April 20, 2013

Lovers

மூடி மறைத்த முகம்
நாள் தோறும் இவன்
தேடிய முகம்,

ஒரு நாள் இரவும்
பகலும் பகிரும்
நேரம் சந்திக்க
காதல் பூத்தது..

காணமல் பேச
கண்களால் கவிதை
அமைக்க என
காலம் நகர்கிறது

உன்னை விட உன் காதலை
பற்றி சொல்ல,
ஏழு ஜென்மம் போதாது.
முதுமை காதலில்
ஏற

இவர்களோடு இளமை
உறவாட இனிமையான
காதலும் வளர்கிறது.

ஒரு நாளும் மறந்ததில்லை
இவன் இவன் காதலை
சொல்ல...

காலையில் எழுவான்
தன் காதலை
சொல்வான்...

யாரிடம் என்று
உற்றுப் பார்த்தால்
யாருமே இல்லை
இருந்தது அவன்
காதல் மட்டும் தான்.

அவன் சொன்ன விதம்
மிகவும் அரிது

கனவுக்குள்ளே அவள்
கைவிரலை பிடித்து
கண்களை பார்த்து
கவிதையாக பேசிய
படி தன் காதலை
வெளிப்படுத்தினான்

எழுந்தவனை ஏண்டா
இப்படி உளருகிறாய் என்று கேட்டால்?

உளரும் அளவிற்கு
ஏதும் நடக்கவில்லையே
என்று தனியாக
சிரிக்கிறான்..

இப்படி இவனுள்
காதலை விதைத்தவள்
எப்படி இருப்பாள்
என்று யூகிக்ககூட
முடியவில்லை.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கோணத்தில்
சிரிக்கிறான், ரசிக்கிறான்..

பூவை பார்த்து
சிரிப்பதால்,
மென்மையோ இவள்..

காற்றை பார்த்து
ரசிப்பதால் இவன்
சுவாசமோ இவள்!!!

விடிந்த விடியலை
ரசிக்கிறான்;

உதித்த சூரியனை
ரசிக்கிறான்;

எழுந்த கடல் அலையை
ரசிக்கிறான்;

நடந்து சென்ற குழந்தையை
ரசிக்கிறான்;

இவள் நடந்த பாதையை
ரசிக்கிறான்..

இப்படியே இவன் காதலையும்
வளர்த்துக் கொள்கிறான்
தினமும்....

-§un Muga-
26-05-2013 20.42 PM

No comments:

Post a Comment