December 31, 2013

அன்பு தம்பி

இந்த வருடம் இனிதே முடியும் தருணம் இது. இன்று 31-12-2013. ஏதாவது உருப்படியான காரியம் செய்ய நினைத்து, இந்த வருடமும் வீணாய் போனது. ஆனாலும் போன வருடத்தை காட்டிலும் இந்த வருடம் குறைவு தான் நான் வீணாய் போனது. காரணம் என்ன? என்று அலசி ஆராய தேவையில்லை. என் நண்பர்களின் உதவியால் உருப்படியான ஒரு சில வேலைகளை செய்து முடிக்க முடிந்தது.

இன்று என் சகதோழி ஒருத்தி எத்தனையோ நண்பர்களை பற்றி நீ எழுதிவிட்டாய்.இன்னும் ஏன்? அவனை பற்றி எழுத வில்லை என்று வினவினாள். அவள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நான் ஏன் அவனை பற்றி இதுவரை ஒரு வரி கூட எழுதவில்லை?

நானே யோசித்தேன். சற்று மனஅமைதி. அருகில் யாரும் இல்லை. யோசிக்கிறேன். என்ன எழுதுவது அவனை பற்றி. அவனுக்கும் எனக்குமான தொடர்பு என்ன? எங்கிருந்து ஆரம்பம் ஆனது? இப்பொழுது, இந்த கனம் என்ன நிலைமையில் இருகிறது? எதுவுமே எனக்கு புரியவில்லை. ஆனாலும் அவனை பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் அவனை விட என்னிடம் இருக்கிறது. ஆம் உண்மையில் மிகச் சரக்கு உள்ள மனிதன் தான்.
அவனை நான் எப்பொழுது பார்த்தேன் என்று சரியாக என் நினைவில் இல்லை. ஆனால் ஒரு முழு நண்பனாக நான் பார்த்தது என் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான். அவன் ஒரு அறிவு ஜீவி. அது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை.
நானும் அவனும் பழக ஆரம்பித்தது பெருந்துறையில் தான். வாழ்க்கையில் அவனும் நானும் கற்றுக் கொண்ட பாடம் மிகப்பெரியது அந்த பெருந்துறையில் வாழ்ந்த காலத்தில் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வருட வாழ்க்கை தான். ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய என்று சொன்னால் தவறு. கற்க வேண்டிய பாடம் என்று செல்லலாம். எத்தனையோ சந்தோசம், துயரம் அந்த காலத்தில். என்னை மட்டுமே சார்ந்து வந்தவன் அவன். என்னோடு நடந்தவன் அவன். என்னோடு உறங்கியவன் அவன். என்னோடு உண்டவன் அவன். 

எத்தனையோ இரவில் இருவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

ஒரு நாள் பயங்கரமான காய்ச்சல் அவனுக்கு. கையில் பணம் இல்லை. என்ன செய்வது?  அவன் அன்று கிடந்த நிலைமையை பார்த்து என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தி விட்டேன். இப்பொழுது இந்த கனம், இந்த வார்த்தை எழுதும் போது கூட கண்ணில் கண்ணீர் கோர்த்து இருக்கிறது. என் நெஞ்சில் தீரா சுமை அந்த நாள் மட்டுமே.

நான் அன்று உணர்ந்தது என்னை மட்டும் இல்லாமல் உன்னையும் கஷ்டப்படுத்திவிட்டனோ? என்று தான்.
எத்தனையோ முறை எண்ணிப் பார்த்து வேதனை கொண்டு இருக்கிறேன். வாழ்வில் பிற்பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவு அறிவு இல்லை அப்பொழுது எனக்கு.

இன்று இருவரும் சென்னைக்கு நகர்ந்து விட்டோம். சென்னையில் அவனுக்கு எத்தனையோ முகம் தெரிந்த, தெரியாத நண்பர்கள். ஆனால் சென்னையில் அவன் மட்டும் தான் எனக்கு நண்பன்.

நான் புத்தகம் வாசிக்க கற்றுக் கொண்டது அவனிடம் இருந்து தான். எண்ணற்ற புத்தகங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறான். முந்நாளில் நான் ஒரு கவிதை எழுதினால் முதலில் வாசிப்பவன் அவனாக தான் இருப்பான். இந்நாளில் நானே கூச்சம் கொள்கிறேன். என் கவிதையை அவனிடம் காட்டிக்கொள்ள. காரணம் ஒன்று இருக்கிறது. இன்று அவன் என்னைவிட கவிதை எழுதுவதில் சிறந்தவனாக ஆகிப் போனதால்.
அவன் எழுதிய கவிதைகளை வாசித்துப் பார்த்தால், நான் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளை தனம் தான்.

இந்நாளில் அவனின் கவனம் புகைப்படம் எடுப்பதிலும் இருக்கிறது. கவிதை எழுத தெரிந்தவனுக்கு புகைப்படம் எடுப்பது என்பது மிகச் சுலபம். இதில் என்னை சேர்த்துக் கொள்ள நினைக்காதீர். அவன் எடுக்கும் ஒவ்வோரு புகைப்படமும் ஒரு புதுக்கவிதை.

நான் ரசித்தது. மழை கொஞ்சம் பெய்து விட்டுச்சென்ற அந்த வளைந்த அடையார் பாலம் தான் இன்னும் என் நெஞ்சை பாடாய் படுத்துகிறது.
நானும் அவனும் முன் மாதிரி இப்பொழுது சகஜமாக பேசிக் கொள்வது என்பது மிகச் சிரமமாக உள்ளது. இன்று மெளனத்தாலே இருவரும், இருவரின் நிலைமைகளை புரிந்து கொள்கிறோம்.

ஆயிரம் நாட்களா? இல்லை அரை நூற்றாண்டு காலமா? நான் வாழ்வது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவன் வாழ வேண்டும். அவனிடம் எத்தனையோ திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது. அது அத்தனையும் ஒரு நாள் இந்த உலகிற்கு தெரிய வரும். அது வரை நான் பொறுமையாக தான் இருப்பேன். என் ஆழ் மனதின் ஒரு சிந்தனை. ஒரு நம்பிக்கை. அவன் நிச்சயமாக ஒரு நாள் வெற்றி பெறுவான்.

என்னை அவன் நண்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது அவன் சொல்லும் வாசகம் இது தான்" என் அண்ணன், என் நண்பன், என் க்ளாஸ் மேட், எல்லாம் இவன் தான்"

இதுவரை நான் அவனுக்கு எதுவும் செய்தது இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் துயரம் கண்டு,கொண்டு இருக்கலாம். நான் இந்நாள் வரை துயரம் கொண்டதில்லை அவனால்.
அவனைப் பற்றி கவிதை ஒன்று எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அவனைப் பற்றி எழுதும் அளவிற்கு நான் இன்னும் கவிதையில் தேரவில்லை.

நிச்சயம் ஒரு நாள் எழுதுவேன் அவனை பற்றி ஒரு கவிதை. அதற்கான புத்தகங்களை படித்துவிட்டு.

இது என் அன்பு தம்பி கருப்பையா விற்கு புது வருட சமர்ப்பணம்.

-Sun Muga-
31-12-2013 02.00 AM

December 29, 2013

Surendhar

அழகிய முகம்,
நான் நன்கு
பழகிய குணம்.

பிறந்ததும் ஜனவரி 1
என்னைச் சார்ந்த ஜனங்களிலும்
இவன் தான் 1
.

அரியனவை தெரிந்து கொள்.
உன்னை அறிவை நீ
உண்ர்ந்து கொள்
என்று இவன் எனக்கு
சொல்லாமல் சொல்லி
கொடுத்த நண்பன்.

கல்லூரியில் முதல் நண்பன்.
வகுப்பின் முதல் இடமும்
இவன் தான்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
முதல்வன் தகுதியை
இழந்தவன் என்று அவனே
பெருமையாக சொல்லிக்
கொள்ளும் குணம்
கொண்டவன்.

இவன் யார்? என்று
கல்லூரியில் யாருமே
கேட்பதில்லை.

கணினியை காதலித்தாலும்
கைப்பேசியை கைவிரல்
பிடித்துக் கொள்கிறான்.

எதிலும் இளமை கூடி இருக்கும்
என்பது இவன் தனித்திறமை.

வாழ்க்கையில் பல
சோதனைகளை கடந்தவன்
இந்த இளம் வயதில்.

கடந்த நாட்களையும்,
கடந்து வந்த நாட்களையும்,
அவ்வப்போது எண்ணி
கண்ணீர் விடுவான்.

தாயின் கையினால்
உருண்டை சோறு
ஒன்றாக உண்டு
மகிழ்ந்து இருக்கிறோம்.

பெருகிப் போன அன்பு
மிகப்பெரிய போன
பண்புகள் என இவனுள்
ஆயிரம்.

ஒன்றாக உறங்கி
இருக்கிறோம்.
ஒன்றாக விளையாடி
இருக்கிறோம்.
ஒன்றாக படித்து
இருக்கிறோம்.

அது அத்தனையும் இன்று
நினைத்துப் பார்த்தால்
நினைவின் ஒரு பகுதியில்
சாரல் வீசுகிறது.

என்னை எனக்கே பல
முறை அறிமுகம் செய்து
என்னையும் நண்பனாக
ஏற்றுக் கொண்டவன்...

