November 27, 2015

தீபம்

கார்த்திகையில்
நீ ஏற்றும் தீபம்
நிச்சயமாக
என்னை குளிர்விக்கும்
மார்கழியில்...

உன் இருவிழி
என்ற
தீபத்தின் ஒளியால்
இன்னும்
இரு குட்டி தீபம் ஏற்றலாம்
இவ்விரவின் வழி...

எழுபது விளக்கைக்
கொண்டு
வீட்டை நீ அலங்கரித்தாலும்
நான்
அழகாய் ரசிப்பது
உன்னை மட்டுமே!
உன் விழியை மட்டுமே!!

தீப்பெட்டியை உரசி
தீபம் ஏற்றினாலும்
அவ்வப்போது
என்னை நீ உரசி
அதன்
ஒளியை கூட்டிவிடுகிறாய்...

நீளும் இரவில்
நின்று எரியும்
காதலின் தீபம் நீ...

ஐந்து முகம் கொண்ட
விளக்கை
என் கைகள் ஏற்றினாலும்
என் கண்கள் தேடுவது
உன் முகத்தை மட்டுமே!!

மெழுகை ஏற்றி
என்னை ருசித்தவள்
இன்று
விளக்கை ஏற்றி
என்னை ரசிக்கிறாள்...

என்னை ரசிக்க
உன்னை அலங்கரித்துக்
கொள்கிறாய்
இந்த இரவின் ஒளியில்..

இருள்  படரும்
இடமெல்லாம்
என் உடலெங்கும்
உன் இதழ் படர
வேண்டும் அன்பே!

உன் நினைவுகளே
என் கவிதை விளக்கின்
எண்ணெய்கள்
ஒளியாய் என்றுமே
உன் முத்தம்....

No comments:

Post a Comment