ஒரு ஊர்ல இட்லி இருந்துசாம் அது ரெம்ப நாளா சாம்பார லவ் பண்ணுச்சாம். இந்த இட்லியோட வீட்ல சாம்பர் இல்லாம யாராலயும் சாப்பிட முடியலயாம்.அதனால இந்த இட்லிக்கு சாம்பார கல்யாணம் முடுச்சு வச்சாங்களாம்.
First Night அப்ப இட்லி சொல்லுச்சாம் சாம்பார்ட,இத்தனை நாள விட இன்னைக்கு நீ ரெம்ப டேஸ்ட அதிகம்டின்னு..
அத தினம் தினம் சாம்பார் நினச்சு வெட்கப்பட்டுசாம்...
இப்படியே நாள் போக போக.. இந்த இட்லிக்கும் சாம்பாருக்கும் சட்னி பிறந்துச்சாம்.
அய்யோ!!!! அய்யோ!!! அப்ப அந்த குடும்பத்துள்ள இருந்த சந்தோசம் இருக்கே... முடியல!!!!
ஒரு நாளு சாம்பார்ல உப்பு இல்லன்னு இட்லி கோவப்பட சட்னி ரெம்ப பயந்துருச்சாம்.. அதுல சட்னிக்கு காய்ச்சலே வந்துருச்சுனா பாரேன்...
அப்படி சண்ட போட்டு கொஞ்ச நாள் இந்த இட்லியும் சாம்பாரும் பேசம இருந்தப்ப தான் சட்னி ரெம்ப வருத்தப்பட்டுச்சாம்..
ஒரு நாளு சட்னி சாம்பார்க்கு ஐடியா கொடுத்துச்சு.. இட்லிக்கு தக்காளி சட்னி செஞ்சு கொடுன்னு,உடனே சந்தோசத்துல சாம்பார் தக்காளி சட்னி செஞ்சு கொடுக்க மறுபடியும் இட்லியும் சாம்பாரும் சேர்ந்துச்சாம்....
இப்ப சந்தோசம் தானா?
-SunMuga-
No comments:
Post a Comment