உன்னோடு
இருக்கும் போது
என்னால் இயல்பாய்
இருக்க முடிவதில்லை
என் இதழால்
உன் இதழை
மூடாமல் இருக்கவும்
முடிவதில்லை... 551
வாசலின் திசைகள்
மாறிய போதும்
உன் காதல்
முத்தத்தின் இசைகள்
இன்னும் மாறவில்லை
நம் வீட்டில்.... 552
இரவும் காத்திருக்கிறது
கண்களை மூடி
நாம் இருவரும்
இன்னும் ஓர்
இரவுக்கு செல்ல .... 553
நம்
சில மெளனங்கள்
உடைகிறது முத்தங்களாக.. 554
உன்னோடு
அள்ளிக் குளித்த
நீரெல்லாம்
இன்று கண்ணீராய்
என் காலின் வழியே
வெளியேறுகிறது... 555
எதிர்வரும்
துயர் மிகுந்த
காலங்களை
நானும் கடக்கிறேன்
தூய்மையான
உன் கண்களின்
ஒளியை
என் கண்களில்
நான் சுமந்து... 556
காதல்
நீரின் சலசலப்பு
உன் காலின்
கொலுசு ஒலி.. 557
வார்த்தைகள்
இல்லாத இவ்விரவில்
கண்ணீரே வடிகிறது
உன்னை நினைத்து
கண்ணீராக
வார்த்தையே உதிர்கிறது.. 558
என்னை
இரவில் மலர்ச்
செய்யும்
இரவு சூரியன் நீ... 559
அந்தி அதிரும்
முத்தம் உதிரும்
உன் கண்கள் மிளிரும்
இவை தானே
உந்தன் சிறப்பு... 560
No comments:
Post a Comment