-Sun Muga-
29-12-2013

December 28, 2013

மழை

கள்வா!
அடைமழையில் உன்னை
அனைத்துக் கொள்ள
வேண்டும்;
குடைக்குள்
உன்னோடு குளிர்
காய வேண்டும்
குடையோ
மழையில் குளிக்க
என் இடையோ
உன் முத்தத்தில்
தவிக்க;
நீ
மூடி மறைத்தாய்
உன் பொன் இதழையும்;
மழை குறைய குறைய,
ஏனோ என் முத்தம்
பெருகுகிறது...
என் முத்த மழைக்கு
உன் இதழ் மட்டும்
போதுமா? என்ன
வண்ண குடையாக...
-Sun Muga-

December 26, 2013

தனிமை

முன்னுரை;

இதை படித்துப் பார்ப்பதும்,
பார்த்துப் படிப்பதும்
உன் திறமை.

என் காதலோடு
நீயும் இருப்பாய்,
நம் அன்னையும்  இருப்பாள்.

அதிகாலை சூரியன்
போல வாழ்க்கையில்
தினம் எழுந்தாலும்,
நன்பகல் வெயிலில்
வண்ணப் பூ போல
போரிட வேண்டியுள்ளது
இந்த தனிமைக்
காலத்தில்.

தனிமையைப் பற்றி ஒரு சில வரிகள்;

கார்மேகமும் சூழவில்லை,
கதிரவனும் சாயவில்லை,
குளிர்க் காற்றும் வீசவில்லை,
மண்வாசனையும் எழவில்லை,
ஆனாலும் மழை பொழிகிறது -
ஆம் என்னவளின் கண்ணில்
கண்ணீர் மழை!!!

இவள் இமையென்ன
கார்மேகமோ??
மூடும் போது வெளிச்சம்
மங்கும் விழியென்ன
கதிரவனோ??
மூச்சுக் காற்றும் முடிவு
தெரியாமல் திணறுகிறதோ??
முகத்தை மூடியபடி
ஒரு கண்ணீரும்
வழிகிறதோ??

ஈரக் காற்று சுழற்றி
அடிக்கும் இந்நேரம் கூட
ஒர் இன்னல் தனிமையை
எண்ணி!!!

இன்று தயங்காமல் இவளுக்கு
தோள் கொடுப்பது
இந்த கண்ணீர் துளிகள்
மட்டும் தான்.

விதி என்று எண்ணுவதா?
தனிமையை எண்ணி
வேதனை கொள்வதா?
வேதனை தரும் செயலால்
கோபம் கொள்வதா?
கோபத்தால் என்னையே
நான் வருத்திக் கொள்வதா?

வருத்தம்; வாடிக் கிடந்தேன்;
நித்தம் உன்னை  தேடிக்கிடந்தேன்;
நிம்மதி இழந்தேன்;
நிறைகுடம் சுமந்தேன்;
அதிகாலையில் எழுந்தேன்;
சப்பென சமையல் செய்தேன்;
உன்னை மனதில் சுமந்து
உண்ண முயற்சித்தேன்;
முடிவில் கண்ணீரும்
சிந்தினேன்.

நானும் எழுவேன்;
நாளும் உன்னை தொழுவேன்;
விழிமூடி உன்னை தொடுவேன்;
என் துணை எந்நாளும்
நீ என்பேன்.
நானாக பிறக்கவில்லை;
இன்று நாளும் பிறக்கிறேன்
உன் குழந்தையாக;
உன் மடியை தேடவில்லை;
நீ அமர்ந்த படியில்
அமர்ந்து கொள்கிறேன்!!

அதிகாலை சூரியனே வா!
என்னை அனைத்து கொள்!!
உன் கரத்தில் இணைத்து கொள்;
உன் தோளில் என்னை
சாய்த்துக் கொள்;
காத்திருக்கும் இந்த பூவை
உன் பொன் சிரிப்பால்
ஏற்றுக் கொள்;
கருவிழி பார்வையில் என்னை
கண் கலங்காமல் பார்த்துக் கொள்;
கண்ணீரும் நான் சிந்தினால்
தயங்காமல் என்னை மன்னித்துக் கொள்;

இரவே!! உனக்கு இரக்கம்
இல்லையோ?
நெடுநேரம் உறக்கம் இல்லாமல்
உன்னோடு தனிமையில் இருக்க நினைக்கிறாயோ??

என் இதயம் இருக்கிறது.
எனக்காக துடிக்க;
என்னோடு தனிமையில் பயனிக்க;

இரவே!! நீயும் வருத்தம் கொள்வாய்;
அவன் என்னை அனைத்து கொள்வான்;
ஐம்புலனால் சேர்த்துக் கொள்வான்;

இறுதியில் தனிமையையும்
இரவாகிய உன்னையும்
கொல்வான்.

கொலைகாரனும் இல்லை;
கொடியவனும் இல்லை;
என் இதயத்தை
வென்றவனும் இல்லை;
வேதனைகளை பல நான்
சுமந்தாலும் என் அருகே
எனக்கும் தெரியாமல்
நிற்பவன் அவன்;

என்னைவிட என்னை
அதிகம் ரசித்தவன் இவன்;
இயல்பான வாழ்க்கையில்
இன்னும் உயிர் வாழும்
ஒரு சராசரி மனிதன் தான் இவன்.

காத்திருக்கிறான்;
கண்விழித்தபடி;
கைகள் இரண்டையும்
கட்டியபடி;
சூரியனை பார்த்தபடி;
என்று? கண் மூடுவோம் என்று!!

-Sun Muga-
26-12-2013 23.37 PM

December 19, 2013

காதலே!!

அழகே என்று உன்னை
வர்னித்தால் நீ
கோபம் கொள்வாய்!!
அழகே என்று உன்னை
பற்றி வர்னிக்காமல்
நான் கவிதை எழுதினால்
அது கவிதையே இல்லை.
என்ன செய்வது?
தோழியே! என்றால் அது தான்
மிகப்பெரிய தொல்லை,
உயிரே! என்றால் நீ உயிரையே
விட்டுவிடுவாய்!!
கவிதையே! என்றால் நீ
என்னை காதலித்தும்
விடுவாய்!!
இதயமே! என்றால் இதழால்
பொழிவாய்!!
மொழியே! என்றால் மொய்த்து
விடுவாய்!!
முத்தமே!! என்றால் அய்யோ!!
மொத்தம் போச்சு!!
இப்ப நான் எப்படி தான்
உன்னைப் பற்றி கவிதை
எழுதுவது??
-Sun Muga-

December 8, 2013

நம் கவிதைகள்

1. உன் தாயின் கருவறையில்
    இருந்து பிறந்த நீயோ -
    உன் அன்பின் கருவறையில்
    அடைத்து விட்டாய் என்னை
     மட்டும்.

2. நிகழ்வுகளை மறந்து உன் தாயின்
    மடியில் தவழ்ந்த நீயோ -
    இன்று தவிக்கிறாய் என் மடி
    இல்லாமல்..

3. இரவிலும் சூரியனை ரசிக்க
    எண்ணுகிறது என் விழிகள்.

4. ராத்திரி தூக்கம் துளையவில்லை
    என் உயிரே; தேடுகிறது
    நம் காதல் இனையும் நாளை.

5. எங்கும் நான் ரசிப்பது குளியல் அறை
     உன்னோடு மட்டும் இருப்பதால்.

6. உன்னோடு இருக்கும் போது
    என் உயிர் பிரிய வேண்டும்
    என்பதால் என் உயிரையும்
    கையில் பிடித்து அலைகிறேன்.

7. நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
   நீ முத்தமிட்ட சுத்தமான காற்று
   அதனால் என்னவோ
  இன்று வரை உயிர் வாழ்கிறேன்.

கடற்கரை

கரையில் நின்றபடி
நான் பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.

என் முதுகை தட்டியபடி
என்னை அழைத்தாய்
நீ என்ன? என்று.
புன்னகை புரிந்தபடி
ஒன்றும் இல்லை என்றேன்.

கரையில் அமர்ந்து
இருவரும் பேசினோம்.
மென்மையான உன் விழிகளில்
எத்தனை அழகு!!

கடலுக்குள் இருக்கும்
முத்தை நான் பார்த்தது
இல்லை.
ஆனால் உன்னில்
இருக்கும் முகத்தையும்
அகத்தையும் எத்தனை
முறை பார்த்தாலும்
அழகு தான்!

அறிவுரைகள் பல சொன்னாய்
நீ!!
அது அத்தனையும் கரைந்து
கொண்டே இருந்தது.

என் பார்வைகள்
மெல்ல மெல்ல கூட
உன்னில் இருந்து
பேச்சுக்கள் குறைந்து
கொண்டே போக,
மெளனத்தில் கலந்தது
நம் காதல் அந்த கரையில்.

காற்று மெல்ல தீண்ட
மேனியெங்கும் ஒரு
சிலுசிலுர்ப்பு.

காதுகளுக்கு மேலே மூடியை
மெல்ல வருடியபடி என்னை
நீ பார்க்க;
புதிதாய் நான் உன்னை
பார்க்க;
கிளம்பலமா? என்றாய் நீ.

நான் மறுபடியும் கரையில்
எழுந்து நின்றபடி கடலை
பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.

