January 31, 2015

2015 கவிதைகள் 171 to 180

மகிழ்ச்சி பரவும்
இவ்விரவில்
தெரியும் இருளில்
எங்கெங்கும் பரப்புவோம்
நம் காதலின்
இனிமையை
இதழோடு இதழ் கோர்த்து
மின்னி மின்னி
தெரியும் நட்சத்திரங்களுடன்
ஆயிரம் ஆயிரமாய்
கனவுகளை கடந்து...            171

மயங்கி நிற்கும்
அவ்விரவில்
வாசலில்
தயங்கி தயங்கி
நீ தந்த முத்தம்
பொங்கி வருகிறது
நித்தம் இவ்விரவில்...         172

தனிமை படுத்தப்பட்ட
வார்த்தைகளை போல
அர்த்தங்கள் இல்லாத
இவ்வாழ்க்கை
வாழ்வதற்கு ஓர்
காரணம் உன் காதல்...        173

கரும் புள்ளிகள் நிரம்பிய
இவ்விரவில்
கரும் புள்ளியாய் உனக்கு
அழகூட்டும் உன் மச்சத்தை
தேடி அலைகிறேன்
கருஞ் சிறுத்தையாய் நான்..   174

நீ எங்கே
பார்க்கிறாய்
என் முகம் தூக்கி
பார்க்க முடியவில்லை
என்னை மூட
என் கைவிரல்
போதுமா?
கொஞ்சம் உன்
கைவிரலோடு
உன்னால் முடிந்ததை
தந்து உதவிட
வருவாயா?
இவ்விரவோடு
நான் என்னையும்
மூடிக்கொள்ள...             175

யாத்திரையை தொடர்கிறேன்
நித்திரையில்
உன் கை விரல் பிடித்து..       176

நீ என்றால் நான்
நான் என்றால் நீ
நீயும் நானும்
என்றால் காதல்
காதல் என்றால்
முதலில் அன்பு
இரண்டாவது அரவணைப்பு
மூன்றாவது முத்தம்
நான்காவது இதயத்தின்
சத்தம்
இப்படி ஏதோவொரு
நம்பிக்கையில்
நானும் நீயும்
வாழ்வது தான் காதல்..         177

கனவு கண்டவுடன்
கண் விழிக்கிறேன்
உடைகள் அற்ற
இரவைப் போல
ஏனோ இவ்விரவை
கடக்கிறேன்..                         178

நிகழ்ந்த நிகழ்வு
நிஜமாய் என்று
யோசித்தேன்
கனவில் அது நடப்பதற்கு
சாத்தியம் இல்லாத போதும்..  179

புதிய புதிய
அவதாரம் எடுக்கிறது
உன் இரவு முத்தம்...          180

2015 கவிதைகள் 161 to 170

வண்ணம் மின்னும்
வார்த்தையை வடிக்க
நானும் யோசிக்கிறேன்
யோசனைகளை கடந்து
உன் காதலும்
என் காமமும்
கலந்து காற்றில்
படரும் வண்ணமாக
உன் முகமே
மின்னுகிறது
என் கவிதையில்..               161

உன் காதலையிட்டு
கவிதையை பிடிக்கிறேன்
தூண்டிலிட்டு மீனை
பிடிப்பதை போல..              162

ஏதோ ஒன்றை
சொல்ல
மெளனமாய் பேசிக்
கொண்டு இருக்கிறேன்
தனிமையில்
உன்னோடு
உன் காதலோடு
காகிதத்தின் வழியே
கவிதையாய்...                     163

ஒற்றை வரியாய்
இரவில் உன்
இதழை பற்றி
இரவின் தனிமையை பற்றி
நிலவின் முழுமையை பற்றி
ஏதோ ஒன்றை
எழுதிக் கொண்டு தான்
இருக்கிறேன் இந்த இரவில்.. 164

நான் இருப்பதற்கென்று
இருக்கிறது
உன் இதயம்
நான் பெறுவதற்கென்று
பிறக்கிறது
உன் முத்தம்
நான்
இருப்பதும்
பெறுவதுமாய்
வாழ்வதற்கு என்றும்
இருக்கிறது நம் காதல்..       165

கீழ் தளத்தில் தொடங்கிய
உன் பார்வை
முதல் தளத்தில் தொடங்கிய
உன் காதல்
இரண்டாம் தளத்தில்
தொடங்கிய உன் அணைப்பு
மூன்றாம் தளத்தில்
தொடங்கிய உன் முத்தம் என
இப்போது
கீழ் தளத்தில்
பார்வையோடு கலந்த
அணைப்போடு
முத்தத்தை பெற்றுக்
கொள்கிறது உன் காதல்..    166

