January 22, 2015

2015 கவிதைகள் 131 to 140

குருதி சிந்த நீ அறுத்தாய்
உன் கையை
நான் அறுக்க நினைப்பதோ
ஆணாக
மற்றவர் என்னும்
என் ஆணுறுப்பை
மட்டும் தான்...            131

ஏதோவொரு பெருமை
இருக்கத் தான் செய்கிறது
இந்த இரவுக்கும்
நீ இல்லாத போதும்
இரவலாக
அவை கொடுக்கும்
உன் முத்தத்தால்..      132

ஒரு முறை தேவனையும்
வணங்கினேன்
தேவதையே! நீ
வேண்டுமென..    133

மறையும் வெளிச்சத்தில்
பிறக்கும் இருளில்
தவழ ஆரம்பித்து விடுகிறது
உன் முத்தம்...            134

இரவில் நான் விளையாட
உதவும் விளையாட்டு சாமான்
உன் வளையல் மட்டும் தான்..  135

வண்ண வண்ண
வளையல்கள் நீ
இட்டாலும்
என் எண்ணத்தை முழுவதுமாய்
கவர்வது உன் இதழ்
மட்டும்தான்...   136

ஜோடி ஜோடியாக
வளையல்கள் இட்டு
கொள்கிறாய் ஜாடயாய்
என்னை பார்த்து.....      137

சீக்கிரமாய் வந்து விடு என
உன் வளையலை குலுக்கி
சைகை செய்கிறாய்
புன்னகையோடு.....     138

பறித்த பூவை
கொஞ்சம்
வளையலுக்கும் இட்டு
அழகு பார்ப்பது
என் அழகு மட்டும் தான்...   139

அலைப்பேசியின் அலறலாக
உன் வளையல் ஒலியை
பதிவு செய்த பின்
நான் உறங்குவதே இல்லை..  140

No comments:

Post a Comment