-Sun Muga-
08-12-2013 19.00 PM

December 6, 2013

மல்லிகை

கவிதை
என்னிடம் நீ கேட்டாய்;
உன்னோடு நான்
இருக்கும்போது
நீயே ஒரு கவிதை.
கவிதையின்
முதல் வரி உன்
முகம்.
என் முகமும், அகமும்
மெருகு ஏறிட எத்தனை
இதமான வரிகளடி
உன் இதழ் ரேகையில்.
உன்னில் இருப்பது
மெய் தானே?
ஆனால் என்னில்
மேய்வது எத்தகைய
மோகம் தனை.
பெண் என்ற உன்
பிறப்பால்
என்னில் இருந்து
பிரித்து விட்டாய்
நான் முதலில்
பார்த்த என்னை.
எத்தனை நேரம் கணக்கில்லை
எழுதிக் கொள்ள
காகிதம் இல்லை
காரணம் அறியா
ஒரு தவிப்பு!!
தரையை தொட்ட
கண்ணீரில் என்று
பூக்கும் இந்த காதல் பூ!
பூத்த மலரே!! வாட
நினைத்ததில்லை,
வாழ வழியையும்
ஏற்க கூடியது இல்லை.
வானம் தொட்ட காதல்
பார்வையில் பரிதவிக்கும்
மனதால் ஒரு சேர
ஏங்கித் தவிக்கும்.
வட்ட வட்டமாய் வாரி
வழங்கிய கனவுகளை
என் படுக்கை அறை
என்று உன்னோடு
கலக்கும்.
வாடாத மல்லிகையே!
நீ சூடாமல் என்னில்
பதிந்தால்,
நானே மல்லிகைப்
போல் தான் மனப்பேன்.
மல்லிகை பூ என்றால்
சிரிப்பதோ!! உன் மனம்
ரசிப்பதோ!! என் இதழ்..
-SunMuga-
06-12-2013 22.51 PM

சிங்கத்தின் குகை - ஒரு நாள்

அவன் தனிமையில் அந்த தெரு முனைக் கடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் புகைபிடித்த படி தன் கண்ணாடி வழியாக தன் காலிற்க்கு கீழே தெரியும் தரையை உற்று நோக்கி யோசித்து கொண்டு இருந்தான். அநேகமாக அடுத்து என்ன வேலை என்று கூட எண்ணிக் கொண்டு இருக்கலாம். புகை கூட கூட கையில் இருக்கும் சிகரெட் துண்டு எரிந்து தன் உடலை சுருக்கிக் கொண்டே இருந்தது. அவன் சிகரெட் துண்டில் இருந்து பிறந்த புகை மூட்டம் கூட கூட மேக மூட்டம் போல காட்சியளிக்க, மழை வந்துவிடுமோ? என்று எண்ணிய படி, தன் காலில் போட்டு நசுக்கியபடி, ஒரு சில நேரம் எச்சில் முழுங்கியபடி கிளம்பினான். எங்கே போகிறோம் என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக தன் வேலை செய்யும் இடத்திற்கு வந்தடைந்தான்.

"தும் க்யா கர் ரஹீ ஹோ?

என்று அவன் கேட்டான்.

"சார், நல் மேம் பானீ நஹீம் ஆதா."
என்றான் அந்த ஹிந்தி கார வேலை ஆள்.

"தோ கியா? பால்டீ மேம் பானீ ரக்கா ஹை".

என்றபடி வேலையாட்களை, வேலை எய்தபடி எண்ணிக் கொண்டு இருந்தான். இன்று தான் அந்த ஆங்கிலப் படம் வெளியாகிறதோ என்று. ஆம் அந்தப் படத்தின் பெயர் " Small Tiger". போக வேண்டும் என்ற எண்ணங்களும், விருப்பங்களும் இல்லை. ஆனாலும் ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது. ஈவினிங் சோவிற்க்கு டிக்கெட் இருக்கிறதா? என்று மதியம் 3 மணி அளவில் தியேட்டர் பக்கம் போனான் அவன். அந்த இனிய நாளின் ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு மிகச் சிறப்பாக கிடைத்தது. அது தான் அந்தப்படத்தின் லட்சுமிகரமான அந்த நடிகை அங்கே வந்திருப்பதை, பாரதி Style - ல சொல்லனும் -னா " இன்பத் தேன் வந்து பாயுதே காதினிலே" என்று அவன் அறிந்தான். அரை குறை மனது இல்லை இப்போது. மிக திடமான, திண்மமான ஒரு மனிதனாக அவன் உள்ளே சென்றான்.

அவளையும் பார்த்துவிட்டு, படம் பார்க்க ஆரம்பித்தான் அவன்.

"Small Tiger" படத்தின் ஓட்டம், நமது சிங்கத்தின் கர்ஜனையில், இன்னும் சொல்லப் போனால், வெறிகொண்டு, இன்னும் சொல்லப் போனால், வெகு கொண்டு, இன்னும் சொல்லப் போனால், கோபத்தில் பொங்கி எழுந்து, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவனிடமே டிக்கெட்டை கிழித்து எறிந்து கிளம்பியது தான் அன்றைய சிறப்பு அம்சம்.

வெளியேறிய அவன் மனம் வருந்தவில்லை, போனில் பைசாவும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் இருக்கின்ற பைசா காலியாகும் வரை, அதாவது நாயகன் பானியில் " நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா" எதுவும்மே தப்பு இல்லை போன் செய்து புலம்பி தீர்த்த  அருமையான அந்த ஒரு நாள். சிங்கத்தின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்.

-SunMuga-
06-12-2013 22.33 PM

December 3, 2013

சோழ பரம்பரையில் ஒரு MLA

என்ன டா இது தலைப்புன்னு யோசிக்கிறேங்களா? இது என் கூட வேலை பார்க்கிற Mr. நாகராஜன் பற்றிய ஒரு அனுபவ பதிவு. அவரை பற்றி எழுதுவதற்கு எனக்கு முழுத் தகுதி இருக்குன்னு நம்புகிறேன். இவர் ஒரு கட்டட கலை நிபுணர். ஆனாலும் கண்ணாடி இல்லாம எந்த ஒரு வேலையும் செய்யமாட்டார். இவர் தகுதிக்கு தாஜ்மஹால் தரம் எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ண கூப்ட அப்ப கூட என்னோட நண்பர்கள் தான் முக்கியம்ன்னு இங்க எங்களோட குப்பை கொட்டுறாரு. மிக திறமையான ஒரு கலைஞர். வேலைன்னு யார் சொன்னாலும் எந்த கம்பெனி, என்ன வேலைன்னு கூட கேட்காமல் இண்டர்வியூ அட்டன் பண்ணுவார். வழக்கம்போல ஒரு பல்பூம் வாங்கிட்டு போய்விடுவார். இப்ப தான் கொஞ்சம் படிக்க ட்ரை பன்னுறாரு. நீங்க நினைக்கலாம் என்ன டா? இவ்வளவு வயசுக்கு அப்புறம் அப்படின்னு. படிப்புக்கு எப்பவுமே வயசு இல்லை அப்படின்னு இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு தத்துவத்தை எடுத்து சொல்லத் தான் இந்த முடிவுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

நான் இப்போது எல்லாம் எந்தவொரு படம் பார்க்க முடிவு செய்யும் முன் இவரிடம் தான் படத்தோட ரிசல்ட் எப்படின்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இவர் நல்லா இல்லன்னு சொல்ற படத்தை மிஸ் பண்ணவே மாட்டேன்.

இவரோட திறமைக்கு எங்க ஊர்ல  MLA போஸ்ட் க்கு கூட இவர் நிக்கலாம். ஆனால் ஊரோட நன்மைக்காக இப்போதைக்கு வேண்டாம்ன்னு எங்க சங்கம் முடிவு பன்னிருக்கு.

-SunMuga-
03-12-2013 22.14 PM

December 2, 2013

PKN Hr. Sec. School -Tirumangalam

முதல் முறை என் பெற்றோரை விட்டு 10 நாள் Camp சென்றேன். நான் அப்பொழுது 8ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மிகக் கொடிய நாட்களாக என்னும் நாட்களில் இந்த 10 நாளுக்கும் இடம் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அவ்வளவு தூரம் விவரம் இல்லை என்றே இப்போது நினைத்தால் தோன்றுகிறது. நான் அந்த Campல் இருக்கும் போது எத்தனை விசயங்கள் நான் கண்டேன். நான் நண்பனாக நினைத்து பழகியவன் சற்று என்னை விட்டு பிரிந்து போனதாக நினைவு. அந்த Camp தான் நானும் அவனும் இறுதியாக சந்தித்தது, இது நாள் வரை அவன் என் கண்களில் படவில்லை. இன்னுமொரு கொடுமையான சம்பவம் அந்த நாட்களில் தான் நடைபெற்றது. ஆம் என் அண்ணனுக்கு விபத்து நேரிட்டது. ஓரமாக ரோட்டில் நடந்து சென்றவனை ஒரு வேன் காரன் அடித்துவிட்டு போய்விட்டான். என் அண்ணனுக்கு அப்பொழுது தலையில் காயம். இது எனக்கு நான் Campல் இருக்கும் வரை தெரியாது. என் பெற்றோர் அப்பொழுது கண்ட, பெற்ற துயரம் எண்ணில் அடங்காதவை. என் நினைவை விட்டு நீங்க மறுக்கும் சம்பவம் அது. நான் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று. ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் அந்த சிரத்தையை அனுபவித்து இருப்பார்கள் என்று எண்ணி எண்ணி வருத்தம் தான் மிஞ்சியது. நான் அன்று தான் வீட்டிற்கு வந்தேன் Camp முடித்து. யாரும் என்னிடம் அவ்வளவு சகஜமாக பேசிக் கொள்ளவில்லை. யாரோ ஒருவர் வந்து இப்ப எப்படி இருக்கான் அப்படின்னு என் அம்மாவிடம் கேட்டதாக நினைவு. "ம்ம்ம்" இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்படி அம்மா சொன்னதும் தான் கேட்டேன். என்ன ஆச்சுன்னு.. அப்பொழுது தான் என்னிடம் காட்டினார்கள் ஸ்கேன் , பேப்பர் நியூஸ் எல்லாம். ஒரு நிமிடம் என்ன சொல்ல, செய்வதென்றே தெரியாமல் படித்து பார்த்தேன் அந்த பேப்பர் நியூஸை. மறுநொடி அமைதியாக இப்ப எப்படி இருக்கு என்று என் அண்ணனின் தலையின் பின்புறம் பார்த்தேன். பரவாயில்லை என்று என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான் அவன். நான் ஏன் அந்த Camp கிற்கு சென்றிருக்க வேண்டும். இப்பொழுதும் அந்த School லை கடந்த செல்லும்போது ஒரு கசப்பான சம்பவம் கண்ணுக்குள் கசிந்து கொண்டே இருக்கிறது.
-SunMuga-
02-12-2013 23.01 PM

