February 6, 2015

Not a ஜென்2

முன்னும் பின்னுமாய்
பறந்த பறவைகள்
முந்திக் கொள்ள
ஆசைப்படுவதில்லை
பறக்கத் தான்
ஆசைப்படுகிறது..

கிளை முறியும்
ஓசை
பறவைகள் பறக்க
உந்தும் பாஷை....

மரம் வளர
தண்ணீராக
தன் கண்ணீரை
விடுகின்றன பறவைகள்...

No comments:

Post a Comment