந்தையின்
கண்கள் கடலை
பார்த்து ரசிக்கிறது,
பள்ளிக் குழந்தை பவ்வியமாய்
நடனம் ஆடுகிறது,
கல்லூரி பெண்ணின் கண்கள்  தன் காதலன் கண்ணோடு
கதை பேசுகிறது,
கல்யாணம் ஆனவள்
கண்கள் ஏனோ கண்ணீரோடு
கரையை பார்க்கிறது,
இவை யாவும் மத்தியில்
இவ்வுலகத்தை ஒதுக்கியவளின்
கண்கள் தன்னோடு
ஒதுங்கிக் கொள்ள
யாரோ ஒருவனை தேடிக் கொண்டு இருக்கிறது
-SunMuga-
07-12-2014 17.07 PM

வெட்கம்

உன்னைப் பார்த்து
வெட்கப்பட்டு முகம் மூடி
பழகியவள், முதல் முறை
ஆசைப்படுகிறேன் எருவில்
முகம் மூட வேண்டுமென,
நீ இல்லாத இவ்விரவில்..
-SunMuga-
07-12-2014 00.19 AM

உடை

உடுத்தும் உடையைப் போல
வாங்கும் வருமானம் தான்
ஒருவனுக்கு மானம் என்றால்
நான் நித்தம்
அம்மனமாக தான் இருக்கிறேன்
கூச்சங்களை கடந்து...
-SunMuga -

December 6, 2014

கடிதம்

உன் கடிதத்தில்
வாழ்கிறேன் கண்மணியே!
கவிதையின் வடிவமாய்!
உன் கரம் தொட்டு
பார்க்கிறேன் கண்மணியே!
வார்த்தையின் வடிவமாய்!
அர்த்த ராத்திரியில்
உன்னையே அனைத்துக்
கொள்ள பார்க்கிறேன் கண்மணியே!
கடிதத்தின் அர்த்தமாய்!!
கடிதத்தின் முடிவுரையில்
உன் முத்ததையை
நான் எதிர் பார்க்கிறேன்!!
என் கண்மணியே!
-SunMuga-
07-12-2014 00.25 AM

நீயும் வருவாய்

நீயும் வருவாய்;
மெல்ல முத்தமும் தருவாய்;
சொல்லெடுத்து தருவாய்;
மெல்ல மெல்ல மேனியில் பொழிவாய்;
மோதி நின்ற கண்கள்;
பாதி பார்த்த கைகள் என;
பக்குவமாய் உன் இதழ் பேச
அந்த இரவிலும்
பத பதக்கும் என் இதயம்;
-SunMuga-
06-12-2014 22.04 PM

புத்தகம்

புத்தகம் நான் படித்தாலும்
புத்தியிலே உன் முகம்;
புரட்டிய பக்கம் எல்லாம்
புன்னகையே உன் முகம்;
எடுத்து வைக்க மனமில்லை;
புத்தகமான உன் இதழை
படித்து படித்து ஏனோ
சிவந்தது இதழோடு
என் கண்களும்;
காகிதத்தில் கவிதை படித்தேன்
கவிதையின் விரலை
கை கோர்த்துக் கொண்டு;
கண் இமைக்கும் நேரத்தில்
நான் படித்தது எத்தனையோ
பக்கங்கள்;
-SunMuga-
06-12-2014 21.46 PM

நினைத்து இருந்தேன்

சகலமும் நீ என்று
நினைத்து இருந்தேன்;
சமாதியின் சருகாக
தனித்து இருந்தேன்;
நல்ல படம் பார்க்கும் போது
உன் முகத்தை
பார்த்து இருந்தேன்;
நல்ல இசையை
கேட்கும் போது உன் குரலை
இணைத்து இருந்தேன்;
நல்ல கவிதைகள் வாசிக்கும்
போது உன் இதழை
ரசித்து கிடந்தேன்...
அன்பே! சகலமும் நீ எனக்கு
என்று? தான் நான் உனக்கு;
-SunMuga-
06-12-2014 21.30 PM

December 5, 2014

உன் முத்தம்

அனைத்தும் முடிந்தது
இன்னும் இருக்கிறது
காதலின் விருட்சமாய்
உன் நெற்றி முத்தம்...

December 2, 2014

நிசப்தமான இரவு

நிசப்தமான இரவில்
நிதானமாக வடிகிறது
என் கண்ணீர்!
உயிரே!
உன்னை நினைத்து
நான் கரையும் இந்த
இரவும் விடிந்து
விட்டது காலையில்;
இப்பொழுதும்
நிதானமாகவே வடிகிறது
என் கண்ணில் கண்ணீர்...

The Lines Are My Own Life

I Set A Lines For You,
I Know,
You Know The Meaning Of The Lines,
Again I Know,
You Don't Feel The Meaning Of The Lines,
Because,
The Lines Are My Own Life

-SunMuga-
30-11-2014 22.58PM