February 28, 2015

2015 கவிதைகள் 361 to 370

குறுநகை மீட்டெடுக்கும்
உன் அழகின் அழகை
பெருஞ்சிறை செய்து
என்னையும் அது
வாட்டியெடுக்கும்...       361

என் ஆழ்ந்த சிந்தனைக்குள்
அடங்கி கிடக்கிறது
உன் ஆழ்ந்த முத்தம்..      362

எப்படி தொடங்கலாம்
என்று விழியில்
நான் யோசிக்கும் போதே
நீயே தொடங்கி விடுகிறாய்
உன் இதழின் வழி..           363

நிலவை ரசிக்கும்
ஜீவன் நான்
இந்த ஜீவனை
ரசிக்கும் நிலவு நீ...             364

உலகை
நான் கான
முற்படும் முன்
உன் காதலின்
ஆழ்ந்த இசையை
ரசித்துக் கொள்ள
எனக்கும் ஓர் ஆசை..       365

தனிமையில்
காற்றோடு பாடும்
தாவரத்தை போல
உன் தாவணியின்
நிறங்கொண்ட
இந்த சாலையோர
தாவரத்தோடு
இப்போது பேசிக்
கொண்டு இருக்கிறேன்..  366

களையும் முன்
கனவுக்குள் ஓர்
அர்த்தமற்ற போராட்டம்
திருமண தேதி
ஏப்ரல் 24 என்பதால்
நல்ல வேளையாக
அன்று திருமண நாள் இல்லை.. 367

அந்த வீட்டில்
நீயும் இல்லை
நானும் இல்லை
இருந்தும் இருக்கிறது
நம் முத்தத்தின்
வெப்பம் காதலாக...        368

நீ இழுத்துக்
கட்டும் கொடிக்
கம்பியை போல
உன் நினைவுகளை
நான் என்
இதயத்தோடு இழுத்துக்
கட்டி வைத்திருக்கிறேன்..  369

உன் அன்பை
தெரிவிக்க
இப்போது முத்தமிடு
பின்
போதாது என்று
சப்தமிடு...                      370

2015 கவிதைகள் 351 to 360

மலர துடிக்கும்
அரும்பு போல
உன் குறும்பால்
என்னை மூடிக் கொள்கிறாய்.. 351

வெற்றிடத்தில்
என் வெறுங்கையை
நீட்டுகிறேன்
வெற்றிடமாய் நீ
எங்கும் என்
அறையில் நிரம்பி
இருப்பதால்...                 352

கனவில் உன்னோடு
சுற்றி அழைந்த பிறகு
உன்னோடு ஓர்
ஆழ்ந்த அமைதியை
தேடுகிறது என் இதழ்..   353

மெல்ல மெல்ல
ஓர் கனவை
உருவாக்குகிறேன்
உன் காதலின் வழியே...   354

வெறுமை நிரப்புகிறது
இவ்விரவு
இருந்தும் பொறுமை
காக்கிறது
உன் இதயம்
எப்போதோ
சேர்ந்த இதழை நினைத்து..  355

பெண்களை பார்க்கும்
போதெல்லாம்
அன்பே! உன் ஞாபகம்
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
நீ எந்தவொரு
பெண்ணிற்கும்
என் ஞாபக அடுக்கில்
இடம்கொடுப்பது இல்லை
ஏன்?
நீதான் ஒரு தேவதை ஆச்சே!!  356

ஆதிமுதல்
என் அனைத்து
கவிதையின்
ஓர் அழகான விண்ணப்பம்
உன் முத்தம்
வேண்டுமென மட்டுமே!!   357

உள்ளாடை களைத்த
அந்த இரவு
இன்னும்
உடம்பின் உள்ளுக்குள்
ஏதோ ஒன்றை
களைக்கத் தான்
செய்கிறது என் பெண்ணே! 358

மறைமுக துக்கம்
ஒன்று என்
கவிதைக்குள் புதைகிறது
மரணமற்ற ஓர்
அந்தி நேர காதலால்..           359

தொடங்கிய
முதல் முத்தம்
தொடங்கும்
நேரமிது
தொடங்கும்
இடம் அது- உன் இதழ்.          360

