November 27, 2015

2015 கவிதைகள் 1481 to 1490

விடியலில்
உன் புன்னகை முகமே
சாட்சி
இரவு எப்படி
கடந்தது என்பதற்கு?      1481

காதல் என்றாலும்
கவிதை என்றாலும்
எனக்கு நீ தான்
காதலால் கவிதையாய்
பிறக்கிறாய்
கவிதையில் காதலியாய்
வளர்கிறாய்....        1482

என் அழகை
காட்டும் கண்ணாடி
எல்லாம்
இப்பொழுது
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை கூட்டுகிறது
உனக்காக நான்
கண்ணாடியை
பார்க்கும் போது...      1483

உன்னை காதலிப்பது
வரம் என்றாலும்
நித்தம் உன்னோடு
வரும் கனவும்
இன்னொரு தவம்
உன் முத்தத்திற்கு...    1484

முடிவில்லா முத்தத்தின்
முடிவில்
என்ன இருக்கும்
முத்தமா?
இல்லை
நம் கனவு மொத்தமா?   1485

ஆயிரம் ஜன்னல்
இருந்த போதும்
உன் முத்தத்தினால்
தான்
என் உயிர்
சுவாசித்து கொண்டு
இருக்கிறது
இந்த காதல் அரண்மனையில்.. 1486

எழுதியிருப்பது
எதிர் காலமா?
இறந்த காலமா?
இல்லை
நிகழ் காலமா!
நிச்சயம் இல்லை
இது காதலின் காலம்...     1487

கனவுகளை கொண்டே
காதல் வாழ்க்கையில்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம்
காதல் வாழ்க்கைக்கும்
ஒரு கனவு
இருக்கத் தானே செய்யும்..     1488

பெருகிய வெள்ளம் போல
உருகிய கண்ணீரெல்லாம்
காதலின் வழியே
பெருகிக் கொண்டே இருக்கிறது..  1489

வானம் என்றாலும்
உன் காதல் என்றால்
அதன் வானம்
பிரிவின் உயரம்
என்றாலும்
அதே வானம்....   1490

No comments:

Post a Comment