April 7, 2013

ரயில் பயணம் அரக்கோணம் 2 சென்னை

கைபேசியின் அலரல் சத்தம்
வயிற்றுப் பசியின் குமுரல் சத்தம்
அவிழ்ந்த கைலி முடிச்சுக்கு அடைக்கலம் கொடுத்த படி கால்கள் ஒடுகிறது கழிவறை நோக்கி..
வெந்தும் வெகாத வெந்நீரில் ஒரு குளியல் ..
சிந்திய தண்ணீர்ரோடு கால்கள் ஒடுகிறது சிறகாய் பறக்க..
சிறியதாக ஒரு தேநீர் பருகிவிட்டு பெறிதாய் ஒரு கூட்டத்தை காணும் போது சோர்வடையும் கண்கள் ..
முந்தானையை முந்தி செல்லும் கால்கள் ; சிறு இடம் ஆனாலும் ஜன்னல் ஒரம் என்றால் ஒரு
கௌரவ புன்னகை ..
கிளம்பிய வண்டி முன் செல்ல நம் கண்கள் கடிகாரத்தை நோக்கி பயணிக்கும் ; ஒரு நிமிடமா? இரண்டு நிமிடமா? தாமதம் ..
கொட்டும் பனிகளை விலக சொல்லும் Horn Sound,வேகமாக போவது போல் ஒரு Engine Sound
வாதடும் நண்பர்கள் கூட்டம்
வசிய படுத்தும் பெண்களின் நோட்டம்.
காதை கடிக்கும் பாட்டு சத்தம் கூட தெரியாமல் சின்னதாய் -ஒரு உறக்கம் உலகத்தை மறந்து
நம் பாரத்தை ஏற்றுக்கொண்ட தண்டவாளங்களுக்கு என்ன சோகம்?
முதல் பரிசு யாருக்கும்இல்லை என்றாலும் மாறாத்தாண் ஒட்டம் தான் இறங்கிய உடன்...
கால்கள் ஒடினாலும் கண்கள் தேடுவது பெண்களை தான்..
நடப்பது போல் தான் இருக்கும் சிறிதாய் அவள் பார்த்தால் பறப்பது போல் இருக்கும் பறக்கும் வண்டியில் ஏறும் வரை...
கண்களால் பேசுபவர்கள் காதலர்கள் என்றால்? கைகளால் பேசும் இவர்கள் இயலாதவர்கள்..
கிலிந்த உடையில் சில்லறை சத்தம்; மெலிந்த உடையில் புன்னகை சத்தம்..
-SunMuga -

1 comment: