எழுதியவன் நான்.
எழுதவைத்தது நீ..
சதா அம்மாவின் காலடியை சுற்றி திரிந்தவள் பற்றிய ஒரு சரித்திரத்தின் பிரதி தான் இது.
அம்மா என்ற ஒரு வார்த்தைக்குள் அனைத்தும் அடங்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இங்கு அது பிரதிபலிக்கிறது .
காலை எழுப்புவது முதல் இவளை வேலைக்கு கிளப்புவது என இவள் அம்மாவின் வேலை தொடங்குகிறது ஒவ்வொரு நாளும்.
அம்மா இன்னும் கொஞ்ச நேரம்,இன்னும் கொஞ்ச நேரம் என்று, இவள் எழும் போது செல்லமாக சொல்லும் வார்த்தைகளை முரைத்த படியே ரசித்துருக்கிறாள் இவள் அம்மா.
நீ குளிக்க இவ்வளவு நேரமாடி என்று கோவத்துடன் கேட்ட படியே இவளுக்காக சமையலும் செய்துகொண்டே தான் இருப்பாள் இவள் அம்மா.
உடுத்திய உடையை இவளே ரசித்து உடுத்திருக்க மாட்டாள்,ஆனால் இவள் தாயோ அதை ருசித்து பார்த்தபடியே இருக்கிறாள் இது தான் தாய் பாசமோ!!!
அங்கும் இங்கும் இவள் ஒடிய படி ஜடைகளை பின்ன, வண்ண பூவும்இட்டு,இவள் தாயோ இவள் போகும் இடத்திற்கு எல்லாம் இவளுக்கு முன்னால் நின்று ஊட்டிக்கொண்டு இருப்பாள், நேரம் ஆயிற்று என்றபடி..
ஒருநாளும் இவள் கண்டு இருக்க வாய்ப்பில்லை நம் பிள்ளை வேலைக்கு செல்கிறதே என்று இவள் தாய் சிந்திய கண்ணீரை..
வேலைக்கு இவள் சென்றாலும்,வேல வேலைக்கு இவளை என்னியே இவள் தாய்க்கு காலம் போகும்.
சூடிய பூ வாடும் நேரம் வரும்போது இவளுக்காக காத்திருப்பாள் இவள் அன்னை.
என்னமா செஞ்சு வச்சுருக்கன்னு இவள் கேட்பதற்கு முன்னால் இவளுக்காக ஏதேனும் எடுத்து வைத்துருப்பாள் .
இவளின் பாசம் வெளிப்படுவது அவள் அன்னையின் உடல்நிலை சரியில்லாத காலத்தில் தான். ஆனால் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தான் அவள் அன்னையின் பாசம் அதிகம் ஆகும் இவள் மீது.
அன்னைக்காக ஒரு சில வரிகள் ;
என் தெய்வமே
என் தலையனையாக
இருந்த நீ
இன்று சிந்தனையாகவே
என்னுள் உயிர்
வாழ்கிறாய்!!!
நாம் வாதாடிய சொற்கள்
எல்லாம் இன்றும்
வாதாடிக்கொண்டே தான்
இருக்கிறது நம்
வீட்டில்...
காற்றில் நீ கலந்தாலும்
இன்றும் என்
கண்ணில் தான்
குடியிருக்கிறாய்..
என்னை எண்ணி நீ
கலங்காதே நான்
தைரியமாக தான்
இருக்கிறேன் உன்னோடு
உன்னால்...
உனக்கு கால்கள் வலித்தால்
தயங்காமல் என்னிடம் சொல்
நான் இருக்கிறேன்,
ஒத்தனம் கொடுக்க.
மூன்று பிள்ளையில் ஒரு
பிள்ளை ஆனாலும்
நான் தான் உன்
முதல் பிள்ளை
என்பதை நான் அறிவேன்.
நான் வடித்த கண்ணீர்
எல்லாம் உன் பாதம்
கழுவுவதற்க்கு தான்
நான் கலங்குகிறேன் என்று
நீயும் கலங்கிவிடாதே!!!
ஆறுதல் கூறவும் ஆள் இல்லை
என் ஆற்றல் நீ என்று
நான் எண்ணி விட்டதலோ
என்னவோ..
நான் இன்று தொடும் இடம்
எல்லாம் நீ
தொட்ட இடங்கள்
இன்னும் சொல்ல
போனால் நீ இருக்கிறாய்
என்றே தொட்டுப்
பார்க்கிறேன் என்
அன்னையே!!!
காரணம் அறியாமல்
இன்று கண்ணீர்
வடிகிறது. நீ என்னுள்
இருக்கிறாய் என்பதற்க்கு
சாட்சி போல..
நான் கண்ட காட்சிகள்
எல்லாம் கனவா?
நனவா? என்று கூட
தோன்றுகிறது.
ஏதும் அறியாத மழழையாகவே
இருக்கிறேன் இன்று
உந்தன் அன்பால்..
உன்னிடம் உயிரை
பெற்றதும் இல்லாமல்
இன்று தைரியத்தையும்
கற்றேன்..
என்னில் என் ஆசைகளை
நான் புதைத்து வைத்ததே
இல்லை - நீ தான் எனக்கு
முன்னரே அறிந்து
வைத்திருக்கிறாயே எனக்கு
என்ன வேண்டும் என்று.
ஆயிரம் ஜென்மம் நான்
எடுத்தாலும் உன்
பிள்ளையாக நான்
பிறக்கும் வரம்
மட்டும் அந்த இறைவன்
அருளினால் போதும்
-SunMuga-
24-03-2013 5.00AM
எழுதவைத்தது நீ..
சதா அம்மாவின் காலடியை சுற்றி திரிந்தவள் பற்றிய ஒரு சரித்திரத்தின் பிரதி தான் இது.
அம்மா என்ற ஒரு வார்த்தைக்குள் அனைத்தும் அடங்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இங்கு அது பிரதிபலிக்கிறது .
காலை எழுப்புவது முதல் இவளை வேலைக்கு கிளப்புவது என இவள் அம்மாவின் வேலை தொடங்குகிறது ஒவ்வொரு நாளும்.
அம்மா இன்னும் கொஞ்ச நேரம்,இன்னும் கொஞ்ச நேரம் என்று, இவள் எழும் போது செல்லமாக சொல்லும் வார்த்தைகளை முரைத்த படியே ரசித்துருக்கிறாள் இவள் அம்மா.
நீ குளிக்க இவ்வளவு நேரமாடி என்று கோவத்துடன் கேட்ட படியே இவளுக்காக சமையலும் செய்துகொண்டே தான் இருப்பாள் இவள் அம்மா.
உடுத்திய உடையை இவளே ரசித்து உடுத்திருக்க மாட்டாள்,ஆனால் இவள் தாயோ அதை ருசித்து பார்த்தபடியே இருக்கிறாள் இது தான் தாய் பாசமோ!!!
அங்கும் இங்கும் இவள் ஒடிய படி ஜடைகளை பின்ன, வண்ண பூவும்இட்டு,இவள் தாயோ இவள் போகும் இடத்திற்கு எல்லாம் இவளுக்கு முன்னால் நின்று ஊட்டிக்கொண்டு இருப்பாள், நேரம் ஆயிற்று என்றபடி..
ஒருநாளும் இவள் கண்டு இருக்க வாய்ப்பில்லை நம் பிள்ளை வேலைக்கு செல்கிறதே என்று இவள் தாய் சிந்திய கண்ணீரை..
வேலைக்கு இவள் சென்றாலும்,வேல வேலைக்கு இவளை என்னியே இவள் தாய்க்கு காலம் போகும்.
சூடிய பூ வாடும் நேரம் வரும்போது இவளுக்காக காத்திருப்பாள் இவள் அன்னை.
என்னமா செஞ்சு வச்சுருக்கன்னு இவள் கேட்பதற்கு முன்னால் இவளுக்காக ஏதேனும் எடுத்து வைத்துருப்பாள் .
இவளின் பாசம் வெளிப்படுவது அவள் அன்னையின் உடல்நிலை சரியில்லாத காலத்தில் தான். ஆனால் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தான் அவள் அன்னையின் பாசம் அதிகம் ஆகும் இவள் மீது.
அன்னைக்காக ஒரு சில வரிகள் ;
என் தெய்வமே
என் தலையனையாக
இருந்த நீ
இன்று சிந்தனையாகவே
என்னுள் உயிர்
வாழ்கிறாய்!!!
நாம் வாதாடிய சொற்கள்
எல்லாம் இன்றும்
வாதாடிக்கொண்டே தான்
இருக்கிறது நம்
வீட்டில்...
காற்றில் நீ கலந்தாலும்
இன்றும் என்
கண்ணில் தான்
குடியிருக்கிறாய்..
என்னை எண்ணி நீ
கலங்காதே நான்
தைரியமாக தான்
இருக்கிறேன் உன்னோடு
உன்னால்...
உனக்கு கால்கள் வலித்தால்
தயங்காமல் என்னிடம் சொல்
நான் இருக்கிறேன்,
ஒத்தனம் கொடுக்க.
மூன்று பிள்ளையில் ஒரு
பிள்ளை ஆனாலும்
நான் தான் உன்
முதல் பிள்ளை
என்பதை நான் அறிவேன்.
நான் வடித்த கண்ணீர்
எல்லாம் உன் பாதம்
கழுவுவதற்க்கு தான்
நான் கலங்குகிறேன் என்று
நீயும் கலங்கிவிடாதே!!!
ஆறுதல் கூறவும் ஆள் இல்லை
என் ஆற்றல் நீ என்று
நான் எண்ணி விட்டதலோ
என்னவோ..
நான் இன்று தொடும் இடம்
எல்லாம் நீ
தொட்ட இடங்கள்
இன்னும் சொல்ல
போனால் நீ இருக்கிறாய்
என்றே தொட்டுப்
பார்க்கிறேன் என்
அன்னையே!!!
காரணம் அறியாமல்
இன்று கண்ணீர்
வடிகிறது. நீ என்னுள்
இருக்கிறாய் என்பதற்க்கு
சாட்சி போல..
நான் கண்ட காட்சிகள்
எல்லாம் கனவா?
நனவா? என்று கூட
தோன்றுகிறது.
ஏதும் அறியாத மழழையாகவே
இருக்கிறேன் இன்று
உந்தன் அன்பால்..
உன்னிடம் உயிரை
பெற்றதும் இல்லாமல்
இன்று தைரியத்தையும்
கற்றேன்..
என்னில் என் ஆசைகளை
நான் புதைத்து வைத்ததே
இல்லை - நீ தான் எனக்கு
முன்னரே அறிந்து
வைத்திருக்கிறாயே எனக்கு
என்ன வேண்டும் என்று.
ஆயிரம் ஜென்மம் நான்
எடுத்தாலும் உன்
பிள்ளையாக நான்
பிறக்கும் வரம்
மட்டும் அந்த இறைவன்
அருளினால் போதும்
-SunMuga-
24-03-2013 5.00AM
No comments:
Post a Comment