December 1, 2013

அவனும்-பெண்ணும்

அவன் தன் வீட்டில் ஒழிந்து கொண்டு இருந்தான். அவன் பெண் குழந்தை தேடுகிறாள். அப்பா!! எங்கப்பா இருக்க. அப்பா! என்றபடி கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்க்கிறாள். அப்பா! என்றபடி கதவின் இடுக்கில் தேடுகிறாள்! அப்பா என்றபடி சமையல் அறையில் தேடுகிறாள். அப்பா! என்றபடி அம்மா!! அப்பாவ எங்கமா? என்று கேட்கிறாள். நீயே கண்டுபிடிடா செல்லம்!! என்றாள் அவள். அம்மா!! நான் ரெம்ப சின்ன பொண்ணுமா நீயே சொல்லி கொடு என்றாள். அதெல்லாம் சொல்ல முடியாது, நீ தான் கண்டுபிடிக்கனும் என்றாள் அவள். மறுபடியும் அப்பா!! நீ எங்க தான் இருக்க... என்றபடி உரக்க கத்தினாள். ப்ளீஸ்-பா குட்டி பாவம்-பா வா!! என்றாள். அவன் சிரித்தபடி அந்த புளு கலர் பிரிட்ஜ் க்கு பின்னால் இருந்து வெளியே வந்தான். அந்த பெண் இப்பொழுது சிரித்தபடி எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா!! என்றதும் அவளின் அம்மா குலுங்க குலுங்க சிரித்தாள்...

-SunMuga-
01-12-2013 21.33 PM

அரக்கோணம்

அரக்கோணம் நான் வேலை நிமித்தமாக அங்கே வாழ வேண்டிய சூழ்நிலை. சுதந்திரம் நிறைந்த ஒரு அறை. அறையில் அற்புதமான நண்பர்கள். மிக அமைதியான ஒரு வாழ்க்கை. காலை 7.30க்கு எழுந்தாலும் போதும் வேலைக்கு போக. இப்படியே 4 வருடம் கழிந்துவிட்டது. எனக்கு அங்கு கிடைத்த நண்பர்களில் வேலு மிக முக்கியமான ஒரு நண்பன். நண்பன் என்றால் ஒரு சுயநலம் இல்லாத என்று அர்த்தம். அந்த விதத்தில் அவனும் எந்தவொரு சுயநலத்தோடு யாரோடும் பழகி நான் கண்டதில்லை. நல்ல நண்பன். அவனால் இதுநாள் வரை எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் என்றாவது கஷ்டப்பட்டு இருப்பான். ஆனால் நான் பட்டதில்லை. உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவும் மனப்பான்மை கொண்டவன். வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவன். எனக்கு பிடித்த படங்கள் பெரும்பாலும் அவனும் ரசித்து பார்த்து இருப்பான். நான் அவனோடு பார்த்த படங்களிலேயே மிக ரசித்து பார்த்த படம் என்றால் அது 3 மட்டுமே. அரக்கோணத்தில் அவனும் ஒரு நல்ல நண்பன்.
-SunMuga-
01-12-2013 21.42 PM

November 30, 2013

நான் தேடும் புத்தகம்

என் வாழ்நாளில் நான் தேடும் புத்தகம் அது. அது எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, அதன் முழுக்கொள்கை தான் என்ன? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதனின் உருவகமும், உருவாக்கமும், உரைநடையும் எனக்கு நன்றாக தெரியும். அட்டை படத்தில் இதயம் ரத்த கோளத்தில் அன்பு என்ற அம்பால் தொங்கி கொண்டு இருக்கும். ஆம் அதிக காதல் நயத்துடன், அவளின் நளினம் மின்ன ஆரம்பிக்கும், அந்த புத்தகத்தின் முதல் பகுதி. பெண்ணே! புண்ணியம் நான் செய்தவனா? இல்லை நம் உயிர் செய்ததா? நீ அன்னையாக என்று ஆரம்பித்த கவிதையும் இடம் பெற்றிருக்கும். கண்ணீர் இருக்கும். காதலும் இருக்கும். ஊடலும் இருக்கும். தேடலும் இருக்கும். என்னை தேடி வரவில்லை காதல், உன்னை தொட வந்துவிட்டது என் காதல் என்ற தோரணையும் இதில் இருக்கும். வரியாக நண்பனின் முகம் இருக்கும். என் நாடித் துடிப்பை துடிக்க வைத்த சோகமும் இருக்கும். என் தாய், தந்தையைப் பற்றி இருக்கும். அதன் முன்னுரை என் காதலியால் கவிதையாக எழுதப்பட்டு இருக்கும்.
இது நான் என்றாவது ஒரு நாள் எழுத துடிக்கும் புத்தகம் தான்.
-Sun Muga-
30-11-2013 22.34 PM

மோகனா தியேட்டர்

அவன் படிக்கும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மிக பிரபலமான தியேட்டர் தான் மோகனா தியேட்டர். பிட்டு படத்திற்கு என்று தனியாக ஒரு தியேட்டர் அது தான். எத்தனை வித விதமான படங்கள் நித்தம். அவனும் கேள்வி பட்டு இருக்கிறான், அது ஒரு விதமான தியேட்டர் என்றே! ஆனால் அவன் வயதை ஒத்த பையன்கள் அனுமதி இல்லை என்று தெரிந்து வைத்திருந்தான். அவனுக்கும் அப்போது ஆசை தான் அந்த தியேட்டர் எப்படி தான் இருக்கும் என்று பார்ப்பதற்கு. அதற்க்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டு தான் இருந்தான். அதற்கான வாய்ப்பும் வந்தது. பள்ளியில் இருந்து ஒரு மிருக படம் ஒன்றை கம்மியான விலையில் காண்பித்து காட்டினார்கள். எத்தனை மாணவர்கள் என்று தெரியவில்லை அவ்வளவு கூட்டம். அந்த படத்தின் பெயர் கூட நினைவில் இல்லை அவனுக்கு. அது வரை கேள்விப்பட்ட தியேட்டரை முதல் முதலில் கண்ட போது என்ன விதமான மனநிலை என்று அப்பொழுது தெரியவில்லை. அதற்கு அப்புறம் அவன் போன இரண்டாவது படம் Die Hard அவன் டிப்ளோமா நண்பர்களுடன் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம். ஆங்கில படத்தை ரசிக்கும் தன்மை இந்த தியேட்டர் மூலம் தான் அவனுக்கு ஊட்டப்பட்டது. இந்த இருப்பத்தி ஏழு வயது வரை அவன் பார்த்த படம் மொத்தம் இரண்டு தான் அந்த மோகனா தியேட்டரில். வாழ்க்கையில் பல இழப்புகள் அதில் இதுவும் ஒன்றே என்று சிரித்துக் கொள்ள தான் தோன்றுகிறது இன்று.
-Sun Muga-
30-11-2013 19.01 PM

ஊர்வலம்

அவன் அப்பொழுது ஜந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். மிக புத்துணர்ச்சி மிக்க சிறுவனான அவன் அன்று தான் கண்டு வியந்தான். தன் வசிக்கும் ஊர் இவ்வளவு பெரியதா? என்று. ஆம் அன்று அவன் பள்ளியில் ஊர்வலம் போவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மானவர்கள் பலர். அதில் அவனும் கலந்து கொண்டான். அது ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை. அவன் பள்ளி இருந்த
கோதண்ட ராமர் கோவில் தெருவில் கிளம்பி, காந்தி கலைமன்றம் மற்றும் காந்தி சிலை ரவுண்டானா வழியாக பஞ்சு மார்கெட்டில் முடிவடைந்த ஊர்வலம். ஏன் இந்த ஊர்வலம் என்று அவனுக்கு தெரியவில்லை. தெரியும் அளவுக்கு விவரமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் கையில் ஏதோ வாசகம் எழுதிய பலகையை ஏந்தி போனதாக இன்றும் நினைவில் இருக்கிறது. பஞ்சு மார்கெட் அடைந்ததும் அவன் நின்ற இடத்தில் இருந்து தூரமாக ஒரு மனிதன் நேரு சிலை அருகில் யார் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஒரு வேலை A A Subburaja வாக கூட இருக்கலாம். அவர் பேசுவதை அவன் கேட்கவில்லை, பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இறுதியாக அவர் புறாக்களை வானில் பறக்க விட்டார். அப்பொழுது அவன் நான் என்று இவ்வாறு சுதந்திரமாக பறக்க முடியும் என்று எண்ணிய படி வானில் பறந்த புறாவை தேடி தேடிப் பார்த்தான்.
-Sun Muga-
30-11-2013 12.31 PM

