Sun Muga blog; இது எனக்கான இடம் நான் இதில் என்னை பற்றியும் என்னை சார்ந்தவர்களை பற்றியும் எழுத ஆசைப்படுகிறேன் என்பதை விட பேராசை படுகிறேன் என்றே சொல்லலாம்.
பொக்கிஷ போத்தி;
விதி என்று ஒன்றும் இல்லை நம் விதை தான் அது.
இவர் சொல்லாமல் சொல்லிய பாடம் இது..
வாழ்க்கை ஒரு மனிதனின் பயணம் என்றால்? அந்த பயணத்தில் தன் அப்பா,அம்மாவை தவிர எந்த ஒரு மனிதன் நிலையாக இருக்கிறான்?
அப்படி பட்ட ஒரு சாதரண மனிதன் தான் இவரும்.
பிடித்துஎழுதும் பேனாவும்
ஒரு விதம்;
எடுத்து உரைக்கும் உரையும் தனி விதம்;
நடந்ததை கண்டுகொள்ளாமல்
நடக்க வேண்டியதை எண்ணி
நடக்க ஆரம்பிப்பார்.
நாகரிகம் புதிது.நண்பனின் நடு உச்சியில் கொட்டும் அளவு.
உழைப்பின் ரகசியம் மட்டும்
ரகசியமே;
பொறுமையை கண்டால்
நமக்கே பொறாமை
பிறக்கும்..
கோபம் கொள்ளும்போது
நம் தவறை கொன்றுவிடுகிறார் .
வெறுத்து வேலைப்பார்ப்பார்
கால நேரங்களை மட்டும்.
நான் சம்பாதித்த நல்ல பெயர் இவரை சேரட்டும்..
என்னை ஏற்றுக்கொண்ட தவறுகள் என்னையே சேர்ந்து இருக்கட்டும் .
-SunMuga-
16-04-2013 11.20 PM
No comments:
Post a Comment