November 15, 2015

2015 கவிதைகள் 1391 to 1400

வெட்கத்தில்
நீ சிரித்தால்
என்னை விட
உன் பக்கத்தில்
என் இதழையே
நான் வைப்பேன்...       1391

உன் இடை தேடும்
என் கை விரல்
உன் இதழ் தேடும்
என் இதழ் ரேகைகள்
அன்பே!
இதுவரை தேடியும்
கிடைக்காத வரம் அது!!    1392

வலி தொடரும்
இரவுகளில் எல்லாம்
ஆறுதலாய்
ஒரு மழை
கண்ணிலும்
கனவிலும்
என் அன்பே!!      1393

வழியெங்கும்
உன் நினைவை பரப்பி
வாழ்க்கையின் வழியே
பயணிக்கிறேன்
என் வாழ்க்கை
நீ என்று!!        1394

நீ வந்து
நின்ற பின்
வளரும் நிழல்
முத்தத்தின் சாயல்...     1395

பின் நின்று
நீ அணைத்தால்
என் முன் நின்ற
கவலையும் ஓடி விடும்!!    1396

உன் மூச்சுக் காற்றில்
மலரும் மலர் நான்!
நாளும் சுரப்பேன்
தேனாக உன் காதலை!!    1397

உடை மாற்றும் போது
உன்னை நினைத்தேன்
ஏன் என்று
பின் நினைத்தேன்
நீ இருந்திருந்தால்
உடையே மாற்றிருக்க
முடியாது என்று!
நானும் சிரித்தேன்!!      1398

வா! என்று
என்னை அழைத்து
தா! என்று
என் கண்ணையும் பார்க்கிறது
உன் இதழ்!!         1399

இரவை மூடும்
இருள் இருந்தும்
என் இதழை மூட
உன் இதழ் வேண்டும்
இந்த இரவில்!!     1400

No comments:

Post a Comment