November 29, 2013

சோதனை

எத்தகைய சோதனை!!
அய்யகோ!!!
என் இறைவா!!
என் மனம் அறிந்து
இத்தகைய சோதனையோ!!
இளம் பெண்ணை
என் கண் முன்னே
வாட்டி வதைக்கிறாய்!!
அதுவும் என்னால்...
இன்று என் நிலை
அறிந்தே இப்படி
சூழ்நிலையை
அமைக்கிறாயோ!!!
இதில் உனக்கு
என்ன பயன், பலன்.
என்ன நினைக்கிறாய்
என்று நிச்சயமாக
தெரியவில்லை என்
இறைவா!!
இரவுப் பொழுது
இன்னல் பல
இடைவிடாது என்னை
துரத்தி அடிக்க
என்னால் நிச்சயம் முடியவில்லை
இறைவா !!
இந்த இறைவன் என்னால் பல பெண்களை காயப்படுத்துகிறான். இன்று ஒரு பெண்ணை எழுப்பி விட்டு எனக்கு இடம் கொடுக்கிறான் இந்த ரயில் பயணத்தில். அப்படி ஒன்றும் நான் எதையும் அந்த கடவுளுக்கு செய்யவில்லை இந்நாள் வரை. ஆனாலும் என்னை சோதித்து பார்க்கிறான்.
-Sun Muga-
30-11-2013 00.03 AM

தொடர் கதை

வழக்கம்போல இன்று சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்திருந்தான் அவன். தன் பெற்றோரை கானப் போகிறான் என்று அலுவலக நண்பர்கள் நினைத்துகொள்ள, தன் நண்பனின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் என்று அவன் பெற்றோர் நினைத்துக் கொள்ள, ஏதோ சும்மா லீவ் போட்டு வந்திருக்கிறான் என்று அவன் நண்பர்கள் நினைத்துக் கொள்ள, அவன் எதற்காக வந்து இறங்கி இருக்கிறான் என்று அவனுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.
ஆம் அவன் வழக்கம் போல அவளை கான மட்டுமே வந்து இருக்கிறான். அவள்? அவள் யார்?  அவள் என்றால் அவனுக்கு தனி விருப்பம். இன்னும் சொல்லப் போனால்
அவள் அவனுக்கான ஒரு தனி உலகம். அவள் மென்மையானவள். அழகானவள். அறிவுள்ளவள். அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஆனால் அவளுக்கு அது தெரியாது. அவனால் இது வரை சொல்லக் கூடிய தைரியம் இல்லை. அதை விட அவனுக்கு சொல்லுவதற்க்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
இன்று அவளை கான தான் காத்திருக்கிறான். அதாவது ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் போது அவளை அவளுக்கு தெரியாமல் பார்ப்பது, அவள் வேலை முடிந்து வரும் போது, அவனுக்கு ஒரு வாடிக்கையான ஒன்று. இதில் அவன் அவளை ஏவு பார்க்கிறான் என்று நீங்கள் என்ன வேண்டாம். அவனுக்கு தெரிந்த வரை அது தான் காதல்.  அவளிடம் அவனுக்கு பேசுவதற்கான சூழ்நிலைகள் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. அதனால் தான் பார்க்கவாது முடிகிறதே என்று எண்ணி சந்தோஷம் பட்டுக் கொண்டான். ஒரு முறை கூட தவறியதில்லை. அவளை காணமல் அவனால் இருக்க முடிந்ததாக தெரியவில்லை.
ஒவ்வொரு முறை அவன் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒவ்வொரு காரணம். அதாவது நண்பனை பார்க்க போறேன் அம்மா!! கடைக்கு போய் விட்டு வருகிறேன் அப்பா!! வெளியே போய் விட்டு வருகிறேன் அக்கா! என்று. இன்று ATM போய்  விட்டு வருகிறேன் என்று. இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது மிக பெரிய வேலை.
ஒரு நாள் அவள் கீரின் கலர் சுடிதார் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். என்ன ஒரு அழகு அவள் உடுத்திய பின் அந்த உடை கூட.
இன்றும் அவன் காத்திருந்தான், மணி சரியாக 6.05 அவள் வரவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தபடி அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை அவளுக்கு இன்று நிச்சியதார்த்தம் என்று..
அவன் மறுமுறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி கிளம்பிசென்றான் சென்னைக்கு..
-Sun Muga -
29-11-2013 22.35 PM

November 28, 2013

மடிக்கணினி

கணினியே என் கண்ணில்
நீ இத்தனை நாள் இவ்வளவு
அழகாக தெரியவில்லையே!!
இன்று மட்டும் எப்படி
இவ்வளவு அழகு!!!

ஒரு ஆணை கண்டு
இன்னொரு ஆண்
பொறாமை படும் உணர்வு!!

ஒரு கன்னி பெண்
Control இல்லாமல்
எத்தனை முறை
உன்னை
தொட்டு தொட்டுப்
பார்க்கிறாள்.

அவ்வளவு மென்மையா நீ!!
மெய் மறந்து நீ
உணர்வதை
எப்பொழுது உணர்வாளோ
இந்த கன்னி பெண்!!

-Sun Muga-
28-11-2013 20.09 PM

November 26, 2013

Love Story

I want to tell you one beautiful love story my dear. I don't know I have rights to call you as my dear. But surely I don't have any other suitable word. He is a silent man and moreover he is not beautiful man also. He loves a girl who was studied with him. I think still he feel the heart beat. Every heart beat told one new love story.

Now I want to share one heart beat. One day he tries to express his love. Suddenly he got only failure due to  he saw the beautiful eyes. Did you think eyes are most powerful parts in our body? I am sure. It’s the main tool to beat any things. Second day he well tries to express his love. His bad luck he saw the lip moments of the girl. On that time he doesn’t have any reaction from his body. Third time he get a good luck. Because girl running to pick up the bus. As usual you know he saw what kind of moment? Now you may calculate one day as one year.

Now he is in fourth day. Today he had the new ideas to express his love. That is nothing but old fashion of our culture. Yes, he wants to write a love letter directly to his lovable girl. 

Letter quote is: 

"Hi my dear angel. Today you are so beautiful. I want to tell you one thing, which one is I trying to tell you last four days. May be I will get good and deep sleep after finishing this letter. This is not a normal letter. It helps to improve or increase our love. Love is so beautiful. Now only I feel it and like it. Just you can also try to feel it. At same time I do not want to compel you. If you feel the love just give me one kiss through this letter and in lips in later.  Bye!! My dear..."

She was laughed after reading this letter. Because she like and read again and again last line of the letter. It’s only reminding that boy.


Now she is in the fifth day. Both are meeting in the shopping complex. She ask that boy, why you are loved me. Simply he answers the question without fear, for marriage only.

-Sun Muga-
27-11-2013 00.03 AM

November 25, 2013

Normal Man

He is a normal man. He is very beautiful man both body and body language. I know he is only leads their entire mind, who are lived nearby him. At the same time I got a more useful knowledge and more creative ideas from him only. Now a day’s also I cleared all my queries related to anyone from him also. Moreover he did some good job which one helps his friends to keep him in their mind. 

For example:  

One day we went to one restaurant. I am not sure; its name was Banu hotel in Virudhunagar. We get a launch and juice. As usual he pays the major portion of the bill. Other friends were shared their contribution but it’s not enough. We need money to settle the bill. Suddenly we request and get the money from one important personality. He is now not in the friends list. But it’s my duty to remember that good and respectable person.  At the end of the bill settlement we have the money only for bus fare. Suddenly he gives the tips as Rs.20. We unexpected this action. Normally we Pay Rs.10 only as tips to the server. But he pays Rs. 20 at this crucial period. We are all joked and leaved from that place. We must watch this kind human behavior. 
Always he looks like a separate man both happy and sad moods. He saw the very big dangerous situation in his life history. He dropped more valuable tears from his eyes in home. I feel all those thinks from here only. At this age he got so much of painful incident. We pray God it’s not repeat in his life again. I don't know why it’s happened but we know he will get all the happy in future.
He is my best friend Surely Suren Only.

-Sun Muga-
25-11-2013 22.28 PM

November 24, 2013

அழகே!!

