April 16, 2013

கேள்வியும் பதிலும்

நீ யார்?
நான் காதலன்.
யாரை காதலிக்கிறாய்?
என்னவளை தான்.
உன்னவள் என்றால்?
என் உயிர்.
உயிர் உன் கையில் இல்லையே?
அது தான் உண்மை.
புரியலயே?
என் உயிர் வாழ்வது
என் கண்ணில்,
என் மூச்சில்,
என் பேச்சில்,
என் விரலில்,
என் கால்களில் ,
என் இதயத்தில்,
என் உதிரத்தில்,
என் எழுத்தில்,
என் எண்ணத்தில்,
என் ஏக்கத்தில்,
என் தூக்கத்தில்,
என் கனவில்,
என் நினைவில்,
என் இரவில்,
என் பகலில்,
என் துயரத்தில்,
என் இன்பத்தில்,
என் மென்மையில்,
என் உண்மையில்,
என் நேசத்தில்,
என் பாசத்தில்,
என் அன்பில்,
என்று ஒவ்வொன்றிலும்
என்னவள் வாழ்கிறாள்...

நான் படித்த கவிதைகள்
எல்லாம் இவளின் நகலே
என்று தோன்றும்.
உண்மைதானே சுயம் என்னோடு வாழ்கிறதே!!!

-SunMuga-
16-04-2013 22.43 PM

No comments:

Post a Comment