நான்
ஊதிய துன்பம்
இறந்தாலும் நம்மை
விட்டு போகாதோ?
வரைந்த வட்டத்துக்குள்
ஓர் வாழ்க்கை,
விழாமல் விழுகிறது
கண்ணீர் ...
தவறை தவறாமல்
செய்யும் நான்,
தவறி தவறி
என்னையை அடைகிறாய்
நீ....
நீ தான்
வடிக்கிறாய் கண்ணீர்,
நான் தானே வளர்க்கிறேன்.
பொய்த்து போன
ஓர் வாழ்க்கையில்
போவது ஒரு துளி
கண்ணீர் தான் விழியில்
இந்த உயிர் பிரியும் வரை.
பிரிந்த கனம் சேர
இதற்க்கு மேல்
என்ன செய்வாய் நீ?
என் மேல் உள்ள
பிழையால்.
பிழை என்று தெரிந்தும்
பிள்ளையை காயப்படுத்தும்
தகப்பனோ நான்?
பேய் ஒன்று கழுத்தை
நெறிக்க இறந்தாவது
போய்யிருக்கலாம் அந்த
கனவின் முடிவில்...
-SunMuga-
17-04-2013 9.33 PM
No comments:
Post a Comment