நீயும் நானும் பேசிக்
கொள்ள விஷயங்கள்
அதிகம் இருக்கிறது,
அதில் விஷேசம் ஏதும்
இருக்காது என்று
நம் இருவருக்கும்
தெரியும்.
தெரியாமல் இல்லை,
தெரியவும் இல்லை,
ஏன் இந்த குறும்பு
என்று.
உன் கேள்வியே மிகப்
பெரிய கேள்விக்குறி
எனக்கு.
இருந்தும் ஆராய
வேண்டும் உனக்காக,
உன்னோடு பேசிப்
பழக வேண்டும்,
எப்படி பேசுவது
என்பதை.
விடைகள் ஆயிரம்
அறிய வேண்டும்,
அதிலும் வித்தியாசம்
அதிகம் வேண்டும்.
அந்தி மாலையில்
உன்னோடு ஒரு
அன்ன நடை
வேண்டும்..
என் அழகே!!
-Sun Muga-
24-11-2013 22.28 PM

பெளர்ணமி

திரண்டு வந்த மேகம்
கூட மோகம் கொண்டதோ?
உன் மீது,
வெள்ளை முகம் கொண்ட
நிலாவே!
நித்தம் நீ இருந்தாலும்
இன்று போல் என்றுமே
நீ அழகில்லை போல,
உடல் சிலுசிலுர்க்க
இந்த இதமான குளிரில்
உன்னைப் பார்த்துக்
கொண்டே இருக்க
வேண்டும் போல
தோன்றுகிறது...
உன்னை அடைய
ஒரு இறக்கை
கேட்கிறேன் அந்த இறைவனிடம்...
-Sun Muga-
24-11-2013 21.53 PM

Light House

இன்று 24-11-2013 சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விலக்கம் சென்றிருந்தேன். நான் சரியாக 1 மணிக்கு தான் செல்ல முடிந்தது. ஆனால் மதியம் 1 முதல் 3 மணி வரை சாப்பாட்டு நேரம் என்பதால் உள்ளே யாரையும் அனுமதிக்கப் படவில்லை. நானும் எப்படியாவது இன்று பார்த்துவிட வேண்டும் என்று உத்தேசித்து அருகில் இருக்கும் காமராசர் சிலைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன். என்ன ஒரு விசாலமான பார்வை அந்த மனிதனுக்கு, சிலை ஆனாலும் அப்படி ஒரு கம்பீரமான தோற்றம். அவரை பற்றி கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இரண்டு இடம் பெற்றிருந்தது. அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை மட்டும் எனக்கு புரியும் படியாக இருந்தன. அமைதியாக அமர்ந்த படி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்ட விழிகள் வழியில் சென்ற பெண்ணையும் பார்த்தது. என்னிடமிருந்து சற்று தூரத்தில் அவளும் அவள் தோழியும் அமர்ந்து இருந்தார்கள். அதிகப்படியான ஒரு மேலோட்டமான பார்வை என் மீது படர்வதாகவே தெரிந்தது. நான் அவர்கள் பேசுவதை கவனிக்கும் போதே தெரிந்தது. யாரையோ கானத் தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்று. என்னைப் பார்த்து சிரித்த அந்த பெண் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள் என்றே தோன்றி மறைந்தது. சற்று நேரம் ஆன பின் உங்க போன் கொஞ்சம் வேணும் ஒரு கால் பன்ன என்றபடி என் அருகே வந்தது. நானும் என் மொபைல் போனை கையில் கொடுத்தேன். சிறிது தொலைவு சென்று போன் பேசிவிட்டு வந்த பெண். ரெம்ப நன்றி என்று உரைத்தது. நான் அப்போதும் அமைதியாக என் தலையை அசைத்தேன். சரி என்று சொல்லும்படியாக. சிறுது நேரம் கழித்து அந்த பெண் நாங்கள் கடலுக்கு போகிறோம் என்று என்னிடம் சொன்னவாரு சிரித்தாள். நான் அப்பொழுதும் அமைதியாக என் தலையை மட்டும் அசைத்தேன். இதில் நான் சொல்ல வருகின்ற கருத்து என்னவென்றால் நான் ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை. நல்லவனும் இல்லை. அந்த பெண்ணிற்கு என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றி இருக்கலாம். ஆனால் என்னால் முடியாத ஒரு காரியம். ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எனக்கு மிக சிரமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் என் கால் கைகளே நடுங்கிவிடும். இப்படி காலம் போக, திடிரென்று போலிஸ் காரர் ஒருவர், அங்கு விற்பனை செய்யும் பிளாட் பார கடை சிறுவனை கம்பால் அடித்த காட்சி என்னை ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் நெகிழ வைக்கவில்லை. ஆனால் ஒரு சிறுவன் மன வளர்ச்சி குன்றிய பையன், அவன் அப்பாவிடம், அப்பா அந்த பையனை அடிங்கிறாங்க அப்பா!!  அப்பா!! பாவம்பா!!! என்று சொன்னவுடன் அவன் அப்பா அந்த பையன் ஓடிட்டான் டா!! அப்படின்னு சொன்னவுடனே, அதுக்கு அந்த பையன் ஆனா, அழுகிறானே அப்பா!! என்று சொன்ன படி இவன் மனம் அழுவதை என் கண்ணால் நான் கண்டேன்.
கப்பலுக்கு கரையை காட்ட கூடிய இந்த கலங்கரை விலக்கத்தை கான வந்து அதை விட மிகப் பெரிய அந்த சிறு பையனின் மனதை பார்க்க முடிந்தது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். இன்றுநான் எடுத்த முடிவு சரியாக தான் இருந்திருக்கிறது அதாவது எப்படியாவது Light House பார்க்க வேண்டும் என்ற முடிவு.
-Sun Muga-
24-11-2013 18.46 PM

லெமன் சாதம்

இப்போது கூட லெமன் சாதம் சாப்பிட்டு விட்டு தான் வருகிறேன். அப்படி என்ன? அதில் ஒரு சுவை என்றால் ஒன்றும் இல்லை. நான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் போது, என் தாய் எனக்காக தயாரித்து கொடுக்கும் ஒரு சாதாரண உணவு அவ்வளவு தான். அது அவர்களுக்கு மிக எளிதாக சமைக்க கூடிய உணவு என்பதால் பெரும்பாலான நாட்கள் அது தான் உணவு. உண்ணும் போது கூட அதன் சுவை எனக்கு தெரியவில்லை என்றாலும் இன்று உணர்கிறேன் அதன் உண்ணதமான சுவையை. உயிரணு உணர்கிறது என் தாயே நீ கட்டிக் கொடுத்த லெமன் சாதத்தின் உயிரை. இன்று ஒவ்வொரு கடையிலும் நான் மட்டும் தனியாக உண்ணும்போது லெமன் சாதம் தான் சாப்பிடுகிறேன். இதில் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் என் தாய் கொடுத்த அந்த லெமன் சாதத்தின் சுவை இது வரை எந்தவொரு சிற்றுண்டியிலும் நான் கண்டதே இல்லை. ஏன் என்றால் உங்களுக்கு அறிந்த தெரிந்த விஷயம் தான் அது பாசத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை நான் உண்ணும் போது அது என் தாயின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.
-Sun Muga-
24-11-2013 17 46 PM

November 23, 2013

காதலை சொல்லிவிடவா?

இன்று நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால், என்னை கட்டி அனைத்து விடுவாயா? இல்லை கனத்த ஒலியோடு அழுதுவிடுவாயா? அது எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை உன்னை நான் காதலிக்கிறேன். "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகத்தை நான் படித்து பார்த்தேன். கிட்டத்தட்ட 1000 வருட கால சரித்திரம் அது. ஆனால் என் சோகத்தை விட அது ஒன்றும் மிக பெரியதாக தெரிவில்லை. என்ன! பாலஸ்தீனர்கள் அவர்கள் பூர்வீக இடத்தை அடைய போராடுகிறார்கள். நான் என் பூவின் இதயத்தில் ஒரு சிறு இடம் அடைய போராடுகிறேன். அவர்களுக்கு என்று ஒரு  தலைவன் இருக்கிறான். எனக்கு என்று என் காதல் மட்டுமே இருக்கிறது.
அதிகாலை சூரியன் போல தினம் எழுகிறேன். கனத்த ஏக்கத்தோடு உன் குரலை கேட்க கேட்க கற்பனையில் அப்படியே தூங்கி வழிகிறேன். கனவு எல்லாம் நீ என்று பொய் சொல்ல மாட்டேன். கனவில் நீ வர வேண்டும் என்று தான் உண்மையாக நான் தூங்க எத்தனிக்கிறேன். எதிர்பாராமல் என்றாவது ஒரு நாள் உன்னை சந்திக்க வேண்டும் அந்த கனவில். உன் கைகளை கோர்த்தபடி என்னை மன்னித்து விடு என்று கேட்க வேண்டும். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் நீ என்னை மன்னிக்க வேண்டும். என் எதிர்காலம் நீ என்று நான் எண்ணவில்லை. உனக்கு ஒரு நல்லபடியான காலம் அமைய வேண்டும் என்றே நினைக்கிறேன். அதற்க்காக தான் நானும் காத்திருக்கிறேன். இன்று என் கண் முன் தெரியும் மனிதர்கள் கூட ஏளனம் செய்கிறார்கள், எப்போது கல்யாணம் என்று? காதலின் அருமை பெருமை தெரியாமல். கண்ணீர் வருகிறது. கண்களிலே நீர் வராமல். அது எப்படி சாத்தியம் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் வருகிறது. இதோ பார்!!  அதை உள்ளங்கையில் வாங்கிய ஈரம் கைகளில். உன்னை காயப்படுத்தி என் காதலை வெளிப்படுத்த விரும்பவில்லை. விதைகளை என்றோ நான் விதைத்துவிட்டேன். அது விடியும் போது முளைக்கிறதா? இல்லை என் வாழ்க்கை முடியும் போதுமுளைக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை.  அதற்கு உரமாக என் காதலையும் தூவி விட்டேன். இன்று துயரப்படுகிறேன். தூக்கம் இல்லாமல். உன் துணை இல்லாமல். ஒரு துணிவு இல்லாமல். தூய்மையான உள்ளம் கொண்ட காதல் நீ! நீ வாழ்க! நீ வளர வேண்டும்.
நான் ஒன்றும் நல்லவன் இல்லை. என்னை நல்லவன் என்று சொல்லுவர்களும் நல்லவர்கள் இல்லை. ஏன் என்று அலசி ஆராய நேரமில்லை. ஆனாலும் நான் நல்லவன் இல்லை.
நாளை என்றோ ஒரு நாள் நீ இந்த வரிகளை நிச்சயமாக படிப்பாய் என்று எனக்கு தெரியும். மற்றவர்கள் படிப்பதற்கும் நீ படிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு இதில் உள்ள எழுத்து பிழைகள் தெரியலாம். ஆனால் உனக்கு என் வாழ்க்கையிலும், மனதிலும் ஒரு சிறு காதல் இருப்பதாகவே தெரியும்.
வெகு காலம் இருக்க விருப்பம் இல்லை என் உயிரே!! இப்பொழுது இந்தகனம் இந்த இரவே கூட முடிந்து விட்டால் நல்லது என்று தான் தோன்றுகிறது.
-Sun Muga-
24.11.2013 00.00 AM