2015 கவிதைகள் 341 to 350

நினைவில் இருந்து
தப்பி நான்
உன் கனவுக்குள்
ஓடி வருகிறேன்
ஒரு முறை
நீ கொடுத்த முத்தத்தால்..  341

நீ எப்போதும்
தர வேண்டும்
நான் எதிர்பாராத
அந்த முத்தம்
அந்தி மழையில்...                 342

நிரப்பப்பட்ட தேநீர்
கோப்பை போல
உன் காதலின்
நினைவுகளை நிரப்பிக்
கொள்கிறேன்
தேநீர் தேவைப்படும்போது..  343

உன் கனவுகளுக்கு
வழி அனுப்புகிறேன்
நினைவில் நீ
கிடைத்த பிறகு...                 344

என் கவிதையால்
உனக்கொரு
உடை அமைக்க
காத்திருக்கிறேன்..          345

ஒவ்வொரு பூக்களுக்கும்
ஒவ்வொரு வாசம்
என் கவிதைகளுக்கு
உன் காதலின் வாசம்...      346

காதலில் காமம்
கரைகிறது
காமத்தில் காதல்
உறைகிறது..                347

முழுவதுமாய் அழிந்து
போகிறது வெட்கம்
வெகுநாட்கள் கழித்து
கூடிய இரவின் போது.   348

இன்று உன்னுடனான
ஓர் இன்பம் தான்
இன்றைய அதிக
கவிதையின் வழி....       349

உன் கனவுக்கு
விடுமுறை அளிக்கிறேன்
நினவில் உன் கைவிரல்
கோர்த்த நொடியில்..      350

February 27, 2015

2015 கவிதைகள் 331 to 340

சோகம் நிரம்பிய
என் கண்களில்
நீ எப்போதும்
சுகமாய் என்னை
சிரிக்க வைக்கிறாய்...         331

பெரும் மழை
கூட்டிய குளிர்ச்சி
உன் குரலை
நான் உள்வாங்கும்
நொடிகளில்...                         332

நீ என் கண்ணம்
பற்றும் போது
நான் உன் காதலோடு
இதழையும் பற்றி
விடுகிறேன்....                     333

ஏன் இந்த
இரவு நேர
மழை மட்டும்
உன் முத்தத்தை
நினைவூட்டுகிறது..            334

இன்னும் ஒரு முறை
படிக்க ஆசைப்
படுகிறேன் அன்பே!
உன் இதழ் கவிதையை..    335

பேசிய நதியும் நீ!
கொஞ்சிய அலை
கடலும் நீ!!                        336

கண்ணீர் துளியை
மறந்து
நீயும் ரசிக்கிறாய்
என்னோடு ஓர்
சிறு மழைத்துளியை...      337

நீ இருக்கும்
திசையை நோக்கி
காதலோடு நகரும்
மெல்லிய இழை நான்..       338

நினைவுகளை
மீறி விட்ட
கனவு அது...                     339

நீலம் பூசப்பட்ட
வானத்தின் கீழ்
பச்சை இழையாய்
நம் காதல்..                      340

February 26, 2015

2015 கவிதைகள் 321 to 330

எழில் நிறைந்த
இவ்விரவில்
என் தனிமையை
சகித்துக் கொள்கிறேன்
சகியே!
தனிமையில்
இனிமையாய்
உன் நினைவுகளின்
சாயல் என் மீது
படரும் போது...                     321

நிஜத்தில் காதலனாக
கனவில் கணவனாக
இரண்டு வேடங்கள்
இட்டுக் கொள்கிறேன்..       322

கனவு கலைந்ததும்
சிரித்துக் கொண்டேன்
அப்போதிலிருந்து
நான் எப்போதும்
சிரித்துக் கொள்ள
புதிய புதிய
கனவுகளை நீ
வழங்கிக் கொண்டே
இருக்கிறாய்..                 323

தீப வெளிச்சத்தின்
இடையே
என்னால் சொருகப்பட்ட
காமத்தினால்
முழுவதுமாய் அனைக்கப்பட்ட
ஓர் காதல்
மீண்டும் தீபமாய்
ஒளியூட்டுகிறது
உன் காதல்...           324

பெற்றோரை தவற
விட்ட குழந்தையை போல
நானும் அழுகிறேன்
உன் காதலை
பெற்று தவற
விட்ட பின்பு..          325

