December 7, 2014

நான் பார்த்த வரையில்

கை குழந்தையின்
கண்கள் கடலை
பார்த்து ரசிக்கிறது,
பள்ளிக் குழந்தை பவ்வியமாய்
நடனம் ஆடுகிறது,
கல்லூரி பெண்ணின் கண்கள்  தன் காதலன் கண்ணோடு
கதை பேசுகிறது,
கல்யாணம் ஆனவள்
கண்கள் ஏனோ கண்ணீரோடு
கரையை பார்க்கிறது,
இவை யாவும் மத்தியில்
இவ்வுலகத்தை ஒதுக்கியவளின்
கண்கள் தன்னோடு
ஒதுங்கிக் கொள்ள
யாரோ ஒருவனை தேடிக் கொண்டு இருக்கிறது
-SunMuga-
07-12-2014 17.07 PM

No comments:

Post a Comment