April 19, 2015

2015 கவிதைகள் 671 to 680

நீல மேகங்கள்
நின்று பார்க்கும்
நீ என்னை
தொடும் போது
நீண்ட மேகங்கள்
கொட்டி தீர்க்கும்
நீ என்னை பிரிந்து
வாடும் போது.....             671

இதுவரை
நிறைவேறிய ஆசை
ஒன்றே ஒன்று தான்
உன்னோடு கை கோர்த்து
அந் நிலவை ரசித்தது...   672

என் கன்னங்களில்
இன்னும்
மிச்சம் இருக்கிறது
உன் கண்கள்
தந்த முத்தங்கள்....        673

ஆள் உயர
கண்ணாடியில்
அழகு பார்த்தேன்
என் இதழை மட்டும்
இனியவனே!
அது உனக்கு பிடித்த
இடம் தானே அதனால்!... 674

காதல் அருவிகள்
கொட்டும்
உன் முந்தானையில்
நான் மோதும் போது...    675

உன் காலடி
தேடியே ஓடுகிறது
என் காதல் நதி!
காலங்களை மறந்து...   676

கதிர் உதிரும்
காலத்தில்
குருவி கொத்தும்
கதிரைப் போல
காலங் கடந்தும்
இக் குருவி
சேகரிக்கிறது
இக் காதல் கதிரை!!        677

குளிர் உடை
போதுமா?
இக்காதல் குளிரை
சமாளிக்க!
உன் மெல்லிடை கொடு
நானும் கொஞ்சம்
குளிர் காய்ந்து கொள்ள...  678

என்
அத்தனை இரவுகளுக்கும்
வெளிச்சம் நீ!!           679

உணர்வற்று
உறங்கி கிடக்க வேண்டும்
காலை விடிந்த பிறகும்
உணர்ச்சி மிகுந்த
உன் இரவு முத்தத்தால்...  680

No comments:

Post a Comment