உனக்கென
ஓர் கவிதையை
தேட ஆரம்பித்துவிடுகிறேன்
உன் முத்தத்தை
பெற்ற பிறகு
உன் முத்தத்தை
பெறுவதற்காக...      326

என் அறையெங்கும்
நிரப்புகிறேன்
உன் காதல் நினைவுகளை
எப்போதும்
கண்ணில் வெளியேறும்
உன் கனவுகளை..      327

மெல்ல மெல்ல
உனக்கென
காதல் கடிதம்
எழுதி மடித்து
வைத்துக் கொள்கிறேன்
யாரேனும் பார்த்துப்
படிக்கும் முன்னே...      328

அலுவலக அறையில்
அமர்ந்து
அமைதியாக நான்
உன் கண்களை
பார்க்கிறேன்
கணினியின் வழியே..   329

ஆடைகள் உடுத்தி
மெல்ல மெல்ல
அசைந்து போகும்
அதிசய நதி நீ!                  330

2015 கவிதைகள் 311 to 320

சமீபத்திய கவிதை
படித்த உணர்வு தான்
உன் இதழை
பார்க்கும் போது..        311

சமீபத்திய கவிதை
எழுதி முடித்த
உணர்வு தான்
உன் இதழை
சுவைத்த பின்பு..           312

நெரிசல் மிகுந்த
பேருந்தில் ஏதோ
ஓர் பெண்
உரசும் போதும்
தழுவுகிறது உன் உரசல்..  313

உன் உடலின் வெப்பம்
அறிந்தே என்னை
குளிர்விக்கிறேன்
உன் நினைவால்....          314

முன் அறையிலேயே
சொல்லி விடுகிறாய்
சமையல் அறையில்
செய்ய வேண்டியதை..      315

ஆகாரமாக
உன் முத்தம்
இல்லாமல் காத்திருக்கிறது
என் காதலின் உடல்..         316

நீ இல்லாத
பெரும்பாலான கனவை
நானே தடை செய்கிறேன்
உறங்காமல்...                      317

உறங்கிய பின் வரும்
கனவில் பின் குறிப்பாய்
எப்போதும் இருக்கிறது
உன் கடைசி முத்தம்...        318

முகா என்று
என்னை நீ அழைத்தால்
முத்தம் காத்திருக்கிறது
என்று அர்த்தம்...             319

நீ செய்யும்
சின்ன சின்ன
செயல்கள் தான்
என் அன்றாட கவிதைகள்..  320

2015 கவிதைகள் 301 to 310

கொட்டும் பனிக் காலத்தில்
நெருப்பை மூட்டி
குளிர் காய்வதற்கு பதில்
என் இதழ் கூட்டி
குளிர் காய்கிறாய்....         301

பனி நிரப்பும்
இவ்விரவில்
தேநீர் நிரப்பி
உன் நினைவை
கூட்டி வைத்துக் கொள்கிறேன்.. 302

மடித்து வைத்த
புடவையும் சிரித்துக்
கொள்கிறது இரவின்
குதுகலத்தை இன்னும்
நினைத்து...                303

இரவில் தொடர்ந்த
உன் புன்னகை
இன்னும் தொடர்கிறது
அலுவலக மதிய நேர
உணவின் வழியிலும்..      304

நிசப்தம் மிகுந்த
இவ்விரவில் மிக
அதிகமாக ஒலிக்கிறது
உன் நிசப்தமான
ஓர் முத்தம்.....                      305

நம் காதலின் மயக்கத்தில்
விழுகிறது அதோ
ஓர் அழகிய நட்சத்திரம்...    306

ஊடல் கொள்ளும்
முடிவில் நான் உன்னை
உரசும் போது தான்
தெரிகிறது என் மீதான
உந்தன் காதல்
முதல் முத்தத்திலே...             307

மனம் எப்போதும்
அமைதியாய் இருக்கிறது
எப்போதும் நீ
அனுமதிக்கும் இதழ்
முத்தத்தால்......                    308

கவிதை எழுத வராத போது
மிக அமைதியாய்
உன் கைவிரலை
தொட்டுக்கொள்கிறேன்...   309

ஆடம்பர வாழ்க்கையை விட
மிக அமைதியாய்
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத தான்
ஆரம்பம் முதல் ஓர் ஆசை..  310

