வாழ்க்கையை
சிந்தித்து
சிந்தித்து
வார்த்தைகள்
குவிகிறது
வார்த்தைகள்
குவிந்து
வாழ்க்கையும்
கரைகிறது
காரணம்
யாரை கேட்க?
கேட்டுக் கொள்ள
யாரும்
இல்லாத
இந்த அறையில்
இந்த இருட்டில்
இனி
என்ன நடக்கும்
என்ற தொனியில்
என் முகம்
தெரியா
இந்த
மாய சுவற்றில்
சுழண்டு சுழண்டு
கருகும்
என் கண்களிடம்
என்ன தான்
எதிர் பார்க்கிறது
இந்த உலகம்
உலகம்
எப்போதும்
ஒன்றை கொடுத்து
இன்னொன்றை
எடுத்துக் கொள்கிறது
இப்போது
உன் கவிதையை
கொடுத்து
என் கண்ணீரை
எடுத்துக் கொள்கிறது..
-SunMuga-
17-06-2015 21.42 PM
No comments:
Post a Comment