வான் வெளியாய்
உன் உதடுகள்
மழை பொழியும் போது..         167

போதும் என்று
பொய் சொல்ல கூட
மறந்தேன் - இரவில்
பெய்த உன் முத்த
மழையினில்...                              168

மெல்லிய ஆடையில்
ஓர் மெளனம்
மெளனத்தை போல
ஓர் மெல்லிய ஆடை
துல்லியமாய் நீயும்
குறி வைக்கிறாய்
மெல்லிய மெளனமாய்
என் இதழில்
ஓர் முத்தமிட...                    169

உன் உடைகள்
இரவை உடுத்திக் கொள்ள
ரோஜாவோ
மல்லியோ
அல்லது
ரோஜா மல்லியாகவோ
நம் இரவை
எடுத்துக் கொள்ள
நாமும் கொஞ்சம்
துணைபுரிவோமா?     170

January 29, 2015

Feb 14 Special

வரிகள் அனைத்தும்
என்னுடையது அல்ல
வானம் தந்த
மழையை போல
அனைத்தும்
உன்னுடையது..

தினம் தினம்
நம் தினம்
அனுதினமும்
சம்மதம்
அகிலமும்
ஆனந்தமாய்
உன்னோடு ஒர்
கைவிரல் கோர்க்க..

நீர் நீராய்
கண்ணில்
வடியும் நீரினில்
வாழ்கிறேன்
சாலையோர நாய்
போல நீ என்னை
என்னும்போது..

பட்டு உடுத்தி
நீ வந்த பிறகு
எட்டு எடுத்து
வைக்கும் குழந்தையை போல
உன்னை எண்ணியே
என் வாழ்க்கையில்
எட்டு எடுத்து வைக்கிறேன்..

சிறு நதியாய்
வடியும்
என் கண்ணீர்
எப்போதும் வந்தடைகிறது
உன் காதல் கடலில் ..

மெளனமான
இந்த சிறு நதியை
பெருங்கடலாய் சீற்றம்
அடைய வைக்கிறது
உன் காதல்..

புரியும் கவிதை
கூட
புரியவில்லை உனக்கு
உன்னை புரிந்ததால்
தான்
கவிதையே எனக்கு
காரிருள் தந்த
கவியில்
உன் வெள்ளைச்
சிரிப்புகளின்
ஒளியாய்
ஒலிகள்...

2015 கவிதைகள் 151 to 160

நீந்த மறந்த
மீனைப் போல
உன் காதலை
காண மறந்த
நானும்
அழுகிறேன்
மீனை விட
பெருந் துயரமாய்...           151

படகில் அமர்ந்து
கடலை பார்க்கிறேன்
கடலை பார்த்து
உன் நீண்ட
காதலை நினைத்து
பார்க்கிறேன்...                  152

கடற்கரை மணலில்
கால்கள்
புதையும் ஆழம்
உன் பிரிவின்
ஓர் குறியீடு...                153

கோடுகள் வரைந்த
மணலில் மேடுகளில்
மெல்லிய உன்
காதல் புன்னகை
உன் கால்களை
மணலாய் என்
கை விரல் தொடும் போது..    154

சூரியன் சுகமாய்
பார்க்கிறான்
நீயும் நானும்
சிரித்து பேசியதை விட
உன் விரல் நீட்டி
நீ பேசியதை....                    155  

கடலில் செலுத்திய
வலையை
இழுப்பதை போல
உன்னுள் நான்
செலுத்திய
காதலால்
முத்தத்தை இழுக்கிறேன்
/இழக்கிறேன்....                156

நுரையிட்டு
நூதனமாய் முத்தமிடும்
அலையை போல
உன் கரம்
தொட்டு காத்திருக்கிறேன்
என் நுனிவிரல்
எழுதிய கவிதை கொண்டு..  157

கீ போர்டு கொண்டு
உன் ஓவியம்
வரைகிறேன்
உன்னைப் பற்றி ஓர்
கவிதையாய்..                    158

உறங்குவதாய் நினைத்து
ஏங்குகிறது
என் இரவு உலகம்...          159

எல்லையற்ற
இவ்விரவில்
நம் இரண்டு விரல்கள்
மட்டும் எல்லையற்ற
சந்தோசத்தில்
கடக்கிறது காலையை...     160

January 23, 2015

2015 கவிதைகள் 141 to 150

புதிய
இரவு உடை உடுத்தும் போது
என்னை விட நீயே
புத்துணர்ச்சி பெற்று விடுகிறாய்..             141