February 25, 2015

2015 கவிதைகள் 291 to 300

முழு இரவையும் கடக்கிறேன்
முழுதாய் உன்னை
நினைத்துக் கொண்டு
முழு நிலவாய்
உன்னை ரசித்துக் கொண்டு.. 291

எப்போதுமே
நீ கேட்கும் கேள்விக்கு
பதில் - இதழ்
பதிவிலே முடிந்துவிடுகிறது..  292

பதிக்கப்பட்ட புத்தகம் போல
என்னையே நான்
புதுப்பித்து கொள்கிறேன்
உன் காதலின் எழுத்தால்..   293

விடிவதற்கு முன்
முடித்துக் கொள்கிறேன்
என்னில் இருக்கும்
காமத்தை காதலின்
வருகையால்.....                    294

என்னைச் சுற்றி
அடர்ந்திருக்கும் தனிமையின்
கூடுதல் இனிமை நீ...       295

முழு உலகையும்
உன் முன் வைக்கிறேன்
முதல் இதழ்
முத்தத்தின் வழியே..       296

வளர்ந்து விட்ட ஆசையில்
இன்னும் பெரிதாய்
வளர்கிறது உன்னோடு
ஓர் கனவு...                     297

சுகமென நான்
கடக்கும் இவ்விரவில்
சுகம் மிகுந்த
உன் குரலே ஒலிக்கிறது
இரவை இரவாகவே
என்னை ரசிக்க
வைக்கிறது...                298

நான் ரசித்த இரவு
உன்னோடு கழித்த
அவ்விரவு மட்டும்தான்
இன்னும் அழகாக
இருக்கிறது இவ்விரவில்..    299

நான் புரிந்து கொள்ளும் போது
நீ சிரித்துக் கொள்கிறாய்
நீ சிரித்துக் கொள்ளும் போது
நானும் புரிந்து கொள்கிறேன்.. 300

February 16, 2015

காதல்1

சிறகு முறிந்த பறவை
நான்
உன்னை நினைத்து
சிறகாய் என்னை
இழக்கும் பறவையும் நான்..

கூடு இல்லாத
பறவை போல
உன் காதல் இல்லாமல்
வாடும் பறவை நான்...

சந்தோசத்தில் பறந்தேன்
உன்னை நினைத்து
சந்தேகம் இல்லாமல்
என் காதலை வளர்த்தேன்
காகிதமாய் நான் கருகி
போகும் வரை...

உன்னை பிரிந்து
வாழும் இந்நொடியில்
உணவு ஒரு கேடா என்ன?

உறக்கம் வராத இவ்விரவில்
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத
எனக்கும் ஆசை தான்
அதான் கண்ணீராய்
வடித்து கொண்டு
இருக்கிறேன்

காதல்

உயிரே!
எங்கோ பிறந்த
உன்னை நினைத்தேன்
உயிராய்
உன்னை நினைத்தேன்
என் உலகம் நீ என்று
சொல்ல நினைத்தேன்
உன்னை அனைத்து
உறங்கவும் நினைத்தேன்

தோழியை மறந்தேன்
தாயையும் மறந்தேன்
உன் பார்வை
என் மேல் பட
தவமாய் இருந்தேன்
உன் குரல் எழ
குயிலாய் காத்திருந்தேன்

மெளமான இவ்விரவில்
மெல்லிய ஆடைகள்
மெலிதாய் பேசுகிறது
உன் பார்வையை போல

தைத்த நூலை
தொட்டுப் பார்க்கிறேன்
உன் கை விரல்
தீண்டிய நொடியை  எண்ணி..

நூலகம் போல
உன் கடிதத்தின் வரிகளை
என் நெஞ்சத்தில்
அடுக்கி வைத்து
நானும் வாசிக்கிறேன்..

வா! என்று நீ அழைத்தால்
நானும் வந்து விடுவேன்
ஆனால்
இப்போது அழைக்காமல்
வருகிறது
என் கண்ணீர் மட்டுமே!

கோலம்

உன் விழியை
பார்த்து கோலம்
இட வேண்டியவள்

நீ சென்ற பாதையை
பார்த்து ஓலம்
இடுகிறாள்
ஒலியற்ற
கண்ணீரின் வழியே..

