April 16, 2015

2015 கவிதைகள் 611 to 620

சோகம் தீரும்
சோர்வும் தீரும்
சேலையில்
என் தேவதை
என்னில் தரும் முத்தத்தால்.. 611

உயிர்த்தெழும் புற்களில்
பூக்களாக பனித்துளி
நம் காதலை போல...    612

உயிர்த்தெழும் புற்களில்
பூக்கள் இல்லை
இருந்தும்
பசுமை இருக்கிறது
நம் காதலைப் போல...  613

என்னை நாடி வந்த
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகள்
நான் உன் இதழை
நாடி வந்த பிறகு தான்... 614

அளவான பற்றோடு
அதிகமாய் முத்தம் இடுகிறாய்
அடுக்கி வைத்த
புத்தகம் போல...           615

மெளனமாய்
நீ பேசும் இந்நேரத்தில்
மெளனங்களை கடந்து
மெளனமே பேசிக்
கொண்டு இருக்கிறது
உன் இதழ் வழி...     616

வளையல் குலுங்கும்
போதெல்லாம்
உன் முத்தத்தின்
இசையே கேட்கிறது
என் கைகளுக்கு...  617

உன் மேனி
உரசி உரசி
என் மேனி
கலர் (கருப்பாக)மாறுகிறது
காலையில்
நான் எழும் போது...  618

ஏதோ ஒரு
அழகு இருக்கத் தான்
செய்கிறது
உன் செவிகளுக்கும்
அதான்
தானாகவே வேலை
செய்கிறது என் இதழ் அதனுள்.. 619

இன்றென்னும்
இன்பத் தேரில்
உலா வரும்
அழகு தேவதை நீ
காதலின் பாதையில்... 620

No comments:

Post a Comment