November 30, 2015

2015 கவிதைகள் 1501 to 1510

சிந்திக்கும் திறன்
இருந்திருந்தால்
சிந்தாமல் இருந்திருக்கலாம்
சிந்திய கண்ணீரெல்லாம்...  1501

பசி கொண்ட
இரவெல்லாம்
விழித்திருந்தேன்
விழித்திருந்த இரவையெல்லாம்
கவிதையாக்கி
உன் விழிக்கு
விருந்தாக்கினேன்....     1502

இதயம் நிரம்ப நிரம்ப
இன்னும் இருக்கிறது
கவிதை
இரவான
இருளோடு நிலவு
கலந்திருப்பதை போல...   1503

தேடிப் போன
வார்த்தைகளிலும்
வாடிப் போன
வாழ்க்கையிலும்
நீ கலந்து இருப்பதால்
இந்த வார்த்தைகளும்
இந்த வாழ்க்கையும்
ஒர் அழகான கவிதைகள்...  1504

தாயாக நீ ஆன பின்னும்
சேய்- ஆக நானும் இருப்பேன்
சாய்வாக
நீ என் தோழில்
சாயும் போது கூட...     1505

நீ நடக்கும் போது
உன்னை பின் தொடர்கிறது
ஓர் நிலவு
உந்தன் நிழலாக...        1506

நீ சிரிக்கும் போது
எதிரொளிக்கும்
ஒலிகள்
என் கவிதைகள்....       1507

உன் விழியும்
என்னை மயக்கும்
உன் ஒலியும்
என்னை
கவிஞன் ஆக்கிவிட்டது
உன் இடையும்
உன் இதழும்
என்னை
காதலன் ஆக்கிவிட்டது....   1508

உள்ளிருக்கும்
காதலெல்லாம்
கவிதையாய் பிறக்கும்
காதல் என்று
அதற்கு ஓர் பெயரும் பிறக்கும்
முத்தம் என்ற இன்னொரு
பிறவியும் எடுக்கும்...    1509

சேராத காதல் என்று
வேதனையும் ஆறவில்லை
வேண்டுதலும் தேறவில்லை
இனி என்ன வேண்டும்
என்று
என் மனம் எண்ணவில்லை
உன் உடல் நலம் தவிர...   1510

No comments:

Post a Comment