என்னிலிருந்த
என்னை
என் எழுத்தால்
அழித்து
என்
காகித கவிதைகளை
அடுக்கி
என்
சிதைக்கு தீ மூட்டினேன்!
என்
மரணத்தின் தடயம்
தெரியக் கூடும்
என்ற பயத்தில்
உடை மட்டுமே
எரிந்த நிலையில்
நிர்வாணமாய்
என் எழுத்தை
நோக்கி ஓடினேன்
என் நிர்வாண
உடலைக் கண்டு
உறக்கமற்ற
இப்-பேய்கள் சிரிக்கும்
போது கூட
தோண்டியதும் கிடைத்த
ஒரு புதையலை போல
ஒரு கவிதை கிடைத்தது
இந்த இரவில்,
இந்த மெல்லிய
பேய்-காற்றில்,
இந்த அகண்ட மாயானத்தில்...
-SunMuga-
23-04-2015 20.52 PM
No comments:
Post a Comment