November 15, 2015

2015 கவிதைகள் 1471 to 1480

உன் காதலின்
கடலுக்குள்
நான் வீசிய
வலைகளுக்கு எல்லாம்
மீன்களாக
உன் முத்தங்கள் கிடைக்கிறது..  1471

நாணம் என்று
ஒன்று
உனக்கு வந்த பிறகு
நீயும் நானுமாய்
ஆனோம் நாமாய்...    1472

கடிதம் எழுதி வைத்தேன்
வரிகளாக
முத்தத்தை ஏந்தியபடி...  1473

எனக்காக படைக்கப்பட்ட
பரிசுப் பொருள் நீ
எப்போது நான் திறந்தாலும்
முத்தமே கிடைக்கும்..    1474

உன் புன்னகையே போதும்
இந்த வாழ்வை
நான் ரசித்து வாழ
உன்னுள் இன்னும்
ஆழமாக ருசித்து வாழ...    1475

குளிரூட்டும்
உன் ஞாபக மழைகளில்
குளிர் தாங்கும்
உடைகளாக எனக்கு
உன் கவிதைகள் இருக்கிறது..  1476

ஒரு புறம்
காதல் நம்மை பிரித்து
ரசித்தாலும்
மறுபுறம்
உன் நினைவில் உருவான
காதல் கவிதைகள்
நம்மை இணைத்து
ரசிக்க வைக்கிறது
இந்த காதல் வாழ்க்கையை..   1477

கோடுகளால்
இணையும் ஒவியத்தை போல
காதல் கவிதைகளால்
இணையும் காவியம் தான்
எப்பொழுது நிகழும்...     1478

பகலை விட
இருள் கொடியது தான்
உன்னை விட்டு பிரிந்து
இருக்கும் போது
ஆனால்
மிகவும் அழகானது
உன்னோடு வசிக்கும் போது..  1479

உன் விழி கண்டு
உறங்காமல் போன
இரவுகளில் எல்லாம்
ஒரு கவிதை
எழுதியிருந்தாலும் கூட
இந்நேரம் இலட்சங்களை
தாண்டி இருக்கும்..   1480

No comments:

Post a Comment