நீ ரசித்த பாடல்களை
உன் குரலிலே
ரகசியமாய் நானும்
ரசித்துக் கொள்கிறேன்..      142

பனித்துளி போல
என் உயிர் துளி
அதில் தெரியும்
வானமாய்
உன் காதல்..                              143

நத்தை கூடு
நகர்வதை போல
நானும் நகர்கிறேன்
மணல் மேட்டில்
உன் காதலை
தேடி
உன் காதலின்
மடியை தேடி
கிடைத்த உன்
காதலில் நானும்
வசிக்க தொடங்கினேன்
மணலின் மீது
வசீகரம் மிக்க
நத்தைக் கூடாய்...                  144

எவ்வாறு அடைந்தேன்
என்று நானும்
யோசிக்கிறேன்
நம் காதலின்
இருப்பிடத்தை
இருப்பது நீயும்
நானும் என்று
தெரிந்த பிறகு
இன்னும் என்ன யோசனை
என்று யோசிக்கிறேன்..     145

நகரத்தின் வீதியில்
அலைந்து திரிகிறேன்
அதிகமாய்
உன்னோடு
இருந்தும் உறவாட
முடியாத
உறவை நினைத்து
உறங்க செல்கிறேன்
மன்னித்து விடு...                146

உலக இருப்பிடம்
எது என்று
எனக்கு தெரியாது
ஏன் என்னையும்
எனக்கு தெரியாது
ஆனாலும்
இப்போது
நான்
இருப்பது
உன் இதயம்...                      147

கருவறை வாசம்
உன்னோடு
நான் இருக்கும்
இவ்வறை
இதுவரை
யாருக்கும் தெரியாது
ஏன் உனக்கே
தெரியாது...                         148

உலகத்தின் மீது
கண்களை வைத்தேன்
உன் மீது
மட்டும்
காதலை வைத்தேன்..   149

என் கவிதையும்
ஆடுகிறது
காற்றில் ஆடும்
காகிதம் போல....             150

January 22, 2015

2015 கவிதைகள் 131 to 140

குருதி சிந்த நீ அறுத்தாய்
உன் கையை
நான் அறுக்க நினைப்பதோ
ஆணாக
மற்றவர் என்னும்
என் ஆணுறுப்பை
மட்டும் தான்...            131

ஏதோவொரு பெருமை
இருக்கத் தான் செய்கிறது
இந்த இரவுக்கும்
நீ இல்லாத போதும்
இரவலாக
அவை கொடுக்கும்
உன் முத்தத்தால்..      132

ஒரு முறை தேவனையும்
வணங்கினேன்
தேவதையே! நீ
வேண்டுமென..    133

மறையும் வெளிச்சத்தில்
பிறக்கும் இருளில்
தவழ ஆரம்பித்து விடுகிறது
உன் முத்தம்...            134

இரவில் நான் விளையாட
உதவும் விளையாட்டு சாமான்
உன் வளையல் மட்டும் தான்..  135

வண்ண வண்ண
வளையல்கள் நீ
இட்டாலும்
என் எண்ணத்தை முழுவதுமாய்
கவர்வது உன் இதழ்
மட்டும்தான்...   136

ஜோடி ஜோடியாக
வளையல்கள் இட்டு
கொள்கிறாய் ஜாடயாய்
என்னை பார்த்து.....      137

சீக்கிரமாய் வந்து விடு என
உன் வளையலை குலுக்கி
சைகை செய்கிறாய்
புன்னகையோடு.....     138

பறித்த பூவை
கொஞ்சம்
வளையலுக்கும் இட்டு
அழகு பார்ப்பது
என் அழகு மட்டும் தான்...   139

அலைப்பேசியின் அலறலாக
உன் வளையல் ஒலியை
பதிவு செய்த பின்
நான் உறங்குவதே இல்லை..  140

2015 கவிதைகள் 121 to 130

அந்நாள் பிறந்தேன்
இந்நாள் வளர்ந்தேன்
உன்னால் வாழ்கிறேன்
அவ்வளவு தான் என் வாழ்க்கை..    121

எப்போதும் நாம் இருவருமாய்
கடக்கும் இந்த சாலையில்
20 வெள்ளை கோடுகளை
இன்று தான்
வேதனையோடு பார்த்து
கடக்கிறேன் நீ இல்லாத
இந்நாளில்...             122