நீ வந்த போது
எழுந்த சந்தோசம்
நீ போன பின்பு
வந்த துயரம்
இரண்டுமே என்
காதலின் உயரம்...

ஏன் என்னை விட்டு
நீங்கினாய்
நீந்த மறந்த மீனை
போல
நாளும் வாடும்
என் கண்களை
ஏன் வருந்தினாய்.....

February 13, 2015

2015 கவிதைகள் 281 to 290

நிகழ்காலத்தின் கனவுகளாக
கனவுகளின் எதிர்காலமாக
எதிர்காலத்தின் நிகழ்வுகளாக
நிகழ்வுகளில் நினைவுகளாக
எப்போதும் இருக்கிறது
உன் காதல்....                      281

பேரின்பமாய் இருக்கிறது
உன் நினைவுகள்
பெரும் வண்ணமாய் இருக்கிறது
உன் கனவுகள்..             282

வலி கூடிய நெஞ்சத்தில்
உன் முகம் பதித்தால்
நானும் அஞ்சாமல்
ஏற்பேன் வலியையும்...  283

மயில் ஆடிய மழையை
நீயும் நானும் ரசித்த பிறகு
என் மனதில்
பெய்யும் மழையினில்
நீயே ஆடுகிறாய் மயிலாக.. 284

தோகையாக என்னுடன் ஆன
ஓர் ஆசையை
விரித்து ஆடும்
வண்ண மயில் நீ...               285

உன் மெளனத்தில்
மெல்ல கரையும்
ஒலி நான்..                    286

தனிமையென்னும்
இக்காலத்தை கழிக்கிறேன்
காதலின் எதிர்கால
சிந்தனையில்...       287

பறிக்க பறிக்க
வளர்ந்து கொண்டே
இருக்கிறது உன்
காதல் பூ...                288

என் பிம்பத்தில்
இருந்து வெளியேறுகிறது
உன் பிம்பம்
யாருமற்ற அந்த
புனிதமான மாடியில்..    289

கனவிலும்
என் கண்கள் கூசுகிறது
மித மிஞ்சிய
உன் கண் மையின்
வெளிச்சாத்தால்....        290

February 12, 2015

உடை

நான் உடுத்தும்
உடையில்
என் வறுமையை விட
என் உடல் தெரியாமல்
இருத்தல் நல்லது...

-SunMuga-
13-02-2015 05.25 AM

2015 கவிதைகள் 271 to 280

சுற்றும் பூமியில்
நான்
உன் புன்னகையை
சுற்றிக் கொண்டு
இருக்கிறேன்...        271

என் இதழில் கவிதை
எழுதுவதற்காக
பேனா தேடுகிறேன்
பேனாவாக உன்
இதழை தேடுகிறேன்..    272

கண் அடிக்கும் முன்
கண் மை இட்டுக்
கொள்கிறாய் - கனவில்..  273

கைக்குழந்தையை
தூக்குவதை போல தான்
உன் நினைவுகளை
தூக்கிச் செல்கிறேன்
மிக பத்திரமாக...             274

கடிதம் கொடுக்க
காத்திருக்கிறேன்
கடிதமாக காதலையும்
கொடுக்க
காத்திருக்கிறேன்...     275

பறவையென
பறத்தலை விட
கனவென உன்னோடு
இருத்தலே சாலச் சிறந்தது..  276

சமைக்கும் போது கூட
சுவைத்துக் கொள்கிறேன்
உன் இதழ் முத்தத்தின்
நினைவுகளை...                  277

உன்னை கவரும்
வார்த்தை என்பதால்
இது கவிதை
இல்லையெனில்
வார்த்தைகள் நிரம்பிய
வெறும் காகிதம் தான்...    278

நான் தேடிய
வார்த்தைகளில்
தேவதையே உன் முகம்..  279

ரகசியமாய் உன்னை
ரசித்த பின்பு
நீ ரசிக்கும்
படியான ஓர்
கவிதை எழுதுகிறேன்
மிக ரகசியமாக..   280

எதிர் கால கனவு

எனக்கும் இருக்கத் தான்
செய்கிறது ஏதோவொரு
பயம் எதிர் காலத்தை
நினைத்து நிகழ் காலத்தில்..
இறந்த காலத்தை
நினைத்து எதிர் காலத்தில்..
இருந்தும் காண்கிறேன்
அல்லது
நிகழ்கிறது ஏதோவொரு
கனவு நிகழ் காலத்தில்...

