இருளில்
எப்பொழுதும் நான்
வாசிக்கும் புத்தகம் நீ
வரிகளாக
உன் முத்தங்கள்... 1451
நீ என்னை
ரசிக்கும் போதே
பருக்கள் தோன்றுகிறது
இன்னும் நீ
என்னை ருசித்தில்
என் பருவமே
மாறி விடும் போல... 1452
உன்னை மட்டுமே
உரசிக் கொள்ள
உயிரோடு இருக்கிறேன்
என் அன்பே!! 1453
உன் குரல் இசை
என்றால்
உன் கண்கள்
ஒரு ஓவியம்
உன் பாதம்
இன்னொரு கவிதை எனக்கு.. 1454
நீ தீண்டிய பின்
உருவான கவிதைகளில்
எல்லாம்
உன் முத்தத்தின் சாயல்
நிரம்பி இருக்கிறது... 1455
உன் முகம் தேடிய
என் கவிதைகள் எல்லாம்
இப்பொழுது
உன் முத்தத்தை
தேடி அமைகிறது... 1456
உன் கண்ணீரிலும்
நான் சிரிக்கிறேன்
உன் காதலின்
ஆழத்தை உணர்ந்து.. 1457
மழையில்
நீ நனைந்தால்
ஜலதோஷம்
எனக்கும் பிடிக்கும்
உன் நனைந்த
உடைகளை
நானே கழற்றும் போது.. 1458
உன் நகங்களை
வெட்டி விட
எப்பொழுதும்
நான் உன்னை விட மாட்டேன்
அதன் காயங்களுக்கு
உன் இதழே
மருந்தாகும் போது... 1459
இரவுப் புயலை
இந்தப் பூவை கொண்டு
எதிர் கொள்கிறேன்.. 1460
No comments:
Post a Comment