அழகிய மாலை பொழுது,
கூவும் குயிலின் ஒசை,
இல்லை இல்லை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது,உன் கொலுசின் ஒசை தான் அது...
மயங்கிய மாலையில் காதலை விழுங்கி நான் நிற்க....
சேலை கட்டி நீ நடந்து வந்து உன் மோன பார்வையில் ஒரு முத்தமிட்டு...
என் கை விரலை பிடித்தபடி I love you சொன்னதாக ஒரு கணவு.
இப்போது சொல் பெண்ணே நான் கிறுக்கன் தானே?
நான் உன்னை பற்றி எழுதும் போதும் நினைக்கும் போதும் ஒரு கிறக்கம் உற்ற ஒரு கிறுக்கனாகவே முளைக்கிறேன் இந்த மண்ணில்.
உன்னை பற்றியும் உன் அழகை பற்றியும் பல கிறுக்கல்கள் கிறுக்கவேண்டும் என்று தோன்றி மறைகிறது.
நீ கீறிய இதயமும் துடிக்கிறது என் நாடி நரம்பும் சிலிர்க்கிறது மாலை வேலையில் உன்னோடு நான் மட்டும் தனியாக பயனித்த போது..
நான் மெல்ல கிறுக்கிய வார்த்தைகள் எல்லாம் உன் உளரலாக உறுமாற வேண்டும்...
பெண்ணே எனக்கும் பித்து பிடித்தது நினைவில் - கனவில் நீ எனக்கு கொடுத்த பத்து முத்தத்தால்...
-SunMuga-
No comments:
Post a Comment