January 1, 2015

2015 கவிதைகள் 01 to 10

முத்தம் என்று நான்
கேட்கும் போது
தவறாமல் கொடுத்து
விடுகிறாய் கண்ணீரின் 
வழியே கன்னத்தில்...                                      01

உன்னில் எனக்கு அதிகம் பிடித்தது உன் கருவிழி
மட்டும்தான் - அடுத்த 
செயலுக்கு உதவி புரிவதால்..                02

ஓர் இடத்தில் இருந்து
மற்றொரு இடத்திற்கு
உன் பேனாவை
நீ நகர்த்தும் போதே
நான் எழுதி விடுகிறேன்
உன்னைப் பற்றி ஓர் கவிதை. 03

இரவுகளில் உனக்காக
நான் சேகரித்த முத்தங்களை விளையாட்டாக உன் வீட்டில்
நீ சேகரித்த உண்டியலை
உடைப்பது போல உடைத்து விடுகிறாய் உன் ஒற்றை
பார்வையில்...  04

இருளாக இருப்பது இரவு
எனக்கு எப்போதும்
இதமாக இருப்பது உன் இதழ். 05

காதலின் கடலோடு
கரையில் அமர்ந்து
கடலை பார்க்கும் நாள்
தான் எப்போது?  06

உனக்கும் எனக்குமான
காதலின் அத்தியாயத்தில்
முன்னுரையாக உன்
இதழ் முத்தம்.. 07

விடிந்தும் இன்னும்
நான் எழுதிக் கொண்டு
தான் இருக்கிறேன்
உனக்கான ஓர் கவிதையை
நீ உன் புடவையை
சரி செய்வதை போல.. 08

நானும் நீயும் பிரிந்தாலும்
வாழ்கிறது காதல்,
வாழ்ந்தாலும் ஏனோ
பிரிகிறது நம் உயிர்.. 09

கோபத்தில் நீ கொடுக்க
மறுத்த முத்தத்தால்
பிரிந்தது என் உயிர் கனவில்.. 10

No comments:

Post a Comment