நீ என்னை காணும் போது வெட்கம் கொள்கிறாயா? இல்லை வெட்கத்தை கொல்ல எண்ணுகிறாயா? என் காதலை உன் கையில் கொடுத்து என் கையால் உன் இதழை பிடித்து நம் காதலை இதமான காதலா மாற்ற எண்ணுகிறேன்.
நீயும் நானும் அமர்ந்து பேசிய இடத்தில் புதிதாய்ஒரு பூ பூத்திருக்கிறது. அது என்ன பூ என்று யோசிக்கிறாயா?அது தான் காதல் பூ.
உன் மூச்சுக்காற்றை கொள்ளையடித்து உன் கை விரல் தீண்டி உன் மூச்சு காற்றை கொண்டு மறு ஜென்மம் நான் எடுக்க எண்ணுகிறேன்.
உன் அன்பை கொஞ்ச நேரம் பரித்து உனக்கே பரிசாக கொடுக்க எண்ணுகிறேன்.
நீ முதுகு வலிக்குடா என்று சொல்லும் போதெல்லாம் முத்தம் கொடுடான்னு நீ சொல்ற மாறியே எனக்கு கேட்கும்.
சரி, அப்படின்னு முத்தம் கொடுத்த நீ அய்யோ!!!! இப்ப உடம்புலெல்லாம் வலிக்கேடான்னு,செல்லமா சொல்லி ஒரு சின்ன சினுங்கலும் விட்டு விடுவாய்.
எழுதி பார்க்கிறேன் உனக்காக ஒரு கவிதை;
என் காதலும் நீ,
என் காதலியும் நீ,
என் காலையும் நீ,
அந்தியில் பொழியும்
மழையும் நீ,
கொளுத்திய
வெயிலும் நீ,
நான் போர்வைக்குள்
போர்த்திய குளிரும் நீ,
நான் உடுத்திய
உடையும் நீ
என்னை படுத்திய
நினைவும் நீ,
ஆழ மரம் இல்லாத
அகலமான நிழல் நீ
நதி நீர் நீ,
நான் பருகும்
குடிநீர் நீ,
வழிந்தோடும்
வேர்வையும் நீ,
என் காதலின்
வேர் நீ...
காதலை மையமாக
கொண்டு கவிதை
எழுத ஆசையில்லை
உன்னை மையம்
கொண்டே கவிதை
எழுத ஆசை..
நான் இல்லை,
நானாக இல்லை,
இன்று உன் காதலால்
துயரமும் இல்லை,
வலியும் இல்லை,
ஆம் உன் அன்பை
பற்றி சொல்ல என்னிடம்
வார்த்தையும் இல்லை.
நீ என்னிடம் இல்லை,
ஆனால் இருக்கிறாய்
என் உயிராக
என்னுள் ஒலி
எழுப்பிக்கொண்டே..
நீயும் கதறுகிறாய்
கதவோரம் நின்ற படி,
யாரும் காணாமல்,
நான் காணாமல் போன
பாதையை பார்த்தபடி,
உன் வீட்டு படியும்
கதறியது உன் பாதம்
என் பாதத்தை உரசியபடி
பிரியும் போது...
நான் ஒழிந்த ஒளியில்
உன் விழி மட்டும்
என்னை கண்டு
கண் கலங்குகிறது
விடியலில்லாவது விடியல்
வருமா? என்று.
உன் காதல் புனிதமானது
என்பதை எத்தனை முறை
நிருபித்திருக்கிறாய்.
காதலை கொடுத்தாய்,
உன் தூக்கத்தை தொலைத்தாய்,
உன் ஏக்கத்தை வளர்த்தாய்,
உன் விடியலயும் மறுத்தாய்,
மறுஜென்மம் எடுத்தாய்,
கனவால் எழுந்தாய்,
மோகம் கொண்டாய்,
கோவமும் கொண்டாய்..
இப்படி எத்தனை எனக்காக,
போதும் என் உயிரே
உன் காதல் போதும்
இந்த உலகத்தில் நான்
வாழ, வளர!!!!
-SunMuga-
11-05-2013 22.26 PM
No comments:
Post a Comment