நான் குளித்த பின்பும்
உன் புத்தக வாசனை
இது என்ன புத்தகம்
விழியை பலி
வாங்குகிறதோ
உறங்கவிடாமல்
படித்த வரிகள் எல்லாம்
படியாமல் அர்த்தத்தின்
ஆழம் படிகிறது.
படித்த கவிதை தான்
கவிதையாக பிறக்கிறது
மறுஜென்மம் எடுத்து..
விட்டுபோன வரி கூட
பட்டுப் பூச்சி போல
உருமாறுகிறது..
No comments:
Post a Comment