உதிரும் பூக்களாய்
உன் நினைவோடு
என் கண்ணீரையும்
உதிர்த்து விடுகிறேன்
யாருமற்ற இவ்விரவில்..    123

வழியும் கண்ணீரின்
வழியாகவும் உன்
நினைவுகளை சேகரிக்கிறேன்.. 124

சோகமாய் அமர்ந்து
வானத்தை பார்க்கும் போது
வானமாய் நீ படர்ந்து
பகிர்ந்து கொள்கிறாய்
என் பிரிவின்
அந்நாள் சோகத்தை..       125

சாலையோரத்தில் உறங்கும்
ஒருவனை பார்த்து சிரித்துக்
கொள்கிறேன் உன்
நினைவின் சந்தோசத்தில்
நான் உறங்காமல்
அவனை கடப்பதை நினைத்து..        126

பனி வீசும் இந்த
கடல் காற்றில்
நீ பேசும் ஒற்றை வார்த்தை
துல்லியமாக கேட்கிறது
நீ கேட்டது ஒரேயொரு
முத்தம் மட்டும் தான்...         127

நான் உடைகள் உடுத்தும் போது
உன்னை மட்டும் அல்ல
உன் முதல் அனைப்பையும் சேர்த்து நினைத்துக்
கொள்கிறேன் என் அன்பே!!  128

நான் ரசித்த முதல் மழை
நம் காதலின் பிரிவுக்கு பின்
நாம் சந்தித்த போது
விழுந்த முத்த மழை..        129

முடிவுகள் அற்ற ஒரு பாதை
உன் முத்தம்
நித்தம் பயணிக்கிறேன்
பனி இரவை கடந்து
என் நினைவுகளை
இழந்து....                         130


2015 கவிதைகள் 101 to 110

வீடுகள் அற்ற நிலங்களை
போல நிர்வாணமாய்
என் கனவுகள்
நீ இல்லாத ஒரே
ஒரு காரணம் தான்
என் உயிரே!!                            101

சோகத்தில்
தனித்து வாழ்கிறோம்
நம் காதலின்
ஞாபகங்கள் அவைகளை
தனித்தாலும்...                       102

வெற்றிடம் நிரப்பிய
உன் நினைகள் ஏனோ
நிஜங்களை நினைக்க
கூட மறுக்கிறது...              103

நிஜமாக நான்
உன்னோடு மட்டும்தான்
வாழ்கிறேன் - ஆதாரம்
நான் உயிரோடு இருப்பது
மட்டும்தான்...                    104

பேசுவதற்கு கூட தயக்கம்
உன் முத்தத்தின் மயக்கம்
தீராத இரவுகளில்...         105

பனைமரம் நான் என்று
உரைத்தேன்
துணை மரம் நீ என்று
உரைத்தாய்
உன் உதட்டின் வழியே..    106

சொட்டிய மழையில்
கருங் கூந்தல் நுனியில்
சொட்டி வடியும்
நீர் துளியில்
வளர்கிறது என்
முத்தத்தின் ஆயுள்...      107

நீ இல்லாத இரவின் 
பயணத்தில் என்னோடு 
எப்போதும் பயணிப்பது 
உன் அழகான நினைவுகளும் 
எப்போதும் நீளும் 
நம்மைப் பற்றிய கனவுகளும்..   108

இருட்டை சுவாசிக்க 
பழகிவிட்டேன் - கொடிய 
இருட்டில் என் முகத்தை
வருடி நீ கொடுத்த
முத்தத்தின் பின்..                  109

பூக்கள் உதிர்ந்த 
ஆளில்லா இந்த வழியில் 
ஒற்றை ஆளாய் 
நானும் பயனிக்கிறேன் 
உன் நினைவை கையில் ஏந்தி
பனி இரவை கடந்து 
பாதையும் மறந்து...           110

2015 கவிதைகள் 111 to 120

ஏதாவது பேசேன்
என்பாய்  எப்போதும் நீ
இப்போது எப்போதும்
பேசிக் கொண்டு இருக்கிறேன்
கடல் அலைகளோடும்
கடற்கரை மணலோடும்
உன் நினைவுகளை..         111

ஒரு ருபாய் நாணயத்தின்
பூவாக உன் முகமே
தெரிகிறது - நாணயம்
சூப்பர் மார்கெட் விளம்பர
பலகையில் ..                    112

நாளை இருப்பதுகென்று
ஒர் இடம் வேண்டுமென்று
அம்மா சொல்கிறாள்
நான் இருப்பதற்கு
உன் இதயம் போததா என்ன? 113

