மெளனத்தின்
எல்லையை கடந்து
என்னிலிருக்கும்
அழுகை மொத்தத்தையும்
மொத்தமாக
உன் பாதத்தில்
இறக்கி விட வேண்டும்
என் இறப்பை
எதிர் நோக்கி
காத்திருக்கும் விழியின் வழி
விழி மூடும் போது
மெளனமே
என் உடலோடு
என் உள்ளத்தை நிரப்ப
வேண்டும்
நெருங்கும் நெருப்பின்
நிறம் கூட
மெளனத்தில் வடியும்
கண்ணீரின் நிறமாய்
நிறைய வேண்டும்...
எரிந்த
என் உடல்
சாம்பல் நிறமாக மாறி
நெருப்பின் உக்கிரம்
கலந்து காற்றினிலே கூட
கண்ணீராய் கரைந்து
உருகி விட வேண்டும்....
-SunMuga-
27-04-2015 21.32 PM
No comments:
Post a Comment