February 11, 2015

காதல்

தலைப்பிட்டு கொள்ள
தகுதி இல்லை
இருந்தும் தலைப்பிட்டேன்
இக்கவிதைக்கு
காதல் என்று..

கனவுகள் எழும்
இவ்விரவில்
நான் எழுதும்
கவிதை
உன்னைப் பற்றியும்
உன் காதலை பற்றியும்
என்னில் படர்ந்த
உன் பாசத்தை பற்றியும்
இவ்விரவின் ரகசியம்
பற்றியும் நீண்டு
கொண்டு இருக்கிறது


February 9, 2015

2015 கவிதைகள் 261 to 270

உன் குரலின் வழியே
கூறப்படும்
குறளில் தான்
உன்னத பொருள் அடங்கியுள்ளது
எங்களுக்கான உலகில்...   261

உறங்கும் முன்
உன் குரலில்
ஒரு குறள் வேண்டும்
என் உயிரே!!                   262

உலக பொதுமறை
என்னுள் எப்படி
பொக்கிஷம் ஆனது
உன் குரலின் வழி...      263

உலகின் பழ மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்ட
குறள்கள்
என் மொழியில்
உன் பெயர் செதுக்கப்பட்ட
குறள் ஆனது...           264

நிற்க அதற்கு தக
என்று நீ கூறிய
போது நின்ற
உன் கருவிழிகள்
இன்னும் நிற்கிறது
என் கரு விழியில்...     265

உனக்கு தெரிந்த
ஜந்து குறளில்
அடங்கி விட்டது
மொத்த திருக்குறளும்...  266

அறிவுடமை தலைப்பு
அறிவின் உடமையாய்
ஆனது உன் குரலில்...    267

தேவதையின் மடியில்
தேவதை
எனக்கு
எப்போதும் தேவையாய்
இருக்கிறது
என் இரு கண்கள்...         268

என்னை மட்டும்
நீ அனுபவிக்கிறாய்
உன் கண்களின் வழி
ஏன்
என்னை மட்டும்
கனவில்
அனுபவிக்க அனுமதிக்கிறாய்.. 269

புத்தகம் தேடுகிறேன்
மயில் இறகாய்
உன் காதலை
ஒழித்து வைத்துக் கொள்ள.. 270

2015 கவிதைகள் 251 to 260

நானும் அழைத்தேன்
என்ன நினைத்தாய்
உன்னையும் நினைத்தேன்
உறங்காமல் உயிராய்
எனக்காக காத்திருந்த
நீ இப்போது ஏற்க
மறுத்தாயோ என் அழைப்பை
இருக்காது என்று
நம்புகிறேன் இருந்தாலும்
தவிக்கிறேன்....                251

அறைகளில் நுழைந்த
நான் அழுது கொள்ள
அழைக்கிறேன் அல்லது
நீ அழாமல் இருக்க
அழைக்கிறேன் உன்
துயரத்தை...                      252

நீ தொட்டவுடன்
என்னை பின் தொடர்ந்து
வருகிறது உன்
புன்னகையோடு
ஒர் புது உலகம்...            253

மன்னித்து விடு
இப்போது அழ போகிறேன்
உன் மடி வேண்டுமென.. 254

உறங்கும் இவ்வுலகத்தில்
உறங்காமல் தவிக்கிறது
என் உலகம்
என்னோடு உறங்குவதற்கு.. 255

முடியும் போது
தொடங்கும் முத்தத்தை போல
மடிந்த பின்னும்
தொடங்கும் என் காதல்..   256

புல்வெளி நிறைந்த
என் சமாதியில்
பூக்களாக மலர வேண்டும்
உன் முகம்
என் மனதில்...          257

என் பெயருக்கு பதில்
உன் முகம் இருந்தால்
இன்னும் ஆயிரம்
முறை நானும் காதலிப்பேன்
உன்னை கல்லறையிலும்..  258