நானும் நீயும்
தொலைத்த இரவுகளால்
இந்த இரவும்
இப்போது கசக்கிறது...     114

ஆயிரம் படிகளை 
கடக்கிறேன் காதலே 
உன் மேல் உள்ள அன்பால்..    115

இருப்பதாய் நினைத்து 
நடக்கிறேன் இதயமே 
என் இதயம் துடிப்பது 
கூட உன் கருணையில் தான்..     116

திருமணத்திற்காக 
திருவண்ணாமலை 
நீரில் மூழ்கி எழுந்தேன்
உன் நினைவு வந்ததும் 
கண்ணீரோடு கரையை 
கடந்தேன்..                                   117

கடவுளுக்கும் கடிதம் எழுதினேன்
உன் ஞாபகத்தில் 
அது காதல் கடிதமாகமே 
மாறிவிட்டது...                   118

என்னையும் நான் மறந்து
கடவுளுக்கு நான் வாங்கிய 
பூவை பார்த்து நீயும் சிரித்தாய்
மல்லிகை பூ...                 119

ஒன்றுமில்லாத இரவை 
கூட உன்னால் எப்படித் தான்
அலங்கரிக்க முடிகிறதோ
ஒரேயொரு மல்லிகையை 
கொண்டு....     120


January 8, 2015

2015 கவிதைகள் 91 to 100

உன் கண்களை போல
உன் காதணியும் இடமும்
வலமுமாய் பார்க்கிறது
முத்தமிடும் போது...             91

உன் கடைசி வளையலும்
காத்திருக்கிறது
உடைவதற்கு அல்ல
களைவதற்கு...                      92

நித்தம் நீ வாசிப்பதற்காகவும்
அதனுள் நம் காதல்
வசிப்பதற்காகவும் நானும்
எழுதுகிறேன் உன்னைப்
பற்றிய கவிதையை..          93

உனக்காக ஒரு கவிதை
எழுத ஆரம்பித்தேன்
இப்போதோ ஒவ்வொரு
கவிதையும் உனக்காகவே
எழுதுகிறேன்... 94

கவியும் உன் கரம்
தொட்டவுடன் மீறும்
காதலும் கவிழ்ந்த
இரவுக்கே உள்ள
ஒரு தனி அழகு...            95

தவறாய் நான்
செய்தேன் திருத்தியது
என்னவோ உன் இதழ் தான்  96

நீயும் நானும் இருப்பதுக்
கென்று இருக்கிறது
ஓர் இல்லம் இதயம்
திறப்பதற்குக் கென்று
இருக்கிறது காதல்...           97

கருமை சூழ்ந்த வான்
மேகங்களை பார்க்கும் போது
கருமை நிறைந்த உன்
கண்ணின் இமை முடிகளே
என்னை முத்தமிடுகிறது..       98

வெட்டிக் கதையை
நீ பேசும் போது அது
குட்டிக் கவிதையாகவே
எனக்கு கேட்கிறது...                 99

நூறாவது கவிதையாக
ஒரேயொரு முத்தம்
தருவாயா?                                 100

அச்சு முறுக்கு

அவள் பிள்ளையின்
பசியை நினைத்து
அச்சத்தோடு விற்கிறாள்
அச்சு முறுக்கு..

இவள் அச்சத்தோடு கூச்சமே
இல்லாமல் விற்கிறாள்/
நிற்கிறாள் தன் மார்பை திறந்து..

குறையாத அச்சு முறுக்கு
ஒவ்வொருவரிடமும்
கொண்டு சேர்க்கிறது
குடும்பத்தின் வேதனையை
வேகம் குறைந்த குரலிலே
அச்சு முறுக்கு, அச்சு முறுக்கு
என்று...

குறைந்த ஆடை
யாரோ ஒருவனின் காமத்தை
குறைக்கிறது குரல் ஏதூம்
இல்லாமலே...

ஒவ்வொருவரும் வாங்க
மறுக்கும் அச்சு முறுக்கும்
அச்ச முறுக்காய் போனது..

ஒருவன் போனால்
இன்னொருவன் என்று
அலையாமல் அடையாளம்
தேடும் ஆட்களிடம்
அச்சமே இல்லாமல்
வாங்கி கொண்ட பணமும்
தன் மார்புக்குள் போனது...

வாழ்க்கையிலும் ஓர் வறுமை
இருக்கிறது,
காமத்திலும் ஓர் வாழ்க்கை
இருக்கத் தான் செய்கிறது..

