November 15, 2015

2015 கவிதைகள் 1371 to 1380

நிலவை சார்ந்து
இருக்கிறது
உயிர் உள்ள இந்த இருள்...  1371

நீ
என்னோடு இருக்கும் நேரத்தில்
நீ தான் உலகமே
இல்லாத நேரத்தில்
இந்த உலகமே நீ தான்...   1372

இந்த இரவிலும்
உன் காதல்
என்னில் ஊடுருவி
உள்ளம் உருக செய்கிறது...  1373

பிடிப்பட்ட நாயின்
படபடப்பு
உன் காதலின் ஞாபகம்
என்னை
இந்த இரவில் பிடித்த போது..  1374

முகம் சிரித்து
முற்று பெரும்
இரவை விட
இன்பம் ஏதும் உண்டோ
என் உயிரே!       1375

நகம் கடித்து
பகலை கடந்தேன்
உன்னைப் பற்றி
பின் இரவின் யோசனையில்.. 1376

கிடைக்காத வாழ்க்கையின்
கையில்
நம் காதல்  வளர்ந்து
கொண்டு இருக்கிறது
வளர வளர
வாலிபமும் ஏற
வாழ வழிகள் அற்று
வலியில் துடித்துக்
கொண்டு இருக்கிறது
போகும் வழி தோறும்
காதல் இருந்து
என்ன பயன்?
என்று தோன்றிய போதும்
அந்த காதல்  தான்
வாழ வைக்கிறது....    1377

உன் இதழை
முத்தமிட்டு
திரும்பும் பாதையெங்கும்
பனித்துளிகள் பூத்து
கிடக்கிறது அன்பே!!
அதன் வாசனையாக
உன் வேர்வையின்
வாசம் வழிய...    1378

நீண்டு கருத்த
கூந்தலின் நுனியில்
என் இதழை பதித்தால்
பாதத்தில் கூட பூக்கிறது
ஒரு புதிய பூ!        1379

விடுமுறைகளை
விதையாக்கி
நம் வீடு தோறும்
நட்டு வைப்பேன்
உன் காதல் முத்தங்களை..  1380

No comments:

Post a Comment