கல்லறை

ஏதோ ஒன்று என்னை அழைக்கிறது. அதிகம் நேரம் எடுத்து கொள்ளாதே என்று உரைக்கிறது. உறக்கம் வரவில்லை. வருவதற்கு உண்டான சாத்தியமும் இல்லை. என் உறைவிடம் முழுதும் உறவினர்கள் நினைவுகள். நிம்மதி இல்லை. ஆம் நித்தம் நிம்மதியான உலகம் இல்லை. உறங்க மறுக்கும் விழிக்கும் ஏதோவொரு ஏக்கம். எண்ணில் அடங்கா ஏக்கம். கண்களில் கண்ணீரும் இல்லை. என் உடல் வெந்து எரியூட்டப்பட நாள் நெருங்கிவிட்டது. அதை தான் என் உயிரும் எதிர்ப் பார்த்து காத்திருக்கிறது.
அது, மானை வேட்டையாட காத்திருக்கும் சிங்கம் போல, மாமிசை வாடையை தேடி அலையும் ஒரு நரியை போல, பணத்தை தேடும் ஒரு அரசியல் வாதியை போல, மரத்தை தேடும் ஒரு குரங்கை போல, இறை தேடும் ஒரு பறவையை போல...
சீக்கிரம் உன்னை நெருக்கி விடம்  ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன் என் கல்லறையே!!!
-Sun Muga-
23-11-2013 23.17 PM

November 20, 2013

Office பேய்கள்

இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. கிட்டத்தட்ட ஒரு MNC கம்பெனி மாதிரியான ஒன்னுன்னு நினைவில் வைத்துக்கொள்ளலாம். எப்பவும் போல ரெம்ப எதாற்தமா தான் ஆபிஸ் வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. திடீரென்று பார்த்தா ஒரே பேய்கள் அட்டகாசம். காலைல வந்து ஆபிஸ்-ல பார்த்த பேப்பர் எல்லாம் கீழ கிடக்கும். கம்ப்யூட்டர் எல்லாம் ஆன் ஆகி இருக்கும். டேபிள்- ல இங்க் கொட்டி இருக்கும். அப்படி இப்படின்னு டெய்லி நடந்து கிட்டு இருந்தது.

இப்படியே போக போக ஆபிஸ் -ல எல்லாரும் Complaint பண்ண ஆரம்பிச்சாங்க... இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு ஒரு மீட்டிங். அப்பதான் ஒரு ஆளு கிண்டலா பேசாமா அந்த பேய்களையும் வேலைக்கு வச்சுகிட்டா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ன்னு சொல்லி சிரிச்சாரு...

MD  கொஞ்சம் யோசனைக்கு பின்னாடி, உடனே அந்த பேய்கள் எல்லாம் கூப்பிட சொன்னாரு. இதோ பாருங்க இது நாங்க தொழில் பன்ற இடம் இங்க வந்து இவ்ளோ அட்டகாசம் பன்னா நாங்க என்ன பன்ன முடியும். வேனும்மானா உங்களுக்கும் இங்க வேலை போட்டுக் கொடுக்கிறேன். அதுக்கு ஏத்த சம்பளமும் கொடுக்கிறேன். ஆனா இந்த மாறி தொல்லையெல்லாம் பன்னக் கூடாது. அப்படின்னு சொன்ன உடனே அந்த பேய்களும் வேலைக்கு ஜாயின் பன்ன ஓகே சொல்லிருச்சு. அந்த நிமிடமே Appointment letter ரெடி... ஜில் ஜில், ஜகன்மோகினி , ராட்சசி, விடாது கருப்பு அப்படின்ற பெயர்களில்.. சொன்ன மாதிரி எல்லாரும் வேலைக்கு ஜாயின் பண்ணி ஒழுங்காக வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. அப்படியே ஒரு மாதம் முடிந்தது. So முதல் மாத சம்பளம். இந்த பேய்கள் எல்லாம் முதல் மாத சம்பளத்தில் ஒரு பார்ட்டி ஒன்னு ஏற்பாடு பன்னாங்க.. அப்ப தான் ஒருத்தன் வந்து MD காதுல ஏதோ சொன்னான்.

உடனே MD ரெம்ப கோபமாக, பேய்களோட டீம் லீடரை கூப்பிட்டு, இரண்டு Workers இரண்டு நாளா காணும். எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னாரு. லீடர் உடனே நிச்சயம் நாங்க இல்ல. நாங்க இப்போது எல்லாம் ரெம்ப மாறிட்டோம். அப்படி சொல்லிட்டு தன்னோடு கூட்டத்தை தனியா கூப்பிட அவங்களுக்கு உள்ள ஒரு சின்ன மீட்டிங். ஆரம்பத்திலேயே லீடர், யார் இத செய்தது. எனக்கு நல்ல தெரியும் நம்ம கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் தான் இத செஞ்சு இருக்கனும். உடனே ஒரு பேய் நான் தான் நேத்து நைட் ரெம்ப பசி அதான்  ரெண்டு பேர சாப்பிட்டேன், அப்படின்னு ரெம்ப பயத்தோடு சொல்லுச்சு. உடனே லீடர், அடே!! எத்தனை முறை சொல்லிருக்கிறேன். எப்பவுமே வேலை பார்க்கிறவுங்க மேல கை வைக்ககூடாதுன்னு. இதுக்கு முன்னாடி எத்தனை மேனேஜர் நம்ம அடிச்சு சாப்பிட்டுருக்கிறோம். எவனாது தேடுனானா? இப்ப பாரு விஷயம் ரெம்ப பெருசா இருக்கு. சரி சரி இனிமேல் இப்படில்லாம் செய்யாதே அப்படின்னு சொல்லி மீட்டீங் முடிச்சு வைத்தது.

November 17, 2013

First Love

என்னவள் பெயர் ;

ஒரு பூவை எந்த பக்கம்
இருந்து பார்த்தாலும்
அழகு தான்,
அதுபோல,
முன்னும் பின்னுமாக
அழகான பெயர்
அவளைப் போன்றே!!!

அவள் விரலின் ஏக்கம்;

அவள் விரல் நுனியில்
கண்ணீரை கண்டேன்,
அவள் இதழை விட்டு
பிரியும் தருணத்தில்...

அழகான இமை;

அவள் இமைக்கும்
நொடியை கூட
எண்ணி விடலாம்,
ஆனால் அவள் இமை
இசைக்கும் வார்த்தையை
மட்டும் கணக்கிட முடியாது..

என்னுடையவள் உடை;

அவள் பாரம்பரிய
உடையை கூட
உடுத்திக் கொள்ள
கூச்சப் படுகிறாள்,
எங்கே கட்டி அனைத்து
விடுமோ என்று,
அது என் மேனியைப்
போல் கருமை
என்பதால்...

உயிர்;

என் உயிர் அவள்
என்று என்னால்
வர்ணிக்க முடியவில்லை,
ஏன் என்றால்,
என்றோ ஒரு
நாள் பிரிந்து விடும்
என்பதால்...

கடிதம்;

நடுங்கிய கையோடு எழுதினேன்,
என் முதல் காதல் கடிதம்.
என்ன எழுதுவது
என்று தெரியாமல்,
இன்றும் தெரியவில்லை,
என்ன எழுதினேன் என்று!!

கனவு;

என் கண்கள் கனவுகள்
நிறைந்தது,
மனதில் நினைவுகள்
மலர்கிறது,
நினைவுகளை திரும்பி
பார்க்கும் போது தான்
கண்ணீர் அலையாக
வருகிறது.
என் கண்ணீர் அலைகள்
அவள் தங்கப் பாதங்களை
தழுவ வேண்டும் என்று
பலமுறை படையெடுத்து
தோற்றுப்போய் திரும்புகிறது
அவள் கரையில்
நிற்கும்போது..

என் காதல்;

காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடினேன்,
அது "நீ" மட்டுமாக
பிரதிபலிக்கிறது.
"நீ" என்ற சொல் "நான்"
ஆக மட்டுமே இருக்கிறது
இன்று வரை..
"நீ" = காதல்

கல்லூரிக் காலம்;

விடிந்தால் உன்னைக் கான,
சூரியனை விரல் பிடித்து
அழைத்து வந்தேன்
விடியல்காக...

உன்னைப் படிக்க தினமும்
வருகிறேன் கல்லூரிக்கு
என் பெற்றோரை
ஏமாற்றிவிட்டு..

நீ சிரித்தாலும் முரைத்தாலும்
சிரிக்கிறேன் நான்..