- SunMuga-
08-01-2014 23.22 PM

January 6, 2015

2015 கவிதைகள் 81 to 90

அமிர்தத்தின் துளியாய்
உன் கனவுகள்
எப்போதும் எனக்கு
துணையாய் இருக்கிறது
துயரங்களை கடந்து...     81

பரிமாறிக் கொண்ட
புத்தகங்கள் போல
நீ படித்ததை
நான் படிப்பதும்
நான் படித்ததை
நீ படிப்பதுமாய்
காதல் பக்கங்களை
இருவரும் கடக்கிறோம்..     82

மஞ்சள் மேகத்தின் ஊடே
ஒரு சிறு பறவை
பறப்பதை போல
உன் ஞாபகத்தின் ஊடே
நானும் பறக்கிறேன்
சிறு பறவையாய்...                   83

"கருவாயா" என்று
என்னை அழைக்கும்
போதெல்லாம் "கொஞ்சம்
கொஞ்ச வாயேன்"
என்று சேர்த்து அழைத்து
விடுகிறாய்...                       84

கடவுள் தந்த வரமும்
உன்
காதல் தந்த வரவும்
என் கவிதைகள்..              85

வசந்தம் வீசியும்
வாடி நின்றேன்
பெருங்கடல் ஓரத்தில்
உன்னைப் பற்றி
ஒரு கவிதையும் அமையாத போது
அலை அலையாய் உன்
ஞாபக அலைகளை
அள்ளி அள்ளி நீ
வீசி எறிந்த போது
என்னுள் பிறக்கும்
கண்ணீரும் ஓர்
கவிதை என்று
என் கால்களை வருடி
சொல்லியது ஒர்
சிறு நண்டு...                        86

பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும்
காற்று நான்
உன் கண் இமைக்காவும்
உன் இதழ் அசைவுக்காவும்
அசையமல் காத்திருக்கிறேன். 87

அவளால் கசக்கி எறியப்பட்ட
காகிதம் நான்
என்னையும் எடுத்து
கவிதையாக உன்
இதழையும் பதித்து
எப்போதும் என்னை
பாதுகாக்கும் தேவதை நீ..        88

நோய்கள் தடுக்கும்
தடுப்பூசி ஏனோ
தடுக்க முடியவில்லை
நம் அம்முவின் கண்ணீரை..   89

அதிகமான உன் அன்பால்
எனக்கும் பிறந்தது தெம்பு
இருந்தாலும் நானும்
நடப்பதற்கு தேவைப்படுகிறது
உன் ஞாபகமாய் ஓர் கம்பு....  90

January 5, 2015

2015 கவிதைகள் 71 to 80

போதும் என்று தான்
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கொஞ்சலாகவே
ஊட்டுகிறாய் உன் இதழை..      71

கொஞ்ச நாளாக
கொஞ்சலாகவே
கவிதைகள் அமைகிறது
உன் பழக்க தோசம் போல..    72

உன்னை அனைத்து
உறங்கிய இருளும்
அடர்ந்திருக்கிறது என்
அலுவலக அறையிலும்..         73

அதிகமாய் உன்னிடம்
வாங்கிய முத்தம் தான்
அதிகமாய் கொடுக்க
வைக்கிறது உன்னிடம்...         74

சிதம்பர ரகசியம் தான்
நீ என்னை பார்த்து சிரித்து
திரும்புகிற ரகசியமும்..              75

உறை மேல் முகவரி போல
என் உதட்டின் மேல்
உன் இதழின் முகவரி....                       76

உன் கண்கள்
உன் காதலை விட
உன் இதழ் இல்லாமல்
என் கவிதைகள் இல்லை..      77

"டேய் மாமா" என்ற
உன் ஒலியெடுப்பே!
என்னை ஓயாமல் எழுதச்
சொல்கிறது வண்ண வண்ண
ஒளிகளை கூட்டி..                      78

தப்பு தப்பாய் வந்த
கனவுக்கு பின்
இனி உன்னை தாவணியில்
எப்போது பார்க்க முடியும்
என்று நானும் தவிக்கிறேன்..      79

"குட்டிமா" என்று நீ
கூப்பிடும் போதெல்லாம்
குட்டி உம்மா கொடுப்பதாய்
நானும் சிரித்துக் கொள்கிறேன். 80

2015 கவிதைகள் 61 to 70

என் கவிதையால்
உன் முகத்தை
வரைய தொடங்கினேன்
உன் இதழுக்கு எந்த
ஒர் எழுத்து பொருந்தும்
என்று பெருத்த யோசனைகளை
கடந்து நானும் வரைந்தேன்
"ம்" என்ற ஒற்றை எழுத்தை..     61