எரிப்பது வழக்கம் என்றால்
எரிக்கட்டும்
கடைசியாக முகம் மூடும்
எருகு உன் கையால்
இருந்தால்...               259

பெண் நுழைய கூடாத
இடம் அது என்பதால்
நீ உடுத்தும் உடையில்
ஏதேனும் ஒன்றை
என் உடம்பில்
சுற்றி விடு
நானும் சந்தோஷமாக
சுற்றி வருவேன்
காற்றாக இவ்வுலகத்தை... 260

February 7, 2015

2015 கவிதைகள் 241 to 250

இன்னும் ஒரு
ஆயுள் எல்லாம்
எனக்கு வேண்டாம்
இப்போது இருக்கும்
உன் அன்பின் ஆயுளால்..      241

அதிக நேரம்
நீ பேசி விட்ட பிறகு
உன்னை
அதிகமாய் நேசிக்கிறேன்
இன்னும்
அதிகமாய் ரசிக்கிறேன்..      242

இதோ விடியல்
வந்து விட போகிறது
அறை முழுதும்
வெளிச்சமாய்
ன் கவிதைகள்
நிரம்பி விட போகிறது...      243

கவிஞன் என்று
சொல்லிக் கொள்ள
நான் எழுதவில்லை
இக்கவிதைகளை
உன் காதலன் என்று
சொல்லிக் கொள்ளவே
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்...                244

மிக கவனமாக
உன் எதிரில்
அமர்ந்து உந்தன்
கண்களை கவனிக்கிறேன்
அவை எப்போது
வேண்டுமானாலும்
முத்தமிடலாம் என்பதால்..   245

எதற்காக காத்திருக்கிறாய்
என்று கேட்கிறது
உன் விழி
அந்த வார்த்தைக்காக
தான் நானும்
காத்திருந்தேன்
இப்போதே கொடுத்து
விடுகிறேன் முத்தத்தை..   246

எதற்காக காத்திருக்கிறாய்
என்று உன் விழி
கேட்கும் வரை
காத்திருக்கிறேன்
அதற்காக...               246.1

வானம் பரந்து
விரிந்து அதே
இடத்தில் இருக்கிறது
உன் காதல்
என் இதயத்தில்
இருப்பதை போல..           247

தானாகவே வேலை
செய்கிறது உன் காதல்
தாமதமாக நான்
உணர்ந்த பின்னும்...        248

காற்று கூட
ஒரு நாளில்
என்னை கைவிடலாம்
அப்போதும் நீ
என் கையை
பற்றிக் கொண்டு தான்
இருப்பாய்
கண்ணீர் விட்ட படி..         249

பொய்யை விரும்பும்
உண்மை நீ
உண்மையில் நான் பொய்
உண்மையில் நீ உண்மை..  250

February 6, 2015

Not a ஜென்2

முன்னும் பின்னுமாய்
பறந்த பறவைகள்
முந்திக் கொள்ள
ஆசைப்படுவதில்லை
பறக்கத் தான்
ஆசைப்படுகிறது..

கிளை முறியும்
ஓசை
பறவைகள் பறக்க
உந்தும் பாஷை....

மரம் வளர
தண்ணீராக
தன் கண்ணீரை
விடுகின்றன பறவைகள்...

Not a ஜென்

இழையின் நுனியில்
தொடர்கிறது
இன்னும் ஓர்
மழைத்துளி...

உடைந்த கடலின்
பிம்பம் வானத்தில்
கண்ணாடி சில்லுகளாக..

வளர்ந்த புல்லில்
தெரிகிறது
காற்றின் நெகிழ்ச்சி...

உயரத்தின்
மிச்சமாய் பழங்கள்
பறவைகளுக்கு..

கடலின் மீது
பறக்கிறது பறவை
பாறையின் வாசம் அறிந்து..

கூடு கட்ட இடம் தேடி அலையும்
பறவைகளுக்கு
தெரியவில்லை மரமே
இல்லை என்று...

மரங்களை அறியாத
குட்டி பறவை
கூட்டில் இருந்து
பார்க்கிறது புகைவண்டியை..

இறந்து போன யானையை
பசியோடு
இழுத்து செல்லுகிறது
சிறு எறும்பு..

எலியின் வீட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
பாம்பு நானும்
நகர்ந்து விட்டேன்
நமக்கேன் வம்பு...

