இழந்த என் தூக்கத்தை
நினைத்து
துக்கப் பட்டு
கொண்டு இருக்கிறேன்
தூக்கம் கலந்த
கண்களோடு
துயரம் நிறைந்த
நெஞ்சோடு
நீ இன்றி கருகும்
இவ்விரவை
தூக்கி எரிந்து விட
இன்னும் ஓர் கை
வேண்டும் என்றெண்ணி
நிம்மதியின்றி
வான் நிறைந்த நிலாவை
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...
எனது பார்வையில்
வளரும் வானம்
இன்னும் இன்னும்
பெரிதாகி கொண்டே
இருக்கிறது
என்னுள் ஆழ்ந்த
துயரம் போல...
No comments:
Post a Comment