வாழ்க்கை என்பது ஓர் அனுபவம் என்று நான் இன்று படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் படிக்கிறேன். ஆனால் நீங்கள் தான் வாழ்வுக்கான அர்த்தத்தை மெளனமாகவே பரிமாறிக் கொண்டே இருக்கிறேர்கள் இந்நாள் வரை.
என் தாயையும் தாய் போல் கவனிக்கும் தந்தை நீங்கள் , உங்களின் உயிர் துளியில் பிறந்த நாங்கள் ஐவரும் இன்று உங்கள் வேர்வைத்துளியில் வளர்கிறோம். நீங்கள் படித்ததை இது வரை பரைசாற்றியது இல்லை,ஆனாலும் எங்களை படிக்க வைத்தீர்கள்.
உங்கள் இடைவலியில் கூட இடைவிடாமல் உங்கள் வேர்வைத் துளியால் எங்களை வளர்க்கிறேர்கள்.
எங்களின் உதிரம் கூட போதாது உங்களின் பாதம் கலுவுவதற்க்கு.
எங்களது மார்பை சேர்த்து அணைக்கவில்லை என்றாலும் மனங்களில் சேர்த்து அணைக்கிறேர்கள் ஒவ்வொரு முறையும்.
காலைச் சூரியன் கூட பின் தொடர மறந்தாலும் நிழல்லாக பின் தொடர்கிறேர்கள் ஒவ்வொரு நாளும்.
தண்ணீரில் ஊறிய சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டாலும் எண்ணெயில் ஊறிய சாப்பாட்டை உண்ண சொல்கிறேர்கள்.
எந்த நாள் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன், உங்கள் உழைப்புக்கு விடுமுறை கொடுக்க.
இது நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிந்து இருக்கும். நிலவின் ஒளியில் நெற்கள் உளரப் போடும் அந்த நெற்களத்தில் எங்கள் மூவருக்கும் புத்தகம் மற்றும் புது நோட்டுகளுக்கு ப்ரோன் கலர் அட்டை போட்டு கொடுத்தீர்கள். என் மனதில் இருந்து அந்த இரவு மறைய மறுக்கிறது. ஒரு வேலை நிலவின் ஒளியில் உங்களை நான் கண்ட முதல் இரவாக கூட இருக்கலாம்.
நான் ஏதோ எழுதுகிறேன் என்று எனக்கு தெரியும். முதன் முதலில் நான் எழுதியதை உங்களுக்கு காட்டியவுடன் படிக்க ஆரம்பித்தீர்கள். நான் உங்கள் முகத்தை பார்க்கவே இல்லை. ஒரு கூச்சம் தான். ஆனால் நீங்கள் சிரித்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் அது சிரிப்பு இல்லை பூரிப்பு.. நான் எழுதி நீங்கள் வாசித்த முதல் தொகுப்பு.
ரைஸ்மில் (1955)to டியூசன் செண்டர் (2013)
ABC பாரம் ஸ்ரீ ராஜேஸ்வரி ரைஸ்மில்
இது தான் இந்த இடத்தின் பெயர் என்று எனக்கே லேட்டாக தான் தெரியும். ஆனால் இப்பொழுது Achiever Coaching Centre என்ற பலகை. இது ஒன்றும் ஒரு எழுத்துக்களால் ஆன ஒரு பலகை மாற்றம் இல்லை. அதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மாற்றம் என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.
தன் விளைநிலங்களை விற்று வித விதமான வீடுகளைகட்டி வாழ்ந்து வரும் மனிதர்களின் குழந்தைகள் தான் இன்று பயில்கின்றனர் இந்த டியூசன் செண்டரில்.
நெல்மூட்டைகள் போய்
புத்தக பை மூட்டைகள்,
நெற்கள் உளறிய களம் போய்
பிள்ளைகள் உலரும் களம்,
தனிமையில் தவிக்கும் தள்ளுவண்டி,
உம்மியை நெருப்பிற்க்கு
இறையாக்கி வென்புகையை
வெளியேற்றிய புகைக்கூடும்
இன்று வெறும் எலும்பு கூடு,
செங்கதிர் வெயிலில் ஆடிய
இடமும் இன்று வெறும்
செங்கற்கள் தான்.
காரணம்
ஒரு காலத்தின் மாற்றம்...
அப்பா,
நீங்கள் பலகை பிடித்த
தோரணை இன்றும்
என்னை தொந்தரவு
செய்கிறது...
தொட்டியில் நெல் அளந்து
போடும் போது நீங்கள்
எண்ணிய எழுத்துக்கள் (1,1, 2,2,3, 3) இன்றும் என் எண்ணங்களில்..
தொட்டியில் நனையும்
நெற்கள் கூட ஒரு பகல் தான்
நனையும் ஆனால் நீங்கள்
ஆயும் முழுதும் நனைந்து
விட்டீர்கள் வேர்வைத் துளியில்..
கொழுத்தும் வெயிலும்
கொட்டும் மழையும்
பார்த்திராத என் அப்பாவை
நான் பார்ப்பது என் அதிஷ்டம்.
பிறவி குணம் மாறாமல்
பிள்ளைகளை வழிநடத்தும்
பேச்சியம்மா ஒரு பொக்கிஷம்.