April 27, 2015

கடைசி அழுகை

மெளனத்தின்
எல்லையை கடந்து
என்னிலிருக்கும்
அழுகை மொத்தத்தையும்
மொத்தமாக
உன் பாதத்தில்
இறக்கி விட வேண்டும்

என் இறப்பை
எதிர் நோக்கி
காத்திருக்கும் விழியின் வழி

விழி மூடும் போது
மெளனமே
என் உடலோடு
என் உள்ளத்தை நிரப்ப
வேண்டும்

நெருங்கும் நெருப்பின்
நிறம் கூட
மெளனத்தில் வடியும்
கண்ணீரின் நிறமாய்
நிறைய வேண்டும்...

எரிந்த
என் உடல்
சாம்பல் நிறமாக மாறி
நெருப்பின் உக்கிரம்
கலந்து காற்றினிலே கூட
கண்ணீராய் கரைந்து
உருகி விட வேண்டும்....

-SunMuga-
27-04-2015 21.32 PM

No comments:

Post a Comment