November 15, 2015

2015 கவிதைகள் 1461 to 1470

வண்ணம் தீட்டிய
ஒவியம் நீ
வண்ணமாக காதல்
நிரம்பி இருக்கிறது..   1461

உன் இமைகள்
என் நெஞ்சில் படரும் போது
இதயம் கூட
இதமாக துடிக்கிறது
என் அன்பே!
இந்த இரவில்...  1462

இனி என்ன வேண்டும்
உன் இமையின் இசையில்
நான் உறங்கும் போது..   1463

இரவின் மேடையில்
உன் இதயத்தின் ஓசை
கேட்டு
நானும் கிறங்கி விட
ஆசை என் அன்பே!!     1464

நீ பார்க்கும் பார்வைகளில்
பொழுதுகள் சாய வேண்டும்
உன் தோளில்
நான் சாய்ந்த படி..     1465

மீனும் கடலுக்குள் வாழும்
நானும் உன் காதலுக்குள்
வாழ்கிறேன்..     1466

ஆழம் நிரம்பிய காதலில்
உன்னோடு நீந்திக்
கொண்டு இருக்கிறேன்
உன் முத்தத்தில்
உயிர் வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்..   1467

உன் கண்களை தவிர
வேறு எதுவும் தெரிவதில்லை
ஒவ்வொரு கவிதையும்
எழுதும் போது...      1468

உன் பார்வைகள்
சில நேரம்
கேள்விக் குறி தான்?
முத்தம் அவ்வளவு தானா? என்று..      1469

நான் உன்  இதழை
தேடிய போதெல்லாம்
கிடைக்கும் புதையல்
உன் முத்தம்...    1470

No comments:

Post a Comment