திரும்பி திரும்பி பார்க்கிறேன்
நீ திரும்பிய இடம் எல்லாம்
என்றோ ஒரு நாள்
நீ என்னை
திரும்பி பார்பாய் என்று..

நீ நடந்துபோன பாதையை
பார்க்கிறேன் உன்
பாதச் சுவடை விட என்
பாதச் சுவடு அதிகமாக
தெரிகிறது உனக்காக
காத்திருந்தால் என்னவோ!

எத்தனை பனிக்கட்டிகள்
உருகினவோ
உனக்காக காத்திருந்த
வேளையில் Ice கடையில்..

பேருந்தில் நீ தடுமாறி
விழுந்ததால் நானும்
தடுமாறினேன் காதலில்
அந்நொடி முதல்..

தனிமைச் சிறையில்
ஆயுள் தண்டனை
கைதியாக அலைகிறது
மனது உன்னை
காதலித்த குற்றத்திற்காக ...

கொட்டும் மழையை
அன்று தான் ரசித்தேன்
மழைக்காக நீ
ஒதுங்கிய சிறு நொடி
என் கண்கள் பட்ட
சந்தோஷத்தில்..

நான் செய்த சாதனை
நமக்கு மட்டுமே தெரியும்
உன்னை மட்டும்
படித்து பாஸ் ஆனேன்
DMOP

வெற்றுக் காகிதத்தில்
கவிதை எழுதினேன்
தேர்வின் போது..

என் பேனாவில் கண்ணீர்
விட்டு எழுதுகிறேன்
என் கவிதையைப் பற்றி
கவிதை,
எங்கே "மை" க்கு
பற்றாக்குறை ஆகிவிடும்
என்பதால்..

உன்னை பின்னோக்கி
வந்த கால்கள்
இன்று பின்னோக்கியே
செல்கிறது உன்
சந்தோஷத்திற்காக..

வாழும் வாழ்க்கை
உன்னோடு இல்லை
என்றாலும் வாழ்ந்த வாழ்க்கை
உன்னோடு மட்டுமே!!
என் கண்களோடு "நீ"
இருப்பதால்
என்னோடு என் "உயிர்"
இருக்கிறது..

இந்த உயிர் மூச்சும்
திகைத்தது
உன் அழகை கண்டு,
உன் வீட்டுத் தெருமுனையில்
அந்நொடி என்னையும்
அறியாமல்
உன் செங்கருங் கூந்தல்
வாசனையை சுவாசித்து
விட்டேன்,
என்னை மன்னித்து விடு

என்னையும் அறியாமல்
என் கருவிழி உன்
நெஞ்சை வருடி
இருந்தால் என்னை
மன்னித்து விடு..

அவ்வப்போது என் கண்ணீர்
துளிகளுக்கும் விடை
கொடுக்கிறேன்
என்னவள் என்னோடு தான்
இருக்கிறாள் என்று!!

என் இதயத்தில் வலி
வழியும் போதெல்லாம்
விழி வழி உன்
இதழ்களை கவ்விக்
கொள்கிறேன்..
வலியும் வெட்கப்பட்டு
ஓடி விடுகிறது...

விழி மூடி நன்றாக
நான் உறங்குகிறேன்
கரு விழியாக
என்னுள் நீ
இருப்பதால்..

உன்னைப் போல்
பிணிக்கும்(நோய்க்கும்)
என்னை பிடிக்கவில்லையாம்
உன்னை நினைத்து
நினைத்து சிரித்துக்
கொண்டே இருப்பதால்..

கருமையாக தெரியும்
ஒவியம் "நீ"
உடையோடு இருப்பதால்
உன் உடையின் ஒரு
நூலாக பிறந்து இருந்தால்
கூட சற்று அதிகமாக
நேசித்து இருப்பாய்..

வளர் பிறையான உன்
முகத்தை கான
சூரியனாக காத்திருக்கிறேன்
ஆனால் "நீ" என் விழியின்
ஒளி மீது தான்
நடந்து செல்கிறாய்! தினமும்

-Sun Muga-
2010

November 15, 2013

இதயம் 2 இதயம்

ஒரு சிறு கற்பனை நான் காதலனாக..
அவளின் பெயர் அநேகமாக காதலியாக தான் இருக்க முடியும். ஏன் என்றால் என் கண்களுக்கு அவள் அழகாக தெரிகிறாள். அவளின் குரல் மட்டுமே என் காதுகளுக்கு கேட்கிறது. அது மட்டும் அல்ல அவளின் பார்வை அவ்வப்போது என்னையே தொட்டுப் பார்க்கிறது. அதனால் தான் அவளிடம் அவள் பெயரையே கேட்கவில்லை.
காதலி ஒரு நாள் தனியாக வந்தாள். அதாவது தனியாக வருவதற்கு என்று அன்று தயாராகி வந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாள். இது என்ன சிரிப்பு? சிரிப்புகளிலே இது தான் சிறந்ததோ!!! யோசிக்கவில்லை பேசிக் கொண்டாள் விழியால். மெல்லப் பேசு என்கிறது அவளது இதழ். நாளை பார்க்கலாம் என்கிறது கால்விரல். தள்ளிப் போகாதே என்கிறது கைவிரல். இரண்டிற்கும் வாக்குவாதம். கண்கள் காதலில் தவித்து, இறுதியில் கால் விரல் ஜெயித்தது. உன்னை நாளை பார்த்துக் கொள்கிறேன் என்று கோபத்தோடு உஷ்ணம் ஏற சென்றது கைவிரல்.
இரவு நெருங்க நெருங்க அப்படி ஒரு படபடப்பு இதயத்தில். என் காதலி என்னை தான் நினைத்துக் கொண்டு இருப்பாளோ என்று? அய்யோ இல்லை இல்லை ஏங்கிக் கொண்டு இருப்பாளோ? என்று. அங்கே காதலியும் கண்களை மூடினால், இதயத்தின் ஓசை சத்தம் மெதுவாக குறைந்தது. ஓ!! அவள் மெல்ல பேசுகிறாள் போல!! வீட்டில் அப்பா, அம்மாவிற்கு கேட்கும் இல்லையா அதான்.. மெல்லச் சிரித்தாள் கண்களை மூடியபடி, அவன் கண்களை பார்த்து, மறுகணம் சிரித்துக் கொண்டே கேட்டாள், ஏன் "கை" நடுங்குகிறது என்று. ஒரு பயம். ஆம்பளைக்கு என்ன பயம்? உன் காதில் சொல்ல வேண்டும். "ம்ம்ம்" சொல்லு. பயம் என்று நான் சொன்னால் என்னை கட்டி அனைத்துவிடுவாயா? இல்லையா? ஏன் இந்த கேள்வி இப்போது? பதில் வேண்டும். இப்போது இல்லை. திருமணத்திற்கு பின் வேணும்னா!! யோசிக்கலாம். ஓ!!! அப்படியா? உனக்கு பயமாக இல்லையா? ஏன்? என்னோடு தனியாக பேசுவதற்கு. நான் தனியாக பேசவில்லையே? உன்னோடு தானே பேசுகிறேன். என்ன காமெடியா? இல்லை என் அன்புக் காதலா!! நான் என் காதலனோடு, என் காதலோடு தான் பேசுகிறேன் அப்புறம் என்ன? அது சரி. நாளை எங்கு சந்திக்கலாம்? நாளை என் வீட்டில் யாருமே இல்ல.. நீ இங்கேயே வந்துரு... ஏய் என்ன சொன்ன? உங்க வீட்டுக்கா?? ஆமாம் என்றாய் சந்தோஷத்தோடு...
மறுநாள் என் பட்டாம்பூச்சியின் கூட்டுக்குள் சென்றேன். என்ன ஒரு அழகு. அவளும் அவள் இருப்பதால் அந்த அறையும். அதிகாலை சூரியன் ஒளிப் பட்டு தெரித்த ஒளிக்கதிர் இன்னும் இருக்கும் போல அப்படி ஒரு பிரகாசம் அந்த அறையில். என்னைப் பார்த்து ஒரு புன்னகை. கை கோர்த்தப் படி "ம்ம்ம்" எப்படி இருக்கு? என்றாள் அவள். ரெம்ப மிருதுவாக இருக்கு என்றேன். ஏய்!! என்ன? என்றாள். உன் கை விரல் என்றேன். இப்பொழுது கண்கள் சிரித்தது. மெல்ல மெல்ல அவள் மார்பும் ஒரு கனத்த சிரிப்போடு என்னை நோக்கி சரிந்தது.
சரி ,சரி முதல் முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்க. என்ன வேண்டும் என்று கேட்டாள். ஒரே ஒரு முறை கண்களை மூடியபடி உன் கைவிரல்களை தீண்ட வேண்டும் என்றேன். ஏன் என்றாள். நம் காதலின் மென்மையை கை விரலும், கண்களும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்றேன்.
அந்த நொடி உன்னோடு
நான் எழுதிய வரிகள் ;
கண் அல்ல உனக்கு
இருப்பது பெண்ணே!
ஒரு காகிதம்
நான்
சிந்தித்த கவிதைகள்
அனைத்தும் அதில்
பிரதிபலிக்கப்பட்டுள்ளது..
உன் மோதிர விரலை
தடவிப் பார்த்தபோதே
இத்தனை மோகம்
என்றால்?
இன்னும் உன்னுள்
எத்தனை?????
-Sun Muga-
15-11-2013 23.50 PM