முகவரி அற்ற என்
காதலுக்கு
"முகா" என்ற பெயரை வைத்து
முத்தமும் வைத்தாய்...              62

இடங்கள் அற்ற இடங்களில்
என் இதயத்தில்
அமர்ந்து கொள்ளும்
பாக்கியம் உனக்கு மட்டும் தான் 63

உன்னைவிட உன்
காதலையே அதிகம்
சுமக்கிறது என் கவிதைகள்..    64

இரவில் இருந்து விலகி
இவ்வுலகம் போகும் பகலுக்கு
முன் முடித்து விடுகிறேன்
ஓர் அழகான கவிதையை
உன் இதழைப் போல்...             65

பேருந்தோ, பெரும் நீளம்
கொண்ட புகைவண்டியோ,
உன் புன்னகையே தெரிகிறது
ஜன்னலின் வழியே...               66

அடை மழையில்
அனைவரும் பேருந்திற்காக
காத்திருக்கிறார்கள் நானோ
உன் கவிதைக்காக
காத்திருக்கிறேன்...                 67

ஞானமாக உன்னைப்
பற்றி ஒரு கவிதை
கிடைப்பதால்..  
புத்தனுக்கு எப்படி
போதி மரமோ, அப்படி தான்
எனக்கும் நீ நிற்கும்
பேருந்து நிலையம்..                68

குளிர்கிறது என்று
நான் சொன்னால்
குதூகலமாய் ஓடி வந்து
விடுகிறாய் ஓர் முத்தமிட..
நினைவுகளில் கூட...             69

உன் முதல் முத்தத்தை
மீட்டெடுக்கும் முயற்சியில்
இருக்கிறேன் என் கவிதையின்
வழியே மீண்டும்
நீ இடுவதற்கு..                           70

January 4, 2015

2015 கவிதைகள் 41 to 50

கடற்கரையில் ஆங்காங்கே
ஓடும் குதிரைகளை போல
உன் நினைவுகள்
என் உடலில் எங்கெங்கோ
ஓடி இளைப்பாறுகிறது..          41

உன் சின்ன சின்ன
ஞாபங்களை சேகரித்து 
கொள்கிறேன் - எப்போதவது 
அழுவதற்கும் எப்போதும் 
சிரிப்பதற்கும்..                           42

விரல் நழுவி போகவில்லை
உன் காதல்
விரல் தழுவி தான் போகிறது
ஒவ்வொரு இரவிலும்..            43

சுழலும் ராட்டினமாய்
உன் ஞாபகம் இந்த
சூரியனையும் சுற்றி வருகிறது 44

அறையில் 
யாரும் இல்லை என்பதை
உணர்ந்த குழந்தை தன்
அழுகையை கூட்டுவதை போல,
யாரும் இல்லா என் அறையில் 
உன் நினைவுகளை கூட்டி
வைத்துக் கொள்கிறேன் 
ரகசியமாய் அழுத படி...                  45

மிக நீண்ட உன் சிறகுகளால் 
நீ மூடிக் கொள்கிறாய் 
உன் உடல்களை
சிறகுகளின் வண்ணமாய் நான்.  46

தேகம் அழியக் கூடியது 
இருந்தாலும் தேவைப்படுகிறது 
அது நீ என உணர
இரவின் கனவுகளில்..                     47

சிறு எறும்பை போல
சிறுக சிறுக சேகரித்த 
உன் காதலை சிறு சிறு 
புன்னகையாக உனக்கே 
தர வேண்டும்..                             48

உன் 6 மச்சங்களின்
ஞாபகத்தின் மிச்சமாய் 
நானும் சிரித்துக் கொள்கிறேன் 
சென்னையில்
6D பேருந்து என்னை கடக்கும் 
போதெல்லாம்..                    49

உன் காலடியோசை கேட்கும்
போதெல்லாம் சிறு நண்டு 
போல என் முகம் தூக்கி
பார்க்கிறேன் கனவுகளில் கூட..        50

2015 கவிதைகள் 51 to 60

வறுமை நிறைந்த
ஓவியம் - வான்கோ
பெறுமை நிறைந்த
காவியம் - எனக்கோ
உன் காதல்         51

வளர்ந்த குதிரை
கடற்கரை மணலை
தன் கால்களால்
வேகமாக வாரி இரக்கிறது
உன் ஞாபங்களை போல,
இப்போது சிலுசிலுர்த்து
கொள்கிறது முத்தத்தை
பெற்ற சலசலப்பில்
மெதுவாய் நடக்க தொடங்கிற்று
மென்மையான பெண்மை
கலந்த உன் நடையை போல.    52

அச்சம் வருகிறது பெண்ணே!
உன் மச்சம் பார்த்த நொடியில்,
மிச்சம் இருந்தால் கொடு
உன் மச்சத்தை,
உச்சங்கள் அடையும்போது
என் இதழ்களால்
நானும் தொட்டுக் கொள்ள..     53

விண்வெளி தாரகைகள்
தாரத இன்பம்
உன் கைவிரல் தொட்டவுடன்
நானும் பெற்றேன்,
அந்திம இரவு
அளவில்லாத உன் பொழிவு
இது அல்லவா வாழ்க்கை..       54

இனியும் என்ன தயக்கம்?
இருளும், இன்பமும்
கலந்த இந்த மயக்கத்தினுடயே
கனவுகளில் உள் புகுந்து
நம் இருவரின் வேஷத்தை
கலைத்துக் கொள்ள..               55

முந்திரிச்சாறாய் உன்
முத்தத்தில் நான்
மூழ்கி இருந்த போது
சாஸ்திரம் என்ன?
சரித்திரம் என்ன?
சங்கொலி படரும்
போர்க்களம் என்ன?
போதுமே! என்று
நான் ஒலியெடுக்க
கூட முடியாத போது
உன் புன்னகை மட்டுமே
ஒளியாய் இவ்வுலகிற்கு..    56

உன் காதலை கண்டு
மயங்கி இருக்கிறேன்
அதனால் என்னவோ!
கடலை கண்டு
சற்று தயங்கி நிற்கிறேன்
நீ இல்லாமல்..                        57

உன் காதலை பாடும்
என் கவிதையில்
என் சிறு முத்தம்
கலந்து இருக்கிறது..
நீ வாசிக்கும் தருவாயில்
உன் கண்களை அடைவதற்கு
உன் இதயத்தை தொடுவதற்கு
எந்நாளும் காத்திருக்கிறது..  58

புது நெல்லாய் வளர்ந்தாய்
பூக்களாய் ஆர்பரித்தாய்
அழகியலில்
உன் ஆடை கூட ஆடுகிறது
ஓர் அழகிய நடனம்..
நளினமாய் பாடும்
உன் பார்வை இது
தானே சிறப்பு அந்த
ரகசிய இரவில்               59

பதில் என்ன தரப் போகிறாய்
என் உயிரே!
முத்தமா?
நான் கேட்டதும் அதுதானே!!  60

January 2, 2015

2015 கவிதைகள் 31 to 40

முடிவுகள் அற்ற ஒரு
பாதையில் உன்னோடு
பயனிக்க வேண்டும்
துணையாக மீண்டும்
காதல் மட்டுமே வேண்டும்              31

உன் விழி என்ற
ஒற்றை கவிதையை
வாசித்துவிட்டு - காதல்,
முத்தம், பாசம், பெண்மை,
என ஒவ்வொரு கவிதையும்
எழுத ஆரம்பித்து விடுகிறேன்.   32

கனவோ, நினவோ
என்னை காத்திருக்க விடாமல்
என்னுள்ளே கரைகின்றது
உன் சிறு முத்தம்...                     33

ஆழ்ந்த இரவில்
மரணத்தை எதிர் நோக்கும்
நிகழ்வு தான் உன் ஒரு
நொடி பிரிவு கூட..                     34

மரணக்கின்ற இரவு
உன் மடியில் நான்
போதுமென்று நினைக்கிறேன்
இந்த இரவை நான் கடக்க..                   35

தோயாத இரவு
தொத்திக் கொள்ளும் காதல்
தொடுவதற்கு ஓர் இதழ்
வருடுவதற்கு உன் விரல்
இதை தவிர வேறு என்ன
வேண்டும் ஓர் கவிதை எழுத   36

காலி இடமோ
கடற்கரையோ
உன் காதலே என்னை
எழுத வைத்து விடுகிறது
ஓர் கவிதையை...              37

காலி இடமும் கடற்கரை ஆகிறது
உன் காதலின் கரம்
தொட்டவுடன் - சீற்றமாய்
உன் சுவாச காற்று
சீறும் அலையாக உன்
முத்தம்....                    38

செறிவுகள் நிறைந்த
செய்கைகளில் ஓன்று தான்
உன் இதமான இதழ் முத்தம்..  39

நம் வீட்டின்
சிறுவட்டில் கூட சேகரிக்கிறேன்
உன் சிதறிய முத்தத்தின்
ஞாபகங்களை..           40