பாறையை உரசி விட்ட
சந்தோசத்தில் குதிக்கும்
அருவியை ரசிக்கிறது
பாறையில் அமர்ந்த
ஓர் பறவை...

February 5, 2015

2015 கவிதைகள் 231 to 240

சேகரிக்கப்பட்ட ஆசைகளை
செலவு செய்கிறது
உன்னுடனான கனவுகள்..  231

எழுத நினைத்து
எழுதி முடித்தேன்
இன்னும் நீ
வாசிக்காத
இக்கவிதையை
நேரம் செலவிட்டு
சொல்லை தேர்ந்தெடுத்தேன்
நீ என்னில்
எப்போதும் தேர்வு
செய்யும் இதழை போல...      232

நீர் வேண்டும்
என்று அலையும்
ஆண் மீன் நான்
நீராக உன்
வேர்வையே வேண்டும்!!     233

பிரபஞ்சத்தில்
இறப்பை நோக்கிய
அனைவரின் வாழ்க்கை
பயணத்தில்
நான் மட்டும்
உன் இதழை
நோக்கி பயணிக்கிறேன்..   234

இன்னும் இருக்கிறது
நான் உன்னைப்
பற்றி எழுதி வேண்டிய
கவிதைகள் இரவுக்கு
பின்னும்....                            235

உயிர் பெறும்
உடலை போல
வரிகள் அனைத்தும்
உன்னால் உயிர் பெறுகிறது.. 236

எப்போதும் உன்னோடு
இருக்கிறேன்
இப்போது
இந்த நொடி
தனிமையோடு
இருக்கிறேன்
இப்போதே கடந்து
விடுவேன் மீண்டும்
உன்னோடு இருப்பதற்கென்று.  237

இரவை மூடும்
வெளிச்சம் நிலா,
நிலவை மூடும்
வெளிச்சம் இரவு-
இரவு வெளிச்சம்..         238

நான் இங்கிருந்து
பார்க்கும் நிலவை
தான் நீ அங்கிருந்து
பார்க்கிறாய்,
அங்கிருந்தே பார்க்கிறது
நம் இருவரையும்
அந்த நிலா...                      239

மறைமுகமாக உன்
முகத்தை ரசிக்கிறேன்
நேரடியாக உன்னை
நான் ரசித்த பிறகு..        240

2015 கவிதைகள் 221 to 230

என்னை காண
வந்த தேவதை நீ!!
என்னை காதலன்
என்று கண்டு
விட்ட தேவதையும் நீ!!          221

உன் மெல்லிய
ராகத்தில்
ரகசியமாய் வைத்து
இருக்கிறாய்
என் முத்தத்தின்
ரகசியத்தை....                   222

சாலையில் வழிவிடும்
மரங்களை போல
நான் என் வாழ்க்கையை
கடப்பதற்கு உன்
காதலே வழிவிடுகிறது..    223

எப்படி என்னுள்
இருக்கிறது உன் முத்தம்
எப்படியும் நீ
சொல்லித் தான்
ஆக வேண்டும்
முத்தத்தின் வழி..            224

முகமே என் முகம்
கரு மேகமே
என் தேகம்
அகமே உன் முகம்
என் முத்தமே
உன் தேகம்...                    225

எல்லையை தாண்டி
பறக்கும் பறவைகள் நாம்
நமக்கான
இரவு வானில்....              226

மஞ்சள் விளக்கில்
என் நெஞ்சம்
தொலைத்தேன்
கருமை கலந்த
உன் கண்களால்
என் கை விரலில் இருந்து
மஞ்சள் நிற
மோதிரத்தை கழட்டி
உன்னில் இட்டு
நானும் வளர்தேன்
என் காதலை கண்ணீரோடு..227

ஏதோ ஒன்றை
நீ சொல்லிய
பின்பு உன்னில்
எழும்
உன் சிரிப்பொலிக்காகவே
நீ ஏதோ ஒன்றை
சொல்லியாக வேண்டும்..    228

இழையின் நுனியில்
தொடர்கிறது
இன்னும் ஓர்
மழைத்துளி...             229

பெருமழை நிரப்புகிறது
என் இதழை
உன் இதழால்....          230