November 1, 2015

2015 கவிதைகள் 1341 to 1350

இல்லாத கேள்விகளுக்கு
பதில் ஏது?
இருக்கும் கனவுகளை
கொண்டு வாழும்
நம் இருவருக்கும்...   1341

நித்திரை பாதையின் வழி
செல்லும் கனவுகளிலெல்லாம்
காதலின் துணையாய்
உன் முத்தம்...       1342

மலரில்லாமல்
காற்று வீசுமோ?
காதலே
உன் கனவு இல்லாமல்
என் வாழ்க்கை கழியுமோ?   1343

அனல் மிகுந்த
இரவெல்லாம்
அன்பாய்
உன் ஒரு விரல்
கோர்த்தால் போதும்
இரவை அனலிட்டு
எரித்து விடுவேன்...   1344

உருவம் இல்லா இரவில்
என்னை உருக்கும்
உன் கண்ணீர் துளி...   1345

மயக்கத்தின் நடுவே
நெஞ்சை கீறிய போதும்
நெஞ்சே
உன் பிஞ்சு முகம் தான்
என் நெஞ்சம் முழுதும்...   1346

சுயநலம் முற்ற
மனிதர்கள் நடுவே
சுதந்திரமாய் கூட
நினைக்க முடியவில்லை
நம் காதலை...       1347

எத்தனை மனிதர்கள்
இருந்தாலும்
உன்னைப்போல
என்
தகப்பனைப் போல
ஜீவன் உண்டோ?
என் மனதில்
நான் நினைப்பதற்கு...   1348

ஆயிரம் நாட்களை
கடந்தாலும்
அல்லும் பகலும்
அழுதாலும்
தீராதது
உன் பிரிவு
என் தந்தையே!!     1349

நீ
கண்ணீர் விட்டு
பார்த்ததில்லை
உனக்கு
கண்ணீர் கூட
சிரிப்பு தானோ?    